Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை குறித்து பிரஸ்­தா­பிக்­காத ஐ.நா.செயலர், மனித உரிமைகள் ஆணையர்

Featured Replies

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஜெனி வாவில் ஆரம்பமாகிய நிலையில், முதலாவது அமர்வில் உரையாற்றிய .நா. செயலாளர் அன்டோனியோ குடரஸ் மற்றும் .நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் இலங்கை தொடர்பாக எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை.

உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் விவகா ரம் மற்றும் காலநிலைமாற்ற சவால் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அன்டோனியோ குட்றஸ்ஸும் மிச்செல் பச்லெட்டும் தமது உரைகளில் கூடிய கவனம் செலுத்தியிருந்தனரே தவிர தனிப்பட்ட நாடுகள் தொடர்பில் அதிகளவு விடயங்களை முன்வைக்கவில்லை.

நேற்றைய ஆரம்ப அமர்வில் இரண்டாவதாக உரையாற்றிய .நா. செயலர் அன்டோனியோ குட்றஸ், மனித கடத்தல்கள் அனைத்துப் பிராந்தியங்களிலும் இடம்பெறுவதாகவும், பொதுமக்கள் சர்வதேச சட்ட மீறல்களுக்கு உட்படுவதாகவும் சுட்டிக் காட்டினார். .நா. செயலர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஊடகவியலாளர்கள் தமது தொழிலை முன்னெடுப்பதன் காரணமாக கொல்லப்படுகின்றனர். சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுமட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பட்டினி நிலைமை அதிகரிப்பதுடன் இஞைர் வேலையின்மையும் உயர்ந்து செல்கின்றது. அத்துடன் குடியியல் மாற்றங்கள், காலநிலை நெருக்கடி என்பன புதிய சவாலாக உருவெடுத்துள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே பதிலே உள்ளது. அது மனித உரிமையாகும்.

மனித உரிமை என்பது அனைத்து பிரஜைகளினதும் பிறப்புரிமையாகும். அவர்கள் அபிவிருத்தியில் உள்வாங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை மூன்றாவதாக உரையாற்றிய .நா. மனித உரிமை ஆணைாயளர் மிட்செல் பச்லெட் உரையாற்றுகையில், வருமையையும் சமத்துவமின்மையையும் குறைப்பதற்கு சமூக ஸ்திரத்தன்மை ஊக்குவிக்கப்படவேண்டும்.

மக்களை பின்னடைவுக்கு இட்டுச் செல்கின்றன அநீதியை ஒழிக்கவேண்டும். எனது அலுவலகம் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயராக இருக்கின்றது. அரசாங்கங்களுக்கான எமது தொழில்நுட்ப உதவிகளை விரிவுபடுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.

 

https://www.virakesari.lk/article/76428

  • தொடங்கியவர்

அழுத்தம் கொடுக்கத் தயாராகும் புலம்பெயர் அமைப்புகள் : மார்ச் 9 இல் ஜெனிவா வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஏற்பாடு

            (ஜெனிவாவிலிருந்து  எஸ்.ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான 30/1 பிரேரணைக் கான அனுசரணையிலிருந்து  விலகிக் கொள்வதாக அரசாங்கம் நாளை யதினம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் இலங்கைக்கு கடும் அழுத்தங்களைப்  பிரயோகிப்பதற்கு புலம் பெயர் அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

geneva_01.jpg

அதன் ஒரு கட்டமாக மார்ச் மாதம் 9ஆம் திகதி புலம்பெயர்ந்து வெளிநாடுகளிள் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை  நடத்துவதற்கும் ஏற்பாடு செய்துள்ளன.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை யின் 43ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும்26ஆம் திகதி இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர்தினேஷ் குணவர்த்தன உரையாற்றவுள்ளதுடன் அதன்போதுஇலங்கையானதுபிரேரணைக்கான அனுசரணையிலிருந்துவிலகவுள்ளதாகஉத்தியோகபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்.

