Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? : தலதா கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார்கள்.

Thalatha-Atukorale.jpg

அவ்வாறு கூறி ஆட்சிபீடமேறியவர்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலா அமைந்திருக்கின்றன? சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நல்லாட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு நாட்டுமக்கள் 2015 ஆம் ஆண்டில் எமக்கு ஆணை வழங்கினார்கள். கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுப்பதுடன், நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்பதே மக்கள் எமக்கு ஆணையை வழங்குவதற்கான பிரதான காரணமாக இருந்தது.

அதன்படி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தைக் குறைத்து, அதனைப் பாராளுமன்றத்திற்குப் பெற்றுக்கொடுத்தோம். நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தியதுடன், சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தோம். 

பொலிஸ் திணைக்களத்திற்கு எந்தவொரு அழுத்தங்களையும் வழங்காத அதேவேளை, அவர்களுடைய விசாரணைகளின் தலையீடு செய்யாத ஒரே அரசாங்கம் எம்முடையது மாத்திரமே என்பதை இப்போதும் உறுதியாகக் கூறமுடியும். 

19 ஆவது திருத்தத்தின் ஊடாக அமைக்கப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூலமாகவே இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிகவும் அமைதியானதும் ,நியாயமானதுமான முறையில் இடம்பெற்று முடிந்திருக்கிறது.

எனினும் தற்போது அந்த 19 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தில் சிலர் கூறிவருகிறார்கள்.

அதேபோன்று புதிய அரசாங்கம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த ஷானி அபேசேகர சுமார் 10 வருடகாலம் அப்பிரிவில் பணியாற்றியவராவார்.

நீண்டகாலம் அனுபவம் என்பது ஒருபுறமிருக்க அவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கும் பெருமளவான அரசநிதி செலவிடப்பட்டிருக்கும். அவ்வாறிருக்க தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவு தொடர்பில் எவ்வித விளக்கமும் இல்லாத ஒருவரை அதன் பிரதானியாக நியமித்திருக்கின்றார்கள்.

அதுமாத்திரமன்றி 704 குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதித்திருக்கும் நிலையில் சட்டமாதிபர் திணைக்களத்தின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணை செய்வதிலும் இடையூறுகள் ஏற்படும். 

நாட்டில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார்கள்.

அவ்வாறு கூறி ஆட்சிபீடமேறியவர்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலா அமைந்திருக்கின்றன? சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம்.

https://www.virakesari.lk/article/69961?fbclid=IwAR0WsMsWQpdGst8MSZzuTwHOkBBgv9vf5h5xbHMy5R5pq3TvjLBXa8fcjE0

4 hours ago, பெருமாள் said:

சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்?

நல்ல கேள்வி!

சொறிலங்காவுக்கு ஆதரவா நின்ற சுவிஸ் செய்த வினைகளுக்கு விளைவுகளை சந்திக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Rajesh said:

நல்ல கேள்வி!

சொறிலங்காவுக்கு ஆதரவா நின்ற சுவிஸ் செய்த வினைகளுக்கு விளைவுகளை சந்திக்குது.

பிரச்சனை வேறு விதமாக திரும்ப போகின்றது போல் உள்ளது இனி கோத்தவுக்கு பயம் என்று நிறைய சிங்கள கூட்டம் ஐரோப்பிய நாடுகளில் அசேலம் அடிக்க போகினம் அப்படி வருபவர்களில் கோத்தவின் வெள்ளைவான் கூட்டமும் உள்ளே வர சந்தர்ப்பம் உண்டு டபுள் ஏஜென்டாக .

1 hour ago, பெருமாள் said:

பிரச்சனை வேறு விதமாக திரும்ப போகின்றது போல் உள்ளது இனி கோத்தவுக்கு பயம் என்று நிறைய சிங்கள கூட்டம் ஐரோப்பிய நாடுகளில் அசேலம் அடிக்க போகினம் அப்படி வருபவர்களில் கோத்தவின் வெள்ளைவான் கூட்டமும் உள்ளே வர சந்தர்ப்பம் உண்டு டபுள் ஏஜென்டாக .

அங்கை யுத்த குற்றம் செய்த கனபேர் மேற்கத்திய நாடுகளில் இரட்டை   பிரஜாவுரிமை எடுத்து வாழ்கிறார்கள். மனித உரிமை எல்லாம் பேச்சுக்கு தான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, puthalvan said:

அங்கை யுத்த குற்றம் செய்த கனபேர் மேற்கத்திய நாடுகளில் இரட்டை   பிரஜாவுரிமை எடுத்து வாழ்கிறார்கள். மனித உரிமை எல்லாம் பேச்சுக்கு தான் 

எல்லாம் சுமத்திரன் போன்ற ஆட்காட்டிகள் இருக்கும்மட்டும் மனித உரிமை பேச்சுக்குத்தான் இருக்கும் நண்பரே .

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சனைக்கெல்லாம் உடனடி தீர்வு அமெரிக்கன் கையிலை இருக்கு. இதுவரை கிடப்பில் போடப்பட்டிருந்த கோத்தாவின் பிரஜாவுரிமை விலகல் விண்ணப்பத்தை பரிசீலிக்க தொடங்கியிருக்கிறோம் என்று அமெரிக்க குடிவரவு குடியகல்வு அமைச்சு ஒரு அறிக்கை விட்டாலே போதும் கோத்தாவின் கதை கந்தலாகிவிடும்.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.