Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் தூதரக அதிகாரி பிணையில் விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் தூதரக அதிகாரி பிணையில் விடுதலை

5df78b614ffcc_5df78b474913b_garnie

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது

http://www.dailyceylon.com/194548/

சுவிஸ் அரசு அழுத்தம் காரணமாக பிணையில் விடுபட்டு இருக்கலாம். ஆனால், தேவை என்றால் இவர் 'ஒரு விபத்தில் இறக்க'  நேரிடலாம் 😎 . 

image_2bb5382814.jpg

 

image_18bf43c76d.jpg

சுவிஸ் தூதரக ஊழியரை பிணையில் விடுவித்த நீதிவான், விதித்த கடும் நிபந்தனைகள்!

பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியபப்டுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிட்சர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பனிஸ்டர் பிரான்சிசை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று அனுமதி அளித்தார். 

5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிவான்,  கானியாவின்  கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், தேசிய  அடையாள அட்டை பிரதி ஒன்றினையும்  பிணை ஆவணத்துடன் இணைக்க உத்தரவிட்டார். 

அத்துடன் சந்தேக நபர் தனது வதிவிடத்தை உறுதி செய்யும் கிராம சேவகர் அறிக்கையை அடுத்த தவணை மன்றில் ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டார். பிழையான முகவரியை அவர் வழங்கினால், பிணை சட்டத்தின் 12 ஆம் அத்தியாயத்தின் கீழ்  தண்டனைக்குரிய குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிவான் உத்தரவிட்டார்.

தான் தற்போது வசிக்கும் வீட்டினை மாற்றுவதானால் அது குறித்து நீதிமன்றுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதிவான் நிபந்தனை விதித்தார்.

பிணை கையெழுத்திடும் போது, கடவுச் சீட்டை மன்றில் ஒப்படைக்கவும், தேசிய அடையாள அட்டை பிரதி ஒன்றினை கையளிக்கவும் உத்தரவிட்டா நீதிவான்,  வேறு வழிகளில் சட்ட ரீதியாக வெளிநாடு செல்ல முற்பட்டால் அது குறித்து முதலில் மன்றுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நிபந்தனையிட்டார்.  

மேலும் சந்தேக நபரின் கடவுச் சீட்டு இலக்கம், அடையாள அட்டை இலக்கத்தை  குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு அனுப்ப ஆலோசனை வழங்கிகிய நீதிவான், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தாலோ வேண்டுமென்று இழுத்தடிப்பு செய்தாலோ  பிணை ரத்தாகும் என எச்சரித்து வழக்கை எதிர்வரும் 2020 ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

https://www.virakesari.lk/article/72153

யார் சொல்வது உண்மை ? சுவிஸ் தூதரக ஊழியர் கானியாவின் தாயார் ,பிள்ளைகள் சுவிற்சர்லாந்திலா? சிங்கப்பூரிலா?

கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட,  பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  சுவிற்சர்லாந்து தூதரகத்தின் விசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸின் தாயார் மற்றும்  மூன்று பிள்ளைகள் வெளிநாடு சென்றமை தொடர்பில் நேற்று நீதிமன்றில் விஷேட வெளிப்படுத்தல்கள்  இடம்பெற்றன.

கானியா பெனிஸ்டர் பிரன்சிஸுக்கு பிணை வழங்குவது தொடர்பில் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில்  பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆராயப்பட்ட போது,  விசாரணையாளர்களான சி.ஐ.டி.யின் ஆலோசனை பிரகாரம் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான  சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டார, பிணை வழங்க எதிர்ப்பு வெளியிட்டு முன்வைத்த வாதங்களின் போதும் அதற்கு  சந்தேகநபரின் சட்டத்தரணி உபுல் குமரப்பெருமவின் பதில் வாதத்தின் போதுமே இவை வெளிப்பட்டன.

முதலில் பிணைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அரச சட்டவாதி ஜனக பண்டார மன்றில் வாதிடும் போது ஒரு கட்டத்தில் பின்வருமாறு கூறினார்.

' இவருக்கு பிணையளித்தால் இவர்  அரசியல் தஞ்சம் கோரியோ அல்லது வேறு ஒரு  வகையிலோ சுவிட்ஸர்லாந்துக்கே செல்ல வாய்ப்புள்ளது.  ஏனெனில் இந்த விசாரணைகளில் இதுவரை நடைபெற்றுள்ள அனைத்தையும் வைத்து பார்க்கும் போது இது தெளிவாகிறது. அவருக்கு அந்த இயலுமை உள்ளது.