அதேபோன்று 27ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதமும்பேரவையில் நடைபெறவிருக்கிறது. ஐக்கியநாடுகள்மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட்தனது இலங்கை குறித்த அறிக்கையைபேரவையில் 27ஆம் திகதி வெளியிட்ட பின்னரே இலங்கை குறித்த விவாதம் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையிலேயேஇலங்கை மீது சர்வதேசமும்ஐக்கிய நாடுகள் சபையும் அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமெனகுறிப்பிட்டு புலம்பெயர்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதேபோன்று ஜெனிவா வளாகத்தில் பல்வேறு உபகுழுக்கூட்டங்களை நடத்தி இலங்கையானதுபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டுமென்ற விடயத்தைபுலம்பெயர்ந்த அமைப்புக்கள்வலியுறுத்தவுள்ளன.பிரித்தானிய தமிழர் பேரவைஉள்ளிட்ட பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் இவ்வாறுஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்குநடவடிக்கை எடுத்துள்ளதுடன் விசேட உபகுழுக்கூட்டங்களை நடத்தி அழுத்தம் பிரயோகிக்கவும்ஏற்பாடு செய்துள்ளதாகஜெனிவா தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளைபாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மற்றும்இந்திய பிரதிநிதிகள்அரசாங்க பிரதிநிதிகள் எனபல்வேறு பிரதிநிதிகளும் ஜெனிவா நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். நேற்றைய தினம்இலங்கையில் காணாமல்போனோர்களின் உறவினர்களின் சங்கத்தின்தலைவி உட்படநான்கு பிரதிநிதிகள் ஜெனிவாவருகை தந்தனர்.வடமாகாணமுன்னாள் அமைச்சர்அனந்தி சசிதரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்ஜெனிவாவிற்கு வருகைதந்துள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் பல்வேறுநாடுகளிலிருந்துசட்டத்தரணிகள், மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் ஜெனிவா வந்தடைந்தனர.

இலங்கையிலிருந்துஅரசாங்கத்தின் தூதுக்குழுவினர்ஜெனிவா அமர்வில் பங்கேற்கின்றனர்.வெளிவிவகார செயலாளர்ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர் ஏற்கனவே ஜெனிவா வந்துள்ளனர்.வெளிவிவகார அமைச்சர்தினேஷ் குணவர்த்தன இன்றைய தினம்ஜெனிவா வருகை தரவிருக்கிறார்.

இது இவ்வாறிருக்கதமிழகத்திலிருந்துஇம்முறை பல்வேறு தரப்பினர்ஜெனிவாவிற்கு வருகை தருவதற்கு ஏற்பாடாகியுள்ளது.விசேடமாகவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேராசிரியர்களான அருட்தந்தை குழந்தைசாமி ஷேவியர் இளம்பரிதி வைத்திய தாயப்பன் டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரபு மகாராஷ்டிரா மாநில வழக்கறிஞர் நிலேஷ் யுக்கி உள்ளிட்ட பலரும் இம்முறைஜெனிவாவிற்குவருகை தரவுள்ளன..

அதேபோன்றுசர்வதேச மனிதஉரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் செயற்பாட்டாளர்கள் பலரும் ஜெனிவாவில் முகாமிட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் ஜெனிவா வளாகத்தில் நடைபெறும்பல்வேறுஉபகுழுக்கூட்டங்களில்கலந்துகொண்டுதமது கருத்துக்களை வெளியிடவிருக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/76426

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை தமிழர் பக்கம் ஆளணி பலமாய் தான் உள்ளது ஆனால் இவர்கள் ஒற்றை வியூகத்துடன் ஒன்றுபட உழைப்பார்களா அல்லது பேருக்கு தனித்தனியாக இருந்து செயற்பட்டு அனைத்தையும் புஷ்வாணமாக்கி வீணடிப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசை சேர்ந்தவர்கள் யாராவது வருகிறார்களா??

  • தொடங்கியவர்
5 hours ago, ampanai said:

முதலாவது அமர்வில் உரையாற்றிய .நா. செயலாளர் அன்டோனியோ குடரஸ் மற்றும் .நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் இலங்கை தொடர்பாக எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை.

பேசி சாதிப்பதை விட, பேசாமல் எதையாவது உருப்படியாக தமிழ் மக்களின் உரிமைக்காக செய்தால் நன்று.
இராசதந்திர அரசியலில் வெளியில் பேசாமல் தான் பல நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
 

  • தொடங்கியவர்

உலக நாடுகளின் எதிர்ப்பை இலங்கை சந்திக்கும் : ஜெனிவாவில் திருச்சோதி

 

 

கடந்த ஆட்சியிலும் இன அழிப்பு மௌனமாக அரங்கேறியது : ஜெனிவாவில் அனந்தி

 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

பிரித்தானியாவில் இலங்கை இராணுவத்தின் பல குடும்பங்கள்! அடுத்து தடை வருமா?

 

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

ஜெனிவா முன்றலில் ஈழத்தமிருடன் முறுகல்

 

 

 

 

  • தொடங்கியவர்

ஐ.நா மனித உரிமை அமைப்பின் 43 ஆவது கூட்டத்தொடரில் லீலாதேவி அவர்களின் வாய்மூல அறிக்கை

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.