Jump to content

Coronavirus, info and protection


Recommended Posts

கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பது ஏன் கடினமாகிறது?

கோவிட்-19 வைரஸ் கட்டற்று உலகலாவிப் பரவுகிறது என்பது தான் இன்றைய நிலை. ஏன் அவ்வாறு அமைகிறது? ஏன் தடுக்கமுடியவில்லை?. விமான நிலையங்களில் தொற்று உடையவர்கள் வந்திறங்கும் போது, அங்கே அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தியிருந்தால், நோய்த் தொற்று நாட்டுக்குள் வராமல்த் தடுத்திருக்கலாமே? இவை அனைத்தும் நியாயமான கேள்விகளே. இந்த கேள்விகளுக்கான பதில் தான் அதிர்ச்சியானது.

இந்நோய் தோற்றம் கண்ட சீனாவில், ஜந்தில் நான்கு பேர், இந்நோய்த் தொற்றை யாரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களோ, அந்த நபருக்கு;கு தனக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்ப்பட்டுவிட்டது என்பது தெரியாமலே இருந்துள்ளார். அதாவது அவ்வாறானவர்களிடம் நோய்த் தொற்றிக்கான அறிகுறிகள் பெரிதாக வெளிப்படவில்லை. ஆம், அவர்களுக்கு காச்சல் இருக்கவில்லை. அவர்கள் இருமவில்லை அவர்கள் தும்மவில்லை. அவர்கள் சாதாரணமாக சுவாசித்தார்கள். அதேவேளை நோய்த் தொற்று ஏற்ப்படுபவர்களில் அதிகபட்சம் 15 சதவீதமானோரே வைத்தியசாலை சிகிச்சைகளை நாடும் நிலை ஏற்ப்படுகிறது. ஏனையவர்கள் தமது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டே இன்று குணமடைய முனைகின்றனர்.

இப்போது சொல்லுங்கள், அதிகரித்த உடல் வெப்பநிலை இருக்கிறதா? இருமல், தும்மலுடன் ஒருவர் வருகின்றாரா? என விமானநிலையங்களிலோ, விமானங்களில் ஏற்றுவதற்கு முன்னரோ, சோதித்துப் பார்த்தால், 20 சதவீதமோ அல்லது அதற்கு குறைவானவர்களே மாட்டிக் கொள்ளுவார்கள். 80 சதவீதமோ அலலது அதற்கு மேற்ப்பட்டவர்கள், நழுவிச் சென்றுவிடுவார்கள். சரி அது சாத்தியமில்லை என்பது தற்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நாட்டிற்குள் கட்டுப்படுத்துவதில் என்ன சவால்? இங்கும் அதே சவால தான். தனக்கு நோய்த் தொற்று உண்டு என்று தெரியாமலே, ஏற்கனவே கோவிட்-19 நோய்த் தொற்றுடைய 80 சதவீதமோ அல்லது அதற்கு மேற்ப்பட்டோர், ஏனையவர்களுக்கு பரப்பிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் வாய்ப்பு அதிகமே. அவர்கள் தாங்களாகவே சோதனைக்கு வரப்போவதில்லை. இதனால் தான் நாடுகளை பல வழிகளில் முடக்கவேண்டிய தேவை அதிகரிக்கிறது. அதேவேளை நோய்ப் பரம்பலின் வேகத்தை சரியாக அறிந்தாலே, அது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிறப்பாக திட்டமிட முடியும் என்பதையும் கருத்தில் கொண்டே, உலக சுகாதார நிறுவனம் சோதனை, சோதனை, சோதனை, என மீண்டும், மீண்டும் அலறுகிறது.

