Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

CID அதிகாரிகள் 704 பேர் வெளிநாடு செல்ல தடை

Featured Replies

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் 704 பேர், இன்று (25) முதல் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு - குடியகல்வு பிரிவுக்கு, குறித்த திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ஊழியர்களின் பெயர் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பெயர் பட்டியில் இன்று (25) அதிகாலை விமான நிலையத்தின் குடிவரவு - குடியகல்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், பெயர்களை கணினி மயப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, தமது திணைக்களத்துக்கு அறிவிக்காமல் குடும்பத்துடன், நேற்று (24) பிற்பகல் 12.50 மனிக்கு சுவிட்ஸர்லாந்து சென்றபின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/CID-அதகரகள-704-பர-வளநட-சலல-தட/150-241491

 
3 minutes ago, ampanai said:

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, தமது திணைக்களத்துக்கு அறிவிக்காமல் குடும்பத்துடன், நேற்று (24) பிற்பகல் 12.50 மனிக்கு சுவிட்ஸர்லாந்து சென்றபின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நல்ல காலம் அந்த மனுஷன் கொலைகாரக் கூட்டத்திடமிருந்து தப்பிட்டுது.

வித்தியா வழக்குல சிறப்பா செயற்பட்ட மனுஷன்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரையும் போட்டுத் தள்ளப்போறாரோ? இல்லை, முந்தி வடக்கில் பயணப் பாஸ் எண்டு ஒண்டு கொண்டுவந்து தமிழ் இளைஞரை  ஓடித் தப்பவிடாமல் டக்கியின்ர ஆட்களும், கோத்தாவின்ர கூலிப்படையும் வகை தொகை இல்லாமல் போட்டுத் தள்ளினவை. தடை எண்டதும்  அந்த ஞாபகம் வருகுது.   போன மனுஷன் கோத்தாவின்ர எல்லா குட்டுகளையும் அவிழ்த்து விடவேணும். இருக்கிறவை நாளை எண்ணிக்கொண்டு ஆயத்தமாய் இருக்கவேண்டியதுதான். 

  • தொடங்கியவர்

சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணை அதிகாரி நிஷாந்த டிசில்வா தப்பியோடியமைக்கான காரணம் இதுதான் - விமல்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான தூண்டுதல்கள் மற்றும் இராணுவத்தினர் சிறையிலடைக்கப்பட்டமைக்கு குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வா பிரதானமானவராவார். இதனாலேயே அவர் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார் என்று சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல்  முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 

அமைச்சில் இன்று உத்தியோகபூர்வமாக கடமையேற்றுக் கொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெரும்பாலான மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். பெரும்பாலான சிங்கள மக்களும் சிறியளவு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் எமக்கு வாக்களித்திருக்கின்றனர். அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு நாம் முழுமையாக பாடுபடுவோம். கடந்த நான்கரை வருடங்களைப் போன்றல்லாது புதிய பாதையில் செல்ல அனைவரும் ஒன்றிணைவோம்.

அத்தோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வாக்குறுதியளித்திருக்கிறார். அந்த பொறுப்பையும் நிறைவேற்றுவோம் என்றும் அவர் இதன்போது கூறினார்.

https://www.virakesari.lk/article/69685

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.