Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலையுதிர்கால நினைவுகள் - வ.ஐ.ச.ஜெயபாலன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1989 இலையுதிர்கால முடிவில் நான் ஒஸ்லோ நகரில் இருந்தேன். விடைபெறும் இலையுதிர்காலம் கடைசி மஞ்சள் இலைகளை உதிர்த்தது. உள்ளே நுழையும் கூதிர் காலம் ஆரம்ப வெண்பனியை பெய்தது. பெரும்பாலான பறவைகள் குளிருக்குத் தப்பி என் தாய்நாட்டின் திசையில் பறந்துவிட்டன. மக்பை என்னும் காக்கை இனப்பறவைகள் மட்டும் என் அறை சன்னலுக்கு வெளியே அடிக்கடி தோன்றி வெண்பனியில் அலைந்தன.
உதிரும் இலைகளும் வாட்டும் குளிரும் மனசை நசிக்க நாட்டேக்த்தில் உளன்ற நாட்க்கள் அவை. அந்த நாட்க்களில்தான் இந்தக் கவிதையை எழுதினேன். இந்த புகழ் பெற்ற கவிதை புலம்பெயர்ந்த தமிழர் பற்றிய கட்டுரைகளில் அடிக்கடி எடுதாளப்படுகிறது.
.
Image may contain: one or more people and close-up
*
இலையுதிர்கால நினைவுகள்
- வ.ஐ.ச.ஜெயபாலன்.
*
இன்பக் கனவுபோல்
தோன்றி மறைந்தது கோடை.
காற்றுக் குதிரைகளில்
குளிர்
சாட்டை சொடுக்கி வரும்.
வெய்யிற் சுகம் தேடி
வடதுருவப் பறவைகளும்
என் தாய்நாட்டின் திசை நோக்கி
தங்களது சிறகசைக்கும்.
வான் நோக்கிக் கை உயர்த்தித் தொழுகின்ற
கறுப்பர்களைப்போல்
இலை உதிர்த்து நிற்க்கும்
ஓக் மரங்களின் கீழே
தனிதலையும் மக்பாய் இழிவாக எனை நோக்கும்.
 
”மக்பாய்! மக்பாய்!
எல்லாப் பறவைகளும்
என்னுடைய தாய்நாட்டின் திசைகளிலே
சூரியனைத் தேடிப் புலம் பெயரும்
குளிர் நாளில்
நீ மட்டும் இந்த துருவத்தில் தரித்ததென்ன?”
 
மக்பையோ உனக்கிவைகள் புரியாது
என்பதுபோல் தலை அசைக்கும்.
“எனக்கிவைகள் புரியாதா?”
“உனகெப்படிப் புரியும்?
துருவத்துப் பறவைகளே தேடுமுந்தன் தாய்நாட்டை
குண்டி மண்ணைத் தட்டுதல்போல்
தட்டிவிட்டு வந்தவன் நீ”
மக்பை சொல் தீக்கோலாய்
மனதில் குறிபோடும்.
“நில் மக்பை” என்றேன்.
”நாமறிவோம்
இலங்கைத் தமிழர் உங்கள் நாகரீகம்
பிறருடைய பேச்சுச் சுதந்திரத்தை
என்றேனும் ரசித்ததுண்டா நீங்கள்?
என்றபடி மக்பை எட்டப் பறந்து செல்லும்.
 
வானில் ஒரு பரதேசிபோல்
குளிர்ந்துபோன சூரியனின் பரிதாபம்.
மண்ணில்
மஞ்சளாய் தலை நரைத்த மரங்களின்கீழ்
பொன்னாய் இறகசைக்கும்
வணத்துப் பூச்சியாய் பகட்டி
பேர்ச் இலை பழுத்தல் ஒன்று
புல்லில் தரை இறங்கும்
ஒரு புது அகதி வந்துபோல்.
 
உலகெங்கும் உதிர்க்கும்
வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற
மனிதச் சருகுகளாய் புரள்கின்றோம்.
என்ன நம் தாய்நாடு
ஓயாமல் இலை உதிர்க்கும்
உயிர்ப்பிழந்த முது மரமா?
 
யாழ்நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்போட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்க்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?
 
பாட்டனார் பண்படுத்தி
பழமரங்கள் நாட்டி வைத்த
தோப்பை அழியவிட்டு
தொலை தேசம் வந்தவன் நான்.
என்னுடைய பேரனுக்காய்
எவன் வைப்பான் பழத் தோட்டம்.
 
கடந்த வசந்தத்தில்
கின்னரங்கள் மீட்டி
எழில்க் கன்னியர்கள் பாடுகின்ற
களியாட்டரங்குகளில்
கிண்ணங்கள் கொஞ்ச, மங்களம்கூறி
மனமுடைந்தேன் பரதேசி.
 
இது இயற்கையே விரக்தியுறும்
இலையுதிர் காலம்.
இனி நீர்க்கூடக் கல்லாகும்
நீண்ட குளிர்காலம்.
 
இன்னும் எத்தனை நாள்
இந்துக் கடல் மடியில்
வாடையும் தென்றலும் மீட்ட இசைக்கின்ற
மரகத வீணையென.
வடகிழக்காய் நீண்ட என் தாய்நாட்டை
நெஞ்சில் சுமந்துநான் ஏங்குவது?
நாட்டேக்கம் என் உயிரை
நஞ்சாய் சமிக்கிறதே.
 
நெஞம் கலங்காதே என்றபடி
நெருங்கி வந்த மக்பை
”அதோ தெரியுது பார்” என்று
விமான நிலையத்தின் வழிகாட்டும்.
1989.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2020 at 3:14 PM, poet said:
வழிதவறி அலாஸ்க்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?

அலைந்து உலையும்  வாழ்வை அழகாய் பாடும் பொயட்.அழகான கவிதை பல தடவை முன்பும் வாசித்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்று அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.