சரி, எழுந்தமான சோதனைகளை அதிகரிக்கலாம் தானே? என நீங்கள் கேட்டால், அது சரியான யோசனை தான். இங்கு தான் அடுத்த சிக்கல் வெடிக்கிறது. சோதனை செய்வதற்கான போதிய சோதனைப்பொதிகள் இன்றி, இன்றும் அல்லாடுகிறது அமெரிக்காவே. அவ்வாறானால் ஏனைய நாடுகளின் நிலையை ஒரு முறை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.. இருக்க உலகில் இன்று அனைத்து நாடுகளும், நோய்த் தொற்றிக்கு இலக்காகி, அவற்றின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் நிலையில், இந்தப் சோதனைப் பொதிகளை யாரும் இன்னொவருக்கு வழங்கும் நிலையில் இல்லை. இதனால் நாளும் அதிகரித்துச் செல்லும் தொற்றின் எண்ணிக்கை எல்லை கடக்கிறது என்பதே உண்மை. முன்னேற்ப்பாடாக இருந்திராத நிலையில், துரத்தியாவது பிடிக்க முயன்று, அதில் மோசமாக நாம் இன்று உலகளாவிய நிலையில், தோற்றுக் கொண்டிருக்கிறோம். இந்நிலை சொல்லும் செய்தி, இன்று நாளும் வெளியாகும் புதிய நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை, வெறும் சிறு துண்டு தான். அதே போன்று இறந்துபோகும் பலர், முன்கூட்டியே நோய்த் தொற்று உடையவர்கள் என்று கண்டறியப்படாததால், கோவிட்-19 இறப்பு எண்ணிக்கையிலும் அடங்கமாட்டார்கள். இந்நிலையில், உங்களையும், உங்களைச் சுற்றி இருப்பவர்களையும், காத்துக் கொள்வதில் புரிதலுடன் அதீத கவனம் எடுத்துச் செயற்பட்டுக் கொள்ளுங்கள்..

முகநூல் 

 

Link to comment
Share on other sites

  • Replies 200
  • Created
  • Last Reply

அடுத்து என்ன?

அடுத்து என்ன? என்பது குறித்த ஒரு தெளிவான பார்வை இன்றி உலக அரசியல்வாதிகள் அல்லாடுகின்றனர். அறிஞர்கள் இப்புதியவகை வைரசை எதிர்கொள்வது எவ்வாறு என்று வழிகாட்டுவதற்கான தீர்க்கமான முடிவுகளுக்கு போதிய தரவுகள் இன்றி தவிக்கின்றனர்

சீரிய திட்டமிடலுக்கு போதிய அவகாசத்தை வழங்காது கோவிட்-19 வேகமான பரம்பலை மேற்கொள்கிறது. அது நாட்கள் செல்லச் செல்ல மேலும் வலுப்பெறுகிறதா? வட்டகைக்கு வட்டகை அதன் தாக்கம் மாறுபடுகின்றதா? எனத் தேடுதல்கள் குவிகின்றன. அன்றாட வாழ்க்கையில் சவால்கள் தொடர்ந்தும் இதனால் அதிகரிக்கின்றன. வேலைவாய்பிழப்பு, வருமானம், வீட்டிற்குள் முடக்கம், கல்வி முடக்கம், சுகாதார அனுசரணை எனப் பலவிடயங்கள் முதன்மையாகின்றன. இவை அங்கலாப்பையும், மன அழுத்தத்தையும் அனைவரிடமும், அனைத்து வயதிலும் அதிகரிக்கிறது.

இருதயநோய் உள்ளவர்கள், நீரழிவு நோய் உள்ளவர்கள், ஆஸ்மா போன்றவையினூடாக துரையீரல் பாதிப்பு உடையவர்கள், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், புற்றுநோய்த் தாக்கம் உடையவர்கள் ஆகியோருக்கு இத்தொற்று ஏற்ப்பட்டால் அது அவர்களில் அதிகரித்த தாக்கத்தை ஏற்ப்படுத்திவிடும் என்பதே தரவு.

கனடாவிலும், இங்கிலாந்திலும் மேற்க்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தென்ஆசியர்கள் இந்நாடுகளில் உள்ளவர்களை விட மேற்கண்ட தாக்கங்களை மூன்று மடங்கு அதிகமாக கொண்டிருப்பதாக கண்டறியக்கட்டுள்ளது. ஆகவே மேற்குலகில் வாழுகின்ற புலம்பெயர் தமிழர் சமூகம் