Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழரின் நலன் காக்கும் வரலாற்று பொறுப்பு பிரிட்டனுக்கு இருக்கிறது: பொறிஸ் ஜோன்சனுக்கு விக்னேஸ்வரன் வலியுறுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழரின் நலன் காக்கும் வரலாற்று பொறுப்பு பிரிட்டனுக்கு இருக்கிறது: பொறிஸ் ஜோன்சனுக்கு விக்னேஸ்வரன் வலியுறுத்து

ஈழத் தமிழரின் நலன் காக்கும் வரலாற்று பொறுப்பு பிரிட்டனுக்கு இருக்கிறது என்று பிரிட்டனின் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்குத் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கட்சியின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுகமான நீதியசரர் சி.வீ.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்தி, தமி ழர்களின் பாதுகாப்பையும் நலனையும் பேணுவதற்கு இன்னும் காலம் பிந்திவிடவில்லை என்றும் விக்னேஸ்வரன் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரனின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கபப்ட்டிருப்பதாவது,

அண்மைய தேர்தலில் வென் றமைக்கு எமது வாழ்த்துக்கள்.

தங்களின் கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த முன்னைய பிரதமர் டேவிட் கமரூன் கடைசி யாக இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவரைச் சந்திக்கும் அதிஷ்டம் கிட்டியது. மிக விரை வில் வடக்கு மாகாணத்துக்கு உங்கள் விஜயமும் இடம்பெறு கின்றமையையும் எதிர்பார்த்து இருக்கின்றோம்.

பிரிட்டனில் வாழும் தமிழர்க ளின் உயர்ந்த நண்பர் நீங்கள் என்பது நாடறிந்த விடயம். இலங் கையிலும் பிரிட்டனிலும் உள்ள தமிழர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளமையுடன் உங்க ளிடமிருந்து அதிகம் எதிர்பார்க் கின்றனர்.

எங்கள் மக்கள் தங்கள் பாரம் பரிய பூமியில் இடம்பெறும் அரச அடக்குமுறை, இராணுவ ஆக்கிர மிப்பு, சிங்களக்குடியேற்றங்கள் போன்றவற்றாலும் அவற்றின் விளைவுகளினாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு அல்லல்பட்டு வரு கின்றனர்.

இலங்கையில் இனப்பிரச்சி னையைத் தீர்த்து, மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்டும் வர லாற்றுப் பொறுப்பு பிரிட்டனுக்கு உண்டு.

பிரிட்டனின் கொலனித்துவ நாடாக்கப்பட்டவற்றுள் இலங்கை யும் ஒன்று. 1833இல் இங்கு பிரிட்டனால் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மாற்றங்களே இலங்கை யில் இனப்பூசல்கள் ஏற்படக் கார ணம் என்று பொதுவாக நம்பப் படுகின்றது.

அந்தக் காலம் வரை தனி நாடாக இருந்த வடக்கும் கிழக் கும், எஞ்சிய சிங்களப் பெரும் பான்மைப் பிரதேசத்துடன் இணைக்கப்படாமல் தொடர்ந்து சுயநிர்ணய உரிமையுடன் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்குமானால் இந்த நாட்டின் இனப்பூசல்களை நாம் தவிர்த்திருக்கலாம்.

ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்படுத்து வதன் மூலம் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்தி, தமிழர்களின் பாதுகாப்பு நலனைப் பேணுவ தற்கு இன்னும் காலம் கடந்துவிட வில்லை.

இலங்கைத் தீவில் பொறுப்புக் கூறல், நீதி நடவடிக்கை, மீள் நல்லிணக்கம் ஆகியவற்றைத் தூண்டித் துலங்கச் செய்வதற் கான அவசியத்தை, பிரிட்டனில் உள்ள தமிழ் மக்களுக்குத் தேர்த லுக்கு முன்னரான செய்தியாக நீங்கள் விடுத்தமையை நாம் நினைவு கூரவிரும்புகின்றோம்.

இங்கு இடம்பெற்றவையாகக் கூறப்படும் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் தொடர்பாக முழு அளவிலான சுயாதீன சுதந்திர விசாரணைகளை நடத்துமாறு 2013இல் இலங்கைக்கு விஜயம் செய்த உங்களின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் இங்கு இலங்கைக்கு அரசை வலியுறுத் தியமையை நான் இச்சமயத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

 

http://www.samakalam.com/செய்திகள்/ஈழத்-தமிழரின்-நலன்-காக்க/

On 12/22/2019 at 1:36 PM, கிருபன் said:

ஈழத் தமிழரின் நலன் காக்கும் வரலாற்று பொறுப்பு பிரிட்டனுக்கு இருக்கிறது என்று பிரிட்டனின் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்குத் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கட்சியின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுகமான நீதியசரர் சி.வீ.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

சம்பந்தனும், சுமந்திரனும் பிரிட்டனுக்கு இல்லை  ரணிலுக்கு மட்டும் தான் பொறுப்பு இருக்கு என்று ஒற்றைக்காலில நிற்கப் போகினம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Gowin said:

சம்பந்தனும், சுமந்திரனும் பிரிட்டனுக்கு இல்லை  ரணிலுக்கு மட்டும் தான் பொறுப்பு இருக்கு என்று ஒற்றைக்காலில நிற்கப் போகினம். 

இந்த குரங்கு கூட்டம் அதான் சம்பந்தன் சுத்துமாத்து சுமத்திரன் இவையல் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை  தேடிகொள்கிரம் என்று டேவிட்  கமரூனுக்கு  சொன்னவையல் இன்னமும் தேடிக்கொண்டுதான் இருக்கினம் . 

  • கருத்துக்கள உறவுகள்

 

On 12/22/2019 at 9:06 AM, கிருபன் said:

ஈழத் தமிழரின் நலன் காக்கும் வரலாற்று பொறுப்பு பிரிட்டனுக்கு இருக்கிறது என்று பிரிட்டனின் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்குத் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கட்சியின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுகமான நீதியசரர் சி.வீ.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டன் தனது சுயநலனுக்காக உலகில் பல நாடுகளை அழித்தது நாசமாக்கியவர்கள். வெளிநாட்டு தமிழர்கள் தங்கள் வாழ்ந்து வரும் நாட்டு மக்களிடம் இருந்து பிரிட்டன் பற்றிய உண்மைகளைகளை அறிவார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.