Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டங்களை சீர்குலைக்க கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையில் பாரிய சதி.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டங்களை சீா்குலைக்க கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் தலைமையில் பாாிய சதி..! உறவுகள் குற்றச்சாட்டு..

Missing-Protest-30-4-.png

காணாமல் ஆக்கப்பட்டவா்களை பிாித்தாழும் தந்திரம் ஊடாக மக்களின் கோாிக்கையினை மழுங்கடிக்க கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் முயற்சித்துக் கொண்டிருப்பதாக வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.    

இன்று காலை 11.30 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குற்றம் சாட்டினர்.ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக நாம் நீண்டகால போராட்டத்தினை தொடர் போராட்டமாக முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த நிலையில் குறித்த போராட்டத்தினை பாதிப்படைய செய்யும் வகையிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையிலும் இன்று அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை சிதைத்தும், பிரித்தும் புதிய அமைப்புக்களை உருவாக்கும் செயற்பாடுகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈடுபட்டுள்ளார்.அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தில் கஜேந்திரகுமார் அணியினர் இவ்வாறான செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர். குறித்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தாய்மார் குரல் எழுப்பவில்லை.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமது குரலை எழுப்பியிருந்தால் நாமும் அவர்களுடன் இணைந்திருப்போம். அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கஜேந்திரகுமாரின் அமைப்பாளர் ஒருவரே மக்கள் சார்ந்து குரலினை எழுப்பியிருந்தார். உண்மையில் குறித்த செயற்பாடு பலராலும் பேசப்பட்டது. கஜேந்திரகுமார் கொழும்பில் வளர்ந்தவர்.

அவர் தென்னிலங்கை மக்களோடு தனது உறவுகளை அதிகமாக வளர்த்தவர். இன்று தமிழ் மக்களுக்கு ஏதோ செய்யப்போவதாக கூறிக்கொண்டு இன்று இவ்வாறான  செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்.இவர் இந்தியாவில் திருமணம் செய்து பிள்ளைகளை வெளிநாடுகளில் வளர்க்கின்றார். பிள்ளைகள் வெளிநாட்டு பிரஜைகளாக வளர்க்கப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில் எமது பிரச்சினைகளை இவர் தமது அரசியல் சுயலாபத்திற்காகவே பயன்படுத்துகின்றார் என்பதே உண்மை. இந்த உண்மையை மக்கள் அனைவரும் உணர வேண்டும்.இவர் அரசியலுக்கு வரும்போது இவருக்கு தமிழ் பேச தெரியாது. இப்போது அவர் தமிழ் பேசுகின்ற போதிலும் இவர் தென்னிலங்கையில் அதிகமாக உறவில் இருந்தமையால் சரளமாக பேசத் தெரியாத நிலையிலேயே அரசியலுக்கு வந்தார். இவர் எமது போராட்டத்தை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர். எமது போராட்டம் தவறானது என்று கூறுவதெனில் சரியானதை சுட்டிக்காட்ட வேண்டும்.

எமது போராட்டம் இடம்பெற்றபோது ஒரே ஒருமுறை மாத்திரமே எமது போராட்ட பந்தலுக்கு இவர் வருகை தந்திருந்தார். பின்னர் ஒருபோதும் இவர் வருகை தந்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் எம்மை குற்றம் சாட்டி புதிதாக அமைப்புக்களை உருவாக்குவது இவரது சுயநல அரசியலையே வெளிக்காட்டுகின்றது. இவர் சுயமாகவே ஒருவரை ஒருவர் குறை கூறுபவராக இருக்கின்றார்.

ஆரம்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை குறை கூறிக்கொண்டு இருந்தவர் இன்று விக்னேஸ்வரனை குறை கூறுகின்றார். இவர் வாழ்வு குறை கூறுவதாகவே காணப்படுகின்றது.நாம் ஓஎம்பி அலுவலகத்தை எப்போதும் ஆதரித்தது கிடையாது. சர்வதேசம் குறித்த அலுவலகத்தை நம்பும் வகையில் ஒத்துழைக்குமாறு கூறியது.

குறித்த அலுவலகத்தால் எதையும் செய்ய முடியாது என்பதை சர்வதேசத்திற்கு எடுத்து கூறுவதற்காக நாம் சில முக்கிய சாட்சிகளுடன் கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது விடயத்தை கண்டுபிடித்து தருமாறும் மூன்று மாதம் கால அவகாசம் கொடுத்தோம். அது இன்றுவரை இடம்பெறவில்லை.

இந்த நிலையில் சர்வதேசத்திடம் குறித்த உண்மையை வெளிப்படுத்த உள்ளோம். இவர்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எந்தவொரு விடயத்தையும், நீதியையும் பெற்றுக்கொடுக்க முடியும் என்ற உண்மையை கொண்டு செல்ல உள்ளோம். இவ்வாறான சூழலில் தமது சுயலாபத்திற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர் செயற்படுகின்றனர்.

குறித்த செயற்பாடுகளுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றபோதிலும், எம்மிடம் அவற்றுக்கான ஆதாரம் உள்ளது.கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றில் புதிதாக உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அமைப்பொன்றின் இரு வேறு மாவட்ட தலைவிகளுக்கு மத்தியில் செ.கஜேந்திரன் நின்ற புகைப்படங்கள் உள்ளன.

இவ்வாறு பல உண்மைகள் எம்மிடம் உள்ளது. எனவே மக்கள் இவர்களை அடையாளம் கண்டு, இவர்கள் தமது சுய இலாப அரசியலுக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பதில் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

https://jaffnazone.com/news/15862

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

கஜேந்திரகுமார் குழுவினர் அடிக்கடி சதி செய்யும் குழுவினராக தான் இயங்குகின்றனர்.

சிறிது காலத்துக்கு முன்னர் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் விடயத்தில் அனைவரையும் ஏமாற்றி சதிசெய்து குழப்ப முயன்றனர்.

அதுபோல காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நடத்தும் போராட்டத்தில் ஒருபிரிவினரை ஏமாற்றி அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்த தற்போது சதி செய்து வருகின்றனர்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.