Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு... கடந்த காலத்தைப் போல் 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக்குறியே – வெளிப்படுத்தும் சித்தார்த்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Siththarthan-MP.jpg

கடந்த காலத்தைப் போல் 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக்குறியே – வெளிப்படுத்தும் சித்தார்த்தன்

கடந்த காலங்களைப் போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக்குறியாக இருந்தாலும் அதிகளாவன ஆசனங்களைப் பெறுவதில் நம்பிக்கை உள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்கள், மாற்று அணியின் பிரவேசம் காரணமாகவே பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புளொட் அமைப்பின் மத்திய குழு கூடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “ஜனாதிபதி தேர்தல் அதன் பின்னரான பெறுபேறுகள் மற்றும் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டதுடன் அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடுவற்காகவே எமது மத்தியகுழு இன்று கூடியிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு செல்லப் போகின்றோம் என்று என்றுமே நாம் சொன்னதில்லை. இன்றும் அதே நிலைப்பாடே உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.

சில வேளைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதற்குள் இருக்கும் கட்சிகளுக்குமிடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அந்த ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் நாங்கள் அவதானமாக இருக்கின்றோம்.

எதிர்வரும் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடவுள்ளது. அப்போது பேசி ஒரு சுமூகமான நிலைப்பாட்டை எடுப்போம் என நாங்கள் நம்புகின்றோம்.

மாற்று அணி ஒன்று உருவாகும் போது அது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதிக்கச் செய்யும். போட்டிகள் கூடுகின்ற போது கட்டாயமாக பாதிப்பு இருக்கும். அது தொடர்பாக நாங்கள் பேசுகின்றபோது கூடியவரையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளைக் கூட்ட முடியுமாயின் இன்னும் கூட்டவேண்டும் என்ற அவிப்பிராயமும் இருக்கின்றது.

அது எவ்வளவு சாத்தியமென்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் அந்தப் பிளவு இன்று கூடுதலாகவே இருக்கின்றது. அதனை மீண்டும் ஒற்றுமைப்படுத்துவது சாத்தியமில்லாவிட்டாலும் கூட இரண்டு மூன்று அணிகளாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது. எனவே மக்களே இனி தீர்மானிக்க வேண்டும்.

எனினும் எங்கள் கட்சியைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்குவீதமே கூடுதலாக இருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பே கூடுதலான ஆசனங்களையும் பெறும்.

கடந்த காலங்களைப் போல 16 ஆசனங்களை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் கூட அதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்ற எண்ணப்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்றது.

தற்போதுள்ள கள நிலைவரங்கள் எப்படி சாதக பாதகமாக மாறும் என்று கூற முடியாது விட்டாலும் கூட தேர்தலில் கணிசமான ஆசனங்களை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

http://athavannews.com/கடந்த-காலத்தைப்-போல்-16-ஆசன/

16 என்ன 6 கிடைத்தாலே பெரிய காரியம். சம், சும் இவர்களால்தான் தமிழனுக்கு சுயாட்சியோ , வடக்கு கிழக்கு இணைப்போ , அதிகார பரவலாக்களோ கிடைக்கவில்லை என்று கருத்து நிலவுகின்றது. மாற்று தலைமைகளும் இதையே கூறுகிறார்கள். எனவே மாற்று தலைமைகள் இம்முறை வெல்வதட்கு சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, மாற்றுத்தலைமைகள் இவ்விடையத்தில் எந்தவிதத்திலும் பயனடையப்போவதில்லை, அனேகமாக, டக்ள்ஸ் அங்கஜன் ராமநாதன், விஜயகலா, மற்றும் தேசியக்கட்சிகளது அதிரி புதிரிகள் இவர்கள்தான் பயனடைவார்கள்.

காரணம் தமிழர் தரப்பு இப்போதும் கூட்டமைப்பு இல்லையேல் யாராவது என்றே சிந்திக்கிறது, அந்த வேற யாராவது  நான் மேற்கூறியவர்ககளாகத்தான் இருக்கும். 

இதற்கான பிரச்சாரம் எப்படி இருக்குமெனில் 

மகிந்தவிடமும் ரணிலிடமும் விக்கியர் சிவாஜியர் கஜேந்திரன் கோஸ்டிகள் நல்லா காசு வாங்கிவிட்டது என்பதாகும் இதை கூட்டமைப்பே திட்டமிட்ட முறையில் நடாத்தும்.

அதற்கான உதாரணம் கடந்துபோன சிறீலங்காவுக்கான அதிபர் தேர்தலில் வலிவடாக்கின் ஒரு பிரதேசசபைத் தவிசாளரது மகன் என்னிடம் நேரடியாகச் சொன்ன விடையம் கஜேந்திரனும் சிவாஜிலிங்கமும் கோடிக்கணக்கில மகிந்தவிடம் காசுவாங்கிவிட்டார்கள் என. ஆனால் காசு வாங்கியது சுமந்திரன் சம்பந்தன் மாவையர்தான். அதற்கான ஆதாரம் தேர்தலின்பின்பு மாவையர் "நாங்கள் தற்போதைய சிறீலங்காவின் அதிபருடன் மோதல்போக்கைக் கடைப்பிடிக்கமாட்டோம்" எனக்கூறியதே, காரணம் விடுதலைப்புலிகள் மகிந்த சிறீலங்காவின் அதிபராக வருவதற்காக வல மில்லியன் ரூபாய்களைத் தங்களிடம் வாங்கினார்கள் என மகிந்த தரப்பு தகவலைக் கசியவிட்டதுபோல் தங்களது திருகுதாளத்தையும் சொல்லிவிடுவார்களோ என்ற பயமே.

 

என்னைப்பொறுத்த வரைக்கும் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பவர்களை விட அரசுடன் இணைந்து யாராவது மக்களுக்கு நன்மை செய்வாராக இருந்தால் அவர்களை ஆதரிப்பேன்.

அறுபது வருடமாக ஏமாந்து பிச்சைக்காரராக மாறி விட்டொம். இனியும் மக்களை மாற்று தலைமை, ஏமாற்று தலைமை எண்டு யாரவது வருவார்களாக இருந்தால் மண்டையில் போடுவது நல்லது. 

22 hours ago, தமிழ் சிறி said:

கடந்த காலத்தைப் போல் 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக்குறியே – வெளிப்படுத்தும் சித்தார்த்தன்

எப்பவுமே பாராளுமன்ற கதிரையை மட்டும் குறிவைக்கும் சுயநல அரசியல்வாதி சித்தார்தனுக்கு இந்த முறை தான் வெல்லமுடியுமா என்ற சந்தேகம் தலைகேறிட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Gowin said:

எப்பவுமே பாராளுமன்ற கதிரையை மட்டும் குறிவைக்கும் சுயநல அரசியல்வாதி சித்தார்தனுக்கு இந்த முறை தான் வெல்லமுடியுமா என்ற சந்தேகம் தலைகேறிட்டு

சம்பந்தன், சுமந்திரன், மாவை... எல்லாரும் வெல்லுவமா...? என்று கவலையில் இருக்க, 
சித்தார்தனுக்கு வந்த, கவலையை... நினைக்க, தமாசாய்... இருக்கு.  :grin:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.