Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை சி.வி வரவேற்றமை தேசத்துரோக செயல்- தயாசிறி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை சி.வி வரவேற்றமை தேசத்துரோக செயல்- தயாசிறி

 

by : Yuganthini

daya.jpg

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடையை, வட.மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் வரவேற்றுள்ளமை தேசத்துரோக செயற்பாடென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளதாவது, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2015 ஆம் ஆண்டு 31/1 பிரேரணயில் கையெழுத்திட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்தமையே தற்போது ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் பிரதான காரணமாகும்.

ஜஸ்மின் சூக்காவின் ஏற்றுக் கொள்ளப்படாத அறிக்கையைக் கொண்டே இராணுவத் தளபதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படாத குற்றங்களை காரணம் காட்டி இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் அமெரிக்கா மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்றது.

அத்தோடு தனிநபர் ஒருவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்காக அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதேவேளை புலம்பெயர் தமிழர்களைப் போன்று விக்னேஷ்வரன் போன்றோர் உள் நாட்டிலிருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர். இது தேசதுரோக செயற்பாடாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இராணுவ-தளபதிக்கு-விதிக்க/

"இதேவேளை புலம்பெயர் தமிழர்களைப் போன்று விக்னேஷ்வரன் போன்றோர் உள் நாட்டிலிருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர். இது தேசதுரோக செயற்பாடாகும்” என குறிப்பிட்டுள்ளார்."

முடிந்தால் உள்நாட்டு சட்டங்களுக்கு அமைய திரு. விக்னேஷ்வரன் மீது நடவடிக்கை எடுங்கள்😄

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தேவைப்படும்போது அமெரிக்காவின் உதவி தேவை. இப்போ அமெரிக்காவை குற்றம் கூறி என்ன பிரயோசனம்?  முடிந்தால் ஆதாரங்களை, அமெரிக்கா செய்த  போர் உதவிகளை திரட்டி அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணையை கோரலாம்.  அடுத்து ஒவ்வொருவராக பட்டியல் நீளும் என்று பதறுகினம். ஏனைய நாடுகளும் இதை பின்பற்றும் என நம்பலாம்.

போற போக்கை பாத்தால் சொறிலங்கா அரசை ஒரு பயங்கரவாத அரசாக பிரகடப்படுத்துவதே சர்வதேசத்துக்கு இருக்கும் ஒரே ஒருவழி போலத் தெரியுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎18‎/‎2020 at 5:52 AM, nunavilan said:

இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை சி.வி வரவேற்றமை தேசத்துரோக செயல்- தயாசிறி

 

by : Yuganthini

daya.jpg

 

அத்தோடு தனிநபர் ஒருவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்காக அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதேவேளை புலம்பெயர் தமிழர்களைப் போன்று விக்னேஷ்வரன் போன்றோர் உள் நாட்டிலிருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர். இது தேசதுரோக செயற்பாடாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இராணுவ-தளபதிக்கு-விதிக்க/

இலங்கையின் இராணுவதளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரியமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் காரணமாக, குறிப்பாக 2009 இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58 வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில்  அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு வெளிநாட்டு அதிகாரியொருவர் பாரிய மனித உரிமை மீறல்கள் அல்லது பாரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்தால் அந்த நபரும் அவருடைய குடும்பத்தவர்களும் அமெரிக்காவிற்குள் நுவைதற்கு தகுதியற்றவர்கள் என இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 தெரிவிக்கின்றது.

சவேந்திர சில்;வாவிற்கு எதிராக தடைவிதிப்பதற்கு அப்பால் அவருடைய குடும்பத்தவர்களிற்கு எதிராகவும் பயணதடைவிதிக்கப்படுகின்றது.

ஐக்கியநாடுகளும் ஏனைய அமைப்புகளும் முன்வைத்துள்ள ஆவணப்படுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நம்பகதன்மை மிக்கவை என அமெரிக்க இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/75669

US bans visits by Sri Lanka army chief over war crimes

The United States said Friday it would refuse entry to Sri Lanka's army chief over “credible” evidence of human rights violations in the bloody 2009 finale to the civil war.

The Department of State has designated Lieutenant General Shavendra Silva, current Commander of the Sri Lanka Army and Acting Chief of Defense Staff, as required under Section 7031(c) of the Department of State, Foreign Operations, and Related Programs Appropriations Act, due to credible information of his involvement, through command responsibility, in gross violations of human rights, namely extrajudicial killings, by the 58th Division of the Sri Lanka Army during the final phase of Sri Lanka’s Civil War in 2009.

Section 7031(c) provides that, in cases where the Secretary of State has credible information that foreign officials have been involved in a gross violation of human rights or significant corruption, those individuals and their immediate family members are ineligible for entry into the United States.  The law also requires the Secretary of State to publicly or privately designate such officials and their immediate family members.  In addition to the public designation of Shavendra Silva, the Department is also designating his immediate family members.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.