Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை விட்டுத் தப்பியோடும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இடமில்லை

Featured Replies

இலங்கையின் வங்கிகளில் இருந்து பாரிய அளவில் கடன்களைப் பெற்று முதலீடுகளை மேற்கொண்டு, சில நாள்களில் நாட்டை விட்டு ஓடிவிடும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, இனிமேல் இடமளிக்கப் போவதில்லை என, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  

பேராதனையிலுள்ள ரெஸ்ட்ஹவுஸில், நேற்று (01) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி வந்தால், வெளிநாடுகளில் இருந்து பாரிய அளவில் இந்நாட்டுக்கு முதலீடு வரும் என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது என்றும் ஆனால். கடந்த காலங்களை எடுத்துப் பார்க்கும் போதே, அது அப்பட்டமான பொய் என்பது மத்திய வங்கியின் அறிக்கையூடாகத் தெரியவருவதாகவும் கூறினார்.  

தற்போதுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டில் இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றபோது, 2.2 ட்ரில்லியன் கடன் தொகை இருந்தது என்றும் 2015ஆம் ஆண்டு, அது 7.3 ட்ரில்லியன் ரூபாயாக உயர்ந்தது என்றும் அவர் கூறினார்.  

ஆனாலும், 2005ஆம் ஆண்டு 20 ட்ரில்லியன் டொலர்களாக இருந்த இந்நாட்டின் பெறுமதி, 2015ஆம் ஆண்டு 80 ட்ரில்லியன் டொலர் பெறுமதியுள்ள நாடாக மாற்றப்பட்டுள்ளது என்றும் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கடன் மூலம், நாடு பாரிய அபிவிருத்தி கண்டது என்றும் அவர் கூறினார்.  

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் இருந்தபோது பல மடங்கு கடன்கள் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்ததற்கான ஆதாரங்கள் ஒன்றும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

'http://www.tamilmirror.lk/மலையகம்/நடட-வடடத-தபபயடம-வளநடட-மதலடடளரகளகக-இடமலல/76-241902

இது உண்மை. சில வெளிநாட்டு கொம்பனிகள் இலங்கையில் முதலீடு செய்கிறோம் என்ற பெயரில் பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார்கள். பின்னர் அடந்த முதலீட்டினுடாக சில தனியார் கம்பெனிகளை தாமதக்கிக்கொண்டு வங்கிகளில் கடன்களை பெற்றுக்கொள்ளுகிறார்கள். இருந்தாலும் இவர்களால் கொம்பனிகளை சரியாக முகாமைத்துவம் செய்யத்தெரிவதில்லை.

அத்துடன் உள்ளூர் பார்ட்னர்களும் களவு செய்யத்தொடங்குவார்கள். இதனால் முதலீடு செய்பவர்கள் வங்கியில் எடுத்த கடனுடன் தலைமறைவாகிவிடுவார்கள்.

இலங்கையின் முதன்மை கொம்பனியான வாக்கெர்ஸ் பிரைவேட் லிமிடெட்டிட்கும் இதுதான் நடந்தது. இங்கு ஏறக்குறைய நாலாயிரம் பேர் வேலை செய்தார்கள். மலேசியன் கம்பெனி இதை வாங்கியது. இப்போது மலேசியன் கம்பெனியும் இல்லை வாக்கெர்ஸ் கம்பெனியும் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இங்கு வேலை செய்தவர்களில் அநேகர் வேறு இடங்களுக்கு சென்று விடடார்கள். இருப்பவர்களுக்கும் ஒழுங்காக சம்பளம் கிடைப்பதில்லை. எனவே இந்த திடடத்தை வரவேட்கிறோம். 

  • தொடங்கியவர்
15 hours ago, ampanai said:

ஆனாலும், 2005ஆம் ஆண்டு 20 ட்ரில்லியன் டொலர்களாக இருந்த இந்நாட்டின் பெறுமதி, 2015ஆம் ஆண்டு 80 ட்ரில்லியன் டொலர் பெறுமதியுள்ள நாடாக மாற்றப்பட்டுள்ளது என்றும் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கடன் மூலம், நாடு பாரிய அபிவிருத்தி கண்டது என்றும் அவர் கூறினார்.  

கெஹெலிய ரம்புக்வெல்ல எப்படி வேண்டுமென்றாலும் அளக்கலாம், அவிக்கலாம் 🤣

15 hours ago, ampanai said:

தற்போதுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டில் இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றபோது, 2.2 ட்ரில்லியன் கடன் தொகை இருந்தது என்றும் 2015ஆம் ஆண்டு, அது 7.3 ட்ரில்லியன் ரூபாயாக உயர்ந்தது என்றும் அவர் கூறினார்.  

 

  • தொடங்கியவர்

நாட்டில் இருந்தும் இன்றும் உலகில் எந்த மூலைக்கும் சென்று உழைத்து முன்னேறலாம் என்ற எண்ணம் உள்ளது. காரணம், இந்த திருநாட்டில் அவ்வாறு முன்னேற முடியாது என்பது மக்களின் எண்ணம். 

ஆனால், சிங்கள தலைவர்கள் தங்கள் நாட்டில் தாங்களே தங்கள் மக்கள் முன்னேறுவதற்கு உள்ள தடைகளை அகற்றாமல் இருப்பதே பெரிய தடை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.