Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கசிப்பை ஒழிக்குமாறு கோரி குழந்தையுடன் பெண் பேராட்டம்

Featured Replies

image_d4e2f0805a.jpgகிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்திக்கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விட்டால், தான் குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொள்ளவுள்ளதாக பெண் ஒருவர் வீதியில் தனிநபராக போராட்டத்தில் இன்று (02) ஈடுப்பட்டுள்ளார்.

காந்தி கிராமத்தில் கசிப்பு பாவனை அதிகரித்துள்ளது எனவும் இதனால் தன்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அங்கு பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை என, தெரிவிக்கும் அவர், கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தில் நிம்மதியில்லை, பாடசாலை பிள்ளைகள் நிம்மதியாக படிக்க முடியாதுள்ளதுடன், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“வீடுகளின் வாசல்கள் வரை கசிப்பு விற்பனை வந்துவிட்டது. எப்பொழுதும் மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள், சொல்ல முடியாத  அளவுக்கு கசிப்பு பாவனையால்  அவலம் ஏற்பட்டுள்ளது. 

“இனியும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே நான் எனது குழந்தையுடன் இம்முடிவுக்கு வந்துள்ளேன். இனியும் என்னால் இந்த அவலத்தை அனுபவித்துக்கொண்டு வாழ முடியாது” என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்.

கசிப்பு விற்பனை தொடர்பில் கிராம அலுவலர், மற்றும்  பொலிஸாருக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை  எனவும் அந்தப் பெண் மேலும் கூறியுள்ளார்.

-மு.தமிழ்ச்செல்வன்   

http://www.tamilmirror.lk/வன்னி/கசிப்பை-ஒழிக்குமாறு-கோரி-குழந்தையுடன்-பெண்-பேராட்டம்/72-243351

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

சுமார்  ஒன்றரை  வருடத்துக்கு முன்...   
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்... ஸ்ரீதரன் என்பவர்,
யாழ்பாணத்தில் பல  மதுபானசாலைகள்  உள்ளன. 

கிளிநொச்சிக்கும்   புதிய மதுபானசாலை வேண்டும் என்று, 
அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த செய்தியை.. யாழ். களத்தில்  நான் படித்தேன்.

1 hour ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

சுமார்  ஒன்றரை  வருடத்துக்கு முன்...   
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்... ஸ்ரீதரன் என்பவர்,
யாழ்பாணத்தில் பல  மதுபானசாலைகள்  உள்ளன. 

கிளிநொச்சிக்கும்   புதிய மதுபானசாலை வேண்டும் என்று, 
அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த செய்தியை.. யாழ். களத்தில்  நான் படித்தேன்.

இவர்கள் எல்லாம் சுயநலவாதிகள். மக்கள் எக்கேடு கேடடாலும் பரவாயில்லை தாங்கள் வசதியாக வாழ்ந்தால் போதுமென்று இருப்பவர்கள். இருந்தாலும் இவர் என்ன நோக்கத்திக்காக அப்படி கேடடார் என்று பார்க்க வேண்டும். ஒரு வேளை மக்கள் கசிப்பை குடிக்காமல் அங்கீகரிக்கப்படட மதுபானத்தை குடிப்பதட்காக இருக்கலாம். ஆனாலும் அதிகாரிகள் இப்படியான சடடவிரோத மதுபானன தயாரிப்பாளர்களை கைது செய்யாமல் , தடை செய்யாமல் இருப்பது ஏழை மக்களுக்கு செய்யும் துரோகம். மக்கள் இது விடயமாக புதிய ஆளுநரிடம் முறையிடுவது நல்லது. 

  • தொடங்கியவர்

மக்கள் குடியிருப்பில் கள்ளுத்தவறணை வேண்டாம் - மக்கள் ஆர்ப்பாட்டம் !

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கள்ளுத்தவறணையை அகற்றி வேறு இடத்துக்கு மாற்றுமாறுகோரி முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை கயட்டையடி மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

IMG_8996_1600_1067.jpg


தண்ணீர் ஊற்று புளியங்குளம் வீதியில் மாமூலை கயட்டையடி பகுதியில் மிக நீண்டகாலமாக கள்ளுத்தவறணை ஒன்று இயங்கிவருகின்றது . ஆரம்பக்காலத்தில் குறித்த கள்ளுத்தவறணை பகுதியில் கிராமங்கள் இல்லாத நிலையில் இந்த  கள்ளுத்தவறணை இயங்கி வந்தது .

 

IMG_8990_1600_1067.jpg


 தற்போது அந்தப்பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் கள்ளுத்தவறணை அமைந்திருப்பதால் பல்வேறுபட்ட குற்றச்செயல்களும் சட்டவிரோத நடவடிக்கைகளும் தலை தூக்கியுள்ளதோடு அருகில் குடியிருப்பவர்கள் குடிகாரர்களால் தினமும் இடைஞ்சல்களுக்கு உள்ளாவதாகவும் பாடசாலை மாணவர்கள் ,பெண்கள் முதலானவர்கள் இந்த கள்ளுத்தவறணைக்கு குடிக்கவருபவர்களால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து இந்த கள்ளுத்தவறணை  வேறு இடத்துக்கு மாற்றப்படவேண்டும் எனத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

 

IMG_8989_1600_1067.jpg


கள்ளுத்தவறணை  வாயிலை மூடி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது . இறுதியில் முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீட்டையடுத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலருக்குக் கையளிக்கும் விதமாகக் கிராம அலுவலரிடம் ஒப்படைத்தனர் . 

 

IMG_8988_1600_1067.jpg

 

விரைவில் இந்த கள்ளுத்தவறணை வேறு இடத்துக்கு மாற்றப்படாது விட்டால் தமது போராட்டம் தொடரும்  என ஆர்ப்பாட்டம்மேற்கொண்ட  மக்கள் தெரிவித்துள்ளனர் .

 

IMG_8983_1600_1067.jpg

IMG_8974_1600_1067.jpg

https://www.virakesari.lk/article/72416

  • தொடங்கியவர்

பொலிஸாருடன் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் 61 போத்தல் கோடா மீட்பு

கிளிநொச்சி கோணாவில் பகுதி கிராம மக்களும் பொலிஸாரும் இணைந்து தேடுதலை மேற்கொண்டபோது பற்றைக் காட்டுக்குள்  இருந்து கசிப்பு உற்பத்திக்காக தயாரிக்கப்பட்ட நிலையிலிருந்த 61 போத்தல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி பொருட்கள், கொள்கலன் என பல பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

FB_IMG_1578307207119.jpg

இதேபோன்று ஊற்றுபுலம் பகுதியில் 7 போத்தல்  கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி பொருட்கள் என கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரின் மது ஒழிப்பு குற்றப் பிரிவின் அதிகாரியின் குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து செயல்பட்டு கிராமங்களில் கசிப்பு ஒழிப்பு திட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

FB_IMG_1578307227018.jpg

இதன்போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரின் மது ஒழிப்பு குற்றப் பிரிவின் அதிகாரி,கிளிநொச்சி கோணாவில் கிராம மக்கள் ஏனைய கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் 

FB_IMG_1578307233988.jpg

இவர்களைப் போன்று ஏனைய கிராம மக்களும் இணைந்து செயல்பட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை முற்றாக நிறுத்த முடியும் என்று தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/72723

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.