 இப்போது, இந்த சந்தேக நபரான கானியாவின் தாயாரும்  மூன்று பிள்ளைகளும்  சுவிற்சர்லாந்துக்கு சென்றுவிட்டனர். தாய்ப்பால் குடிப்பதாக கூறப்பட்ட குழந்தையைக் கூட  சுவிற்சர்லாந்துக்கு, சந்தேக நபரின் அம்மா அழைத்துச் சென்றுள்ளார். ' என தெரிவித்தார்.

 இதன்போது அதற்கு கானியாவின் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

' இது முற்றிலும் பொய்யானது. அவர்கள் சுவிற்சர்லாந்து செல்லவில்லை.  சிங்கப்பூருக்கே விடுமுறையை கழிக்க சென்றனர். தாய் விளக்கமறியலில் உள்ள நிலையில் பிள்ளைகளின் மன நிலைமையை வேறு திசைக்கு திருப்ப இந்த சுற்றுலாவை அவர்கள் சென்றனர். பிணைப் பெறுவதை தடுக்க இப்படி முறையற்ற விதத்தில் எந்த அடிப்படையும் இன்றி கூறக் கூடாது.' என்றார்.

 இதன்போது மீள  அரச சட்டவாதி ஜனக பண்டார, தனக்கு சி.ஐ.டி.யினரிடமிருந்து கிடைக்கும் ஆலோசனைக்கு அமையவே தான் அதனை தெரிவித்ததாக கூறினார்.

 அப்போது  தலையீடு செய்த நீதிவான் லங்கா ஜயரத்ன, மன்றில் இருந்த சி.ஐ.டி.யின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ.திலகரத்னவிடம்,  குறித்த விடயம் தொடர்பில் வினவினார்.

'  கட்டுநாயக்க விமான நிலைய சி.ஐ.டி. பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சரே அந்த தகவலை எனக்கு தந்தார். அதனையே நான் அரச சட்டவாதிக்கு தெரிவித்தேன் என்றார்.'

மீளவும் பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளரை நோக்கி , அந்த தகவலை உறுதி செய்து கொண்ட பின்னரா மன்றுக்கு தெரிவிக்க ஆலோசனை வழங்கினீர்கள் என வினவினார்.

அதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ. திலகரத்ன, ' அரச புலனாய்வுப் பிரிவிடம் இருந்தும் அந்த தகவல் கிடைத்தது. ' என கூறினார். அப்போது மீளவும் நீதிவான் எழுத்து மூலம் அந்த தகவல் கிடைத்ததா என வினவினார்.

  அதற்கு பதிலளித்த சி.ஐ.டி. பணிப்பாளர் இல்லை. வாய்மொழி மூலம் கூறப்பட்ட தகவலே அது என்றார்.

 இதன்போது  திறந்த மன்றில் நீதிவான், ' இது பாரிய மாறுபட்ட தகவல். சிங்கப்பூருக்கும், சுவிட்சர்லாந்துக்கும்  பாரிய வித்தியாசம் உள்ளது. விமான நிலையத்தில் சி.ஐ.டி. பிரிவொன்று உள்ளது. உளவுத் துறை, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகள் உள்ளனர். அப்படியிருக்கையில், உண்மையிலேயே அப்படி சிங்கப்பூருக்கு சென்ற ஒருவரை சுவிட்சர்லாந்துக்கு சென்றுவிட்டார் எனக் கூறுவது  பாரதூரமான விடயம். பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்' என சி.ஐ.டி. பணிப்பாளருக்கு நீதிவான்  தெரிவித்தார்.

இதனையடுத்து அது குறித்து மீள விமான நிலைய சி.ஐ.டி.பிரிவில் விசாரித்து தகவல் அளிப்பதாக பணிப்பாளர் டப்ளியூ. திலகரத்ன மன்றுக்கு தெரிவித்தார்.

 இந் நிலையில் மீள கானியாவுக்கு பிணையளிக்கப்பட்ட பின்னர்,  மன்றில் சிரேஷ்ட அரச சட்டவாதி சி.ஐ.டி. சார்பில் மீள இந்த விடயத்தை  தெளிவுபடுத்தினார்.

 ' கனம் நீதிவான் அவர்களே,  இவர்கள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர். விமான நிலையத்துக்கு தூதரக வேன் ஒன்றிலியே அழைத்து செல்லப்பட்டு இறக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன்  வெளிநாட்டுப் பெண் ஒருவரும் இருந்துள்ளார்.

