Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு

 

யாழ். பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்குமாறு இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பணித்துள்ளது.

01.jpg

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு இன்று இந்த அறிவுறுத்தலை வழங்கியது.

பொதுநல வழக்குகள் பலவற்றை பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் முன்னெடுத்து வருபவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவருமான கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதை தடை செய்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த நவம்பரில் பணித்தது.

இலங்கை இராணுவத்தின் அழுத்தத்தின் பின்னணியில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த பணிப்புரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமிக்கு வழங்கியது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அந்தக் காலப்பகுதியிலிருந்த பேரவையும் ஒப்புதல் வழங்கியது.

அத்துடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எவரும் நீதிமன்றங்களில் முன்னிலையாகி சட்டத்தரணியாகக் கடமையாற்ற முடியாது என்ற சுற்றறிக்கையையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த நவம்பரில் வெளியிட்டது.

இந்த நிலையில் பல்கலைக்கழங்களில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியமைக்கும் தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் சடத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அத்துடன், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவில் இணைப்பதற்காக தன்னை சட்டத்தரணியாக நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதைத் தடை செய்ய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஆவணங்களை வழங்குமாறு மானியங்கள் ஆணைக்குழுவிடம் தகவல் அறியும் சட்டம் ஊடாக கலாநிதி குமாரவடிவேல் குருபரன் கோரியிருந்தார்.

அந்த ஆவணங்களில் 2019 ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மறுத்துவிட்டது. அந்தக் கடிதத்தை பகிரங்கப்படுத்தவேண்டாம் என்று இராணுவம் ஆணைக்குழுவுக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய அந்தக் கடிதத்தை வழங்க முடியாது என்று கலாநிதி கு.குருபரனுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பதிலளித்திருந்தது.

இதுதொடர்பில் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு கலாநிதி கு.குருபரன் மேன்முறையீடு செய்திருந்தார்.

அதுதொடர்பில் இரு தரப்பையும் அழைத்து தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு இன்று விசாரணை நடத்தியது.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த கம்மம்பில தலைமையில் உறுப்பினர்கள் நீதிபதி ரோஹினி வல்கம, மூத்த சட்டத்தரணி கிஷாலி பின்ரோ ஜயவர்தன, மூத்த சட்டத்தரணி. எஸ்.ஜி.புஞ்சிஹேவா, கலாநிதி.செல்வி திருச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் செயலகத்தில் இன்று இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

“கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பகிரங்கப்படுத்த முடியாது என்ற வாசகம் இடம்பெறாத நிலையில் அதனை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மறுப்பது தகவல் அறியும் எனது உரிமையை மீறும் செயலாகும் என்று கலாநிதி குமாரவடிவேல் குருபரன் வாதிட்டார்.

கடிதத்தின் தன்மையை ஆராய்ந்த தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, அந்தக் கடிதத்தை மேன்முறையீட்டாளரான கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பணித்தது.

2019 ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், போதனைசார் அலுவலகராக உள்ள நிலையில் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கும் அனுமதி உண்டா? அவர் இராணுவத்தினருக்கு எதிராக நீதிமன்றங்களில் முன்னிலையாகின்றார்” என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/73749

6 hours ago, கிருபன் said:

இந்த நிலையில் பல்கலைக்கழங்களில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியமைக்கும் தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் சடத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஒரே வேலைநேரத்தில் இரண்டு சம்பளம் பெறுவது சட்டவிரோதம் என்ட அடிப்படை புத்தி இல்லாத சட்டத்தரணி.

இது போன்ற பேர்வழிகளால் மாணவர்களுக்கு எப்பிடி பயனுள்ள வகையில் வகுப்பெடுக்க முடியும்.

3 hours ago, Rajesh said:

ஒரே வேலைநேரத்தில் இரண்டு சம்பளம் பெறுவது சட்டவிரோதம் என்ட அடிப்படை புத்தி இல்லாத சட்டத்தரணி.

இது போன்ற பேர்வழிகளால் மாணவர்களுக்கு எப்பிடி பயனுள்ள வகையில் வகுப்பெடுக்க முடியும்.

