Jump to content

ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு நானோ அல்லது கட்சித் தலைமையகக் கட்டமைப்போ பொறுப்புக்கூற முடியாது


Recommended Posts

ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு நானோ அல்லது கட்சித் தலைமையகக் கட்டமைப்போ பொறுப்புக்கூற முடியாது.

ranil.jpg

தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக உரிய ஒத்தழைப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றேன்.

தேர்தலின் போது வடக்கு – கிழக்கு மாகாண பிரசாரப்பணியை நான் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், அம்மாகாணங்களில் உயர்ந்த வாக்குவீதத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு என்னால் முடிந்திருக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சிக்குக் காணப்பட்ட சிங்கள பௌத்த அடிப்படை இல்லாமல் போனமை தோல்வியில் தாக்கம் செலுத்தியிருப்பதாகவும், சரியான பௌத்த கொள்கையொன்றை ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாகவே முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலையகமான சிறிகொத்தாவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை இன்று சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:

எமது தரப்பின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நான் பரிந்துரைத்தேன். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, அதற்குரிய பணிகளை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவும், அதனைச் சார்ந்த கட்டமைப்பும் சரிவர மேற்கொண்டது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

பிரசாரப் பணிகளுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். அதற்கு நானோ அல்லது கட்சித்தலைமையகக் கட்டமைப்போ பொறுப்பல்ல. நாம் எமது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்களை வழங்கினோம்.

அதனடிப்படையில் நான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் பிரசாரப் பணியைப் பொறுப்பேற்றுக் கொண்டேன். அதற்கமைய அம்மாகாணங்களில் எமக்குச் சார்பான வாக்குவீதத்தை அதிகரித்துக் கொள்வதற்கு என்னால் முடிந்திருக்கிறது.

ஆனால் துரதிஷ்டவசமாக தெற்கில் எமக்கான வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. அது ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. சில மாவட்டங்களை எம்மால் வெற்றிகொள்ள முடிந்தபோதிலும் கூட, தேசிய ரீதியாக நோக்கும்போது நாம் தோல்வியடைய நேர்ந்தது.

கடந்த காலத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்தியமை, பாரியளவான அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்தமை, சட்டம் மற்றும் ஒழுங்கை ஏற்படுத்தியமை, சமுதாய சேவைகளை மேம்படுத்தியமை ஆகியவற்றின் மூலம் நாம் எதிர்பார்த்த பிரதிபலிப்பைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் அவற்றை விடவும் எமது கட்சிக்குக் காணப்பட்ட சிங்கள பௌத்த அடிப்படை இல்லாமல் போனமை தொடர்பில் முக்கிய அவதானம் செலுப்பட வேண்டும்.

இதற்கு முன்னர் இத்தகைய நிலையேற்பட்டதில்லை. எனவே இதுகுறித்து விசேடமாக ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும். இத்தருணத்தில் ஒருவர் மீதொருவர் குற்றஞ்சாட்டுவதன் மூலமும், கை நீட்டுவதன் மூலமும் இதற்குத் தீர்வு கண்டுகொள்ள முடியாது.

மாறாக சரியான பௌத்த கொள்கையொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு மாநாயக்க தேரர்களினதும் ஆசியைப் பெற்றுக்கொள்வதுடன், புதியதொரு ஐக்கிய தேசியக் கட்சி என்ற அடிப்படையில் முன்நோக்கிப் பயணிப்போம்.

இந்நிலையில் எதிர்காலம் தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்ளும் அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய்வொன்றையும் மேற்கொள்ள வேண்டும். அதனூடாகவே எம்மால் முன்நோக்கிச் செல்லமுடியும்.

அத்தோடு கட்சியின் தலைவர்கள் எவரும் பிரசாரத்திற்கான நிதிமூலம் தொடர்பான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அதுகுறித்த குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றேன்.

ஆகவே கட்சி என்ற வகையில் குற்றச்சாட்டுக்கள் பற்றி ஆராய்ந்து, அவை உண்மைக்குப் புறம்பானவையாக இருப்பின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.

மேலும் இத்தருணத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதுடன், புதிய தலைவர்களையும் நியமிக்க வேண்டியுள்ளது. தேர்தல் முடிவுகள் பற்றிய ஆராய்வின் ஊடாக புதிய கொள்கைகளை அவர்கள் முன்வைக்கவேண்டும். அதனூடாக எவ்வித அச்சமுமின்றி ஒன்றிணைந்து பயணிப்பதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கும்.

https://www.virakesari.lk/article/69497

Link to comment
Share on other sites

Quote

ஐக்கிய தேசியக் கட்சிக்குக் காணப்பட்ட சிங்கள பௌத்த அடிப்படை இல்லாமல் போனமை தோல்வியில் தாக்கம் செலுத்தியிருப்பதாகவும், சரியான பௌத்த கொள்கையொன்றை ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாகவே முன்நோக்கிப் பயணிக்க முடியும்.

Quote

எமது கட்சிக்குக் காணப்பட்ட சிங்கள பௌத்த அடிப்படை இல்லாமல் போனமை தொடர்பில் முக்கிய அவதானம் செலுப்பட வேண்டும்

இனவாதம் கக்காமல் இந்த பௌத்த அடிப்படை சாத்தியப்படுமா ?

இனிமேல் பௌத்த அடிப்படையை மாத்திரம் வைத்து வெல்லும் தந்திரத்தை பின்பற்றினால் வடக்கு கிழக்கு வாக்கு வங்கி UNPக்கு  இல்லாமல் போகக்கூடும் அல்லவா?

மாற்றுவழியில் ஏன் சிந்திக்கமுடியாது. எதட்காக ஒரு பல்லின சமூதாயம் மதம்/இனம்  இல்லாமல் தேர்தலை வெல்ல முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளது ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.