 கட்டுநாயக்க விமான நிலைய சி.ஐ.டி.யினரிடம் தற்போது விசாரித்ததில்,  சிங்கப்பூருக்கு அவர்கள் சென்ற போது, அவர்களின் பெயர்களில் சிங்கப்பூரில் இருந்து - சுவிற்சர்லாந்தின் சூரிச் நகருக்கு விமான டிக்கட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளாமை தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் சுவிற்சர்லாந்து சென்றுள்ளதாக நான் முன்வைத்த விடயங்களை  வாபஸ் பெறத் தேவையில்லை.' என்றார்.

இதன்போது மீளவும் பதிலளித்த கானியாவின் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, இது முற்றிலும் பொய்யானது.  அடுத்த வழக்குத் தவணையில் அவர்களது பயணம் தொடர்பில் பூரண பயண விபரங்கள் அடங்கிய ஆவணத்தை மன்றுக்கு சமர்ப்பிப்போம்.' என்றார். 

https://www.virakesari.lk/article/72172

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ampanai said:

சுவிஸ் அரசு அழுத்தம் காரணமாக பிணையில் விடுபட்டு இருக்கலாம். ஆனால், தேவை என்றால் இவர் 'ஒரு விபத்தில் இறக்க'  நேரிடலாம் 😎 . 

வலியப்போய் தலையைக் குடுத்த கதையாய் முடியும். எதற்கும் சுவிஸ் தூதரகம் எச்சரிக்கையாய் இருக்கும் என்று நம்பலாம். 

47 minutes ago, ampanai said:

கட்டுநாயக்க விமான நிலைய சி.ஐ.டி.யினரிடம் தற்போது விசாரித்ததில்,  சிங்கப்பூருக்கு அவர்கள் சென்ற போது, அவர்களின் பெயர்களில் சிங்கப்பூரில் இருந்து - சுவிற்சர்லாந்தின் சூரிச் நகருக்கு விமான டிக்கட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளாமை தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் சுவிற்சர்லாந்து சென்றுள்ளதாக நான் முன்வைத்த விடயங்களை  வாபஸ் பெறத் தேவையில்லை.' என்றார்.

இறுதியில் கானியாவும் சுவிஸ் செல்வது உறுதி. 

ஆனால், இங்கே சுவிஸ் அரசு இறுதியில் சிங்களத்திடம்  தோற்கும் எனவே தெரிகின்றது. 

காரணம், சுவிஸ் அரசு நீதிக்காக போராடாமல் ஓடித்தப்ப வைக்கின்றது.   

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ampanai said:

இதன்போது  திறந்த மன்றில் நீதிவான், ' இது பாரிய மாறுபட்ட தகவல். சிங்கப்பூருக்கும், சுவிட்சர்லாந்துக்கும்  பாரிய வித்தியாசம் உள்ளது. விமான நிலையத்தில் சி.ஐ.டி. பிரிவொன்று உள்ளது. உளவுத் துறை, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகள் உள்ளனர். அப்படியிருக்கையில், உண்மையிலேயே அப்படி சிங்கப்பூருக்கு சென்ற ஒருவரை சுவிட்சர்லாந்துக்கு சென்றுவிட்டார் எனக் கூறுவது  பாரதூரமான விடயம். பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்' என சி.ஐ.டி. பணிப்பாளருக்கு நீதிவான்  தெரிவித்தார்.

இங்கேயுமா  புரளி?    காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வெளிநாட்டுக்கு போய்விட்டார்கள் என்று கதை சொல்லி ஏமாத்தி பழகின தோஷம் விடேல்லை. வாய்தவறி வந்து விட்டது. ஒருவேளை அப்பிடித்தான் இவவின் கதையையும் முடிக்கிற திட்டமோ யாரறிவார். சுவிஸ் காரரும் மோப்பம் பிடிச்சுதான் அனுப்பிவைச்சினமோ. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

காரணம், சுவிஸ் அரசு நீதிக்காக போராடாமல் ஓடித்தப்ப வைக்கின்றது.

உவையின்ர நீதியை இவ்வளவு நாளும் கண்டதால்தான் சுவிஸ்  இந்த முடிவுக்கு வந்திருக்கும்.  இனி இவையின்ர உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை அம்போ. முதலில்  கானியா சுவிஸ் போய்ச் சேரட்டும். நீதித் துறையின் சிறப்பு சான்றிதழ்  வெளிவரும். எல்லாம் நன்மைக்கே இறைவா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.