Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் தலைவர் போன்று மீண்டும் போர்தொடுக்க முடியாது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் தலைவர் போன்று மீண்டும் போர்தொடுக்க முடியாது!

 

மொழியை அடிப்படையாக கொண்டு மோதல்களை உருவாக்குவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க, தேசிய ரீதியான தனித்துவங்களில் கை வைக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்கொண்டது போன்று யுத்தம் செய்ய கூடிய நிலைமை நாட்டில் தற்போது இல்லை என்பதை இரா.சம்பந்தன் உணர்ந்துகொள்ள வேண்டும். நாடு சமாதானமாக முன்னோக்கி செல்ல முயற்சிக்கும் போது அதில் தமிழ் மக்களை ஒன்றிணைப்பதே அரசியல் தலைவர்களாக அவர்கள் செய்ய வேண்டியது.

அந்த வெற்றியை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதே அவர்கள் செய்ய வேண்டியது. இந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு எதிர்கட்சியில் இருந்தாலும் ஜனாதிபதி மற்றும் நாட்டுடன் தொடர்புகளை பேணி விமர்சனங்கள் இருந்தாலும் தேவையான விடயங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

சுதந்திர தினத்தை புறக்கணிப்பது அவர்களின் உரிமை. எனினும் மொழி தொடர்பான பிரச்சினையை மீண்டும் ஏற்படுத்த வேண்டாம் என்பதையே நாம் கூறுகின்றோம். ஏனெனின் அது இந்த நாட்டிற்கு பொருத்தமற்ற ஒன்று. நல்லிணக்கம், சமாதானம், சகவாழ்வு மற்றும் நாட்டின் முன்னோக்கிய பயணித்தை பாதிக்கும். கோட்டாபய ராஜபக்ச முன்னுதாரணமிக்க செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது நாடாக மேலெழுவதற்கு இரா.சம்பந்தன் தரப்பிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொழியை தொடர்பாடலுக்கே பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட வீரகுமார திஸாநாயக்க, தென்னிலங்கையில் தமிழ் கற்பிக்கப்படுவதை போன்று வடக்கிலுள்ள பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிக்கப்படுகின்றதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படவில்லை என்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்தார் என இன்று அநேகமான ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. உலகில் அநேகமான நாடுகளில் தேசிய கீதம் ஒரு மொழியில் மாத்திரமே உள்ளது. இரண்டு மூன்று நாடுகளில் வேறுபாடுகள் உள்ளன.

முன்னுதாரணமாக கூறப்படும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தேசிய கீதம் ஒரு மொழியிலேயே உள்ளது. தேசிய கீதம் பல மொழிகளில் உலகிலுள்ள பல நாடுகளில் இல்லை. மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. தற்போதுள்ள அரசாங்கம், கடந்தகால அரசாங்கம் அதற்கு முன்னைய மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் என இந்த அனைத்து அரசாங்கங்களும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கி, செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன.

அரச சேவையில் பணியாற்றும் தமிழர்களுக்கு விசேட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது. தமிழ் மொழியை பற்றி பேசுகின்ற இரா.சம்பந்தனிடம் நாங்கள் ஒன்றை கேட்க விரும்புகின்றோம். வடக்கில் எந்தப் பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிக்கப்படுகின்றது. எனினும் தெற்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது.

மொழி தொடர்பில் இரா.சம்பந்தனுக்கு பிரச்சினை இருக்குமாயின் அவர்கள் சார்பிலும் ஒத்துழைப்பு அவசியம். மொழி எனக்கு தேவைப்படுவது கோத்திரத்தை உருவாக்க அல்ல. மொழி இருப்பது சிறந்த தொடர்பாடலுக்கே. ஆனால் கோத்திரமாகவே இரா.சம்பந்தன் மொழியை பயன்படுத்துகின்றார். எனினும் நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் சிங்கள மக்களிடையே சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்தும் ஒன்றாகவே நாம் மொழியை பார்க்கின்றோம்.

கோத்திர மொழி என்பதும் தொடர்பாடலுக்கு பயன்படுத்தப்படும் மொழி என்பதும் வேறுபட்டவை. ஆகவே இலங்கையராக சிந்திக்கும் போது தேசிய கீதம் ஒரு மொழியில் இருப்பது பிரச்சினையில்லை. தேசிய ரீதியான தனித்துவங்கள் இருக்கின்றன. தேசிய கீதம், தேசிய கொடி போன்ற தேசிய சின்னங்கள் இருக்கின்றன. அவற்றில் கை வைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/136527

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

முன்னுதாரணமாக கூறப்படும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தேசிய கீதம் ஒரு மொழியிலேயே உள்ளது.

 இருக்கட்டுமே! உங்கள் அரசியல் யாப்பில் உள்ளதை ஏன் மறுக்கிறீர்கள்? தமிழில் பாடுவதால் என்ன குறைந்து விடப்போகிறீர்கள்? இதற்கு மட்டும் இந்தியாவை உதாரணம் காட்டும் நீங்கள் ஏனையவற்றிலும் பின்பற்ற தயாரா? 

1 hour ago, satan said:

இதற்கு மட்டும் இந்தியாவை உதாரணம் காட்டும் நீங்கள் ஏனையவற்றிலும் பின்பற்ற தயாரா? 

ஹிந்திய தேசிய கீதம் ஹிந்தி மொழியில் இல்லை. அது வங்காள மொழியில் சில சம்ஸ்கிருத சொற்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் பிறநாடுகளை உதாரணம் காட்டுபவர்கள் அந்த நாட்டிலுள்ள சமஸ்டி அல்லது கூட்டாச்சி முறையையும் பின்பற்றாமல் வெறுமனே இதற்கு மட்டும் உதாரணம் காட்ட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.