நீங்கள் சொல்லுவது சரிதான்। இருந்தாலும் பொதுவாக இவர்களுக்கு வேலை செய்வதட்கான நேர அடடவனை இருக்கும்। அவர்களது விரிவுரை தவிர்ந்த நேரங்களில் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்। அப்படியான நேரங்களில் இவர் தனிப்படட வேலைகளை செய்திருக்கலாம்।

எனக்கு தெரிந்தபடி பொறியியல் பீட விரிவுரையாளர்கள் அவ்வாறு வேலை செய்வதுண்டு। ஆலோசக (Consultant ) வைத்தியராக இருப்பவர்களும் அப்படி செய்வதுண்டு।

எனவே இவர் எல்லாவற்றையும் கருத்திலெடுத்துக்கொண்டுதான் இந்த வேலையே செய்திருக்கவேண்டுமென்று நினைக்கிறேன் ।

6 hours ago, Vankalayan said:

எனக்கு தெரிந்தபடி பொறியியல் பீட விரிவுரையாளர்கள் அவ்வாறு வேலை செய்வதுண்டு। ஆலோசக (Consultant ) வைத்தியராக இருப்பவர்களும் அப்படி செய்வதுண்டு।

உங்களுக்கு தெரிஞ்சது மட்டும்தான் உண்மை என்று நினைக்காமல் முதல்ல நீங்களெல்லோ எல்லாத்தையும் கருத்துல எடுத்து கருத்தெழுதியிருக்கோணும்.

வைத்தியர்களோ பொறியலாளர்களோ வேலை செய்யும் நேரத்தில வெளிவேலை செய்ய ஏலா. ஆனா அப்பிடி சட்டவிரோதமான செய்றாக்களை நீங்க பாத்திருக்கலாம். ஆனா இவர்கள் தங்கட வசதிக்கேற்ப ஏனைய நேரங்களில வெளிவேலைகளை பிளான் பண்ணலாம். ஆனா புறபஸ்ஸர் மாணவர்களை இரவுல வந்து சந்திங்கோ என்று சொல்லேலா.

நீதிமன்று மாணவர் வசதி பார்த்து வழக்குத் தவணை கொடுக்காது. பிறகு இவர் மாணவர்களை அம்போ என்று விட்டுட்டு கோட்டிலதான் குடியிருப்பார்.

 

15 hours ago, Gowin said:

உங்களுக்கு தெரிஞ்சது மட்டும்தான் உண்மை என்று நினைக்காமல் முதல்ல நீங்களெல்லோ எல்லாத்தையும் கருத்துல எடுத்து கருத்தெழுதியிருக்கோணும்.

 

 

நான் எழுதினதுதான் உண்மை என்று சொல்லவில்லை। எனது கருத்தை கூறினேன்। உங்களுக்கு தமிழ் கொஞ்சம் மட்டுபோல தெரியுது। நான் எழுதினத்தை மீண்டும் வாசித்து பாருங்கள்।

பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு இது விளங்கும்। வைத்தியருக்கும், ஆலோசக வைத்தியருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு। அவர்களுடைய  வேலை செய்யும் நேர அளவுகளிலும்  வித்தியாசம் இருக்கு। இருந்தாலும் நீங்கள் ஒரு மகா ஞானி।

 

18 hours ago, Vankalayan said:

உங்களுக்கு தமிழ் கொஞ்சம் மட்டுபோல தெரியுது।

உலகில நீங்க மட்டும் தான் சகலகலாவல்லவன் என்டு அவிழ்த்துவிடுறீங்கள். அதுக்கு மேல பல்கலைக்கழகத்துல நீக்க படிச்சபடியா மற்ற ஆட்களுக்கு ஒன்டும் விளங்காது என்டு வேற அவிழ்த்துவிடுறீங்கள். போக்கு ஒரு மார்க்கமாத்தான் இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்.

5 hours ago, Rajesh said:

உலகில நீங்க மட்டும் தான் சகலகலாவல்லவன் என்டு அவிழ்த்துவிடுறீங்கள். அதுக்கு மேல பல்கலைக்கழகத்துல நீக்க படிச்சபடியா மற்ற ஆட்களுக்கு ஒன்டும் விளங்காது என்டு வேற அவிழ்த்துவிடுறீங்கள். போக்கு ஒரு மார்க்கமாத்தான் இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்.

அதாவது சடட துறையில் பேராசிரியராக இருக்கும் ஒருவருக்கு சடடம் தெரியாத படித்த முடடாள் என்றும் நீங்கள் படி-------- மேதை என்றும் சொல்ல வருகிறீர்கள்। இப்போது வழக்கு நிலுவையில் இருக்கிறது । முடிவு வந்தபின் தெரியும் யார் முடடாள் யார் மேதை என்று। அது வரையும் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் நல்லது। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.