Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் யார் என்று எம்மால் கூற முடியாது; ஆனால் தற்போது குறைந்துள்ளது -திஸ்ஸவிதாரண

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் யார் என்று எம்மால் கூற முடியாது; ஆனால் தற்போது குறைந்துள்ளது

ஆட்களை கடத்துபவர்கள் யார் என்று எங்களால் கூறமுடியாது. ஆனாலும் கடந்த ஒரு மாதகாலமாக காணாமல் போதல் மற்றும் ஆட்கடத்தல் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண சபையில் தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்:

ஆட்கடத்தல், காணாமல் போதல் மற்றும் இடம்பெயர்வுகள் தொடர்பாக நாங்கள் கவலைப்படுகின்றோம். இருந்தாலும் ஆட்கடத்தல் கடந்த மாதம் குறைவடைந்துள்ளது. அரசாங்கம் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆட்களை யார் கடத்துகின்றனர் என்று எங்களினால் கூறமுடியாது.

ஐக்கிய தேசியக்கட்சியிடம் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன். சர்வகட்சி ஆலோசனை குழுவின் கூட்டத்திற்கு சமுகமளிக்கவேண்டும்.

உங்கள் யோசனைகளையும் சமர்ப்பியுங்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐ.தே.க.வும் இணங்கினால் தீர்வு யோசனைகளை நடைமுறைப்படுத்த முடியும். அதன் மூலம் தமிழ் மக்களும் எங்களில் நம்பிக்கை வைப்பார்கள்.

அப்போதுதான் விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்த முடியும். அதற்காகத்தான் சர்வகட்சி ஆலோசனைக்குழுவை கூட்டி ஆராய்ந்து வருகின்றோம்.

ஜே.வி.பி.யினர் கூட்டங்களில் கலந்துகொண்டுவிட்டு பின்னர் விலகிச் சென்றுள்ளனர். 13 அரசியல் கட்சிகள் இந்த குழுவிலே பங்கு கொண்டுள்ளன. எனவேதான் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வாருங்கள்.

-வீரகேசரி

வெள்ள வான்ல கடத்தினவை

இப்ப தங்களையே காப்பாற்ற முடியாமல் ஓடுகினமெல்லே :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரையும் கடத்தி முடிச்சப்புறம்..கடத்தறதுக்கு ஆளே இல்லாங்காட்டியும்..

கடத்தல் குறையத்தானே செய்யும்...?? :angry:

கடத்தினவுங்க எல்லாத்தையும் விடுதலை பண்ணிட்டு, மீண்டும் ஒருமுறை கடத்தச்சொல்லுங்கோ!!

ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் யார் என்று எம்மால் கூற முடியாது; ஆனால் தற்போது குறைந்துள்ளது

ஆட்களை கடத்துபவர்கள் யார் என்று எங்களால் கூறமுடியாது. ஆனாலும் கடந்த ஒரு மாதகாலமாக காணாமல் போதல் மற்றும் ஆட்கடத்தல் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண சபையில் தெரிவித்தார்.

ஆட்களை கடத்துபவர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்வதே இதற்கான காரணமோ?

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் இளைஞர்களைக் கடத்திக் கொண்டு போய் கொலை செய்த பின்னர் எவ்வாறு இப்படித் திருப்திப்படுகின்றார்? கடத்திச் செல்லப்பட்ட உயிர்களின் கதை அவ்வளவு தானா? கடத்திச் செல்லப்பட்ட தமிழர்களின் உயிர்கள் மதிப்பற்றுப் போய் விட்டதா?

ஒரு பேராசிரியர் என்ற தகுதிக்கு கூட இவர் தகுதியானவரா? இவரது உயிர் எப்படி முக்கியமோ, அவ்வாறு தான் கடத்திச் செல்லப்பட்ட ஒவ்வொரு தமிழனும் முக்கியமானவர்கள். இன்றைக்கு ஆயிரம் வரையிலான தமிழ்மக்கள் கடந்த ஒரு வருடத்தில் செல்லப்பட்ட நிலையைப் பற்றிக் கவலைப்படாமால் ஒரு இனவாதியாக, காட்டிக் கொள்கின்றார்.

நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் இளைஞர்களைக் கடத்திக் கொண்டு போய் கொலை செய்த பின்னர் எவ்வாறு இப்படித் திருப்திப்படுகின்றார்? கடத்திச் செல்லப்பட்ட உயிர்களின் கதை அவ்வளவு தானா? கடத்திச் செல்லப்பட்ட தமிழர்களின் உயிர்கள் மதிப்பற்றுப் போய் விட்டதா?

ஒரு பேராசிரியர் என்ற தகுதிக்கு கூட இவர் தகுதியானவரா? இவரது உயிர் எப்படி முக்கியமோ, அவ்வாறு தான் கடத்திச் செல்லப்பட்ட ஒவ்வொரு தமிழனும் முக்கியமானவர்கள். இன்றைக்கு ஆயிரம் வரையிலான தமிழ்மக்கள் கடந்த ஒரு வருடத்தில் செல்லப்பட்ட நிலையைப் பற்றிக் கவலைப்படாமால் ஒரு இனவாதியாக, காட்டிக் கொள்கின்றார்.

இலங்கையை சிங்களவந்தான் ஆழலாம் எனும் நிலையில் இருந்து இலங்கையில் சிங்களவந்தான் வாழலாம் எனும் நிலைப்பாட்டை சிங்களம் எடுத்து நிக்கிறது எண்று கடந்தமாத கடைசியில் வந்த த,தே.தோ காலக்கணிப்பு சொல்லி நிண்றது...! அதன்படி பார்த்தால் இந்த சிங்களவனிம் கூற்று ஆச்சரியமாக இல்லை...!

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன், நீங்கள் சொல்வது சரி தான். இலங்கையின் கல்வி அமைப்பு மனிதர்களின் குணவியல்புகளை உயர்த்தும் சக்தி வாய்ந்தது அல்ல. வெறும் புத்தகம் மனனம் பரீட்சை தான். இன்றைய ஜேவிபி முக்கியஸ்தர்கள் பலர் பல்லின மாணவர்களைக் கொண்ட தென்பகுதிப் பல்கலைகளில் கற்றவர்கள் தான். அவர்கள் அங்கு கற்ற ஒரே விடயம் இனவாதம் தான். விதாரண பேராசிரியரானது ஒன்றும் அதிசயமில்லை. அந்தப் பதவியும் அரசியல் மயமாகிப் பல ஆண்டுகள் கடந்து விட்டன.

ஆட்களை கடத்துபவர்கள் யார் என்று எங்களால் கூறமுடியாது. ஆனாலும் கடந்த ஒரு மாதகாலமாக காணாமல் போதல் மற்றும் ஆட்கடத்தல் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண சபையில் தெரிவித்தார்.

"கடத்துபவர்கள் யாரென்று தெரியாது" என்று சொல்வதற்கும் "கடத்துபவர்கள் யாரென்று எங்களால் கூறமுடியாது" என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. முதலாவது பதிலில் தெரியாதபடியால் கூறமுடியாது என்றும் இரண்டாவது பதிலில் தெரிந்திருந்தும் கூறமாட்டோம் என்பதுபோல் அர்த்தப்படுத்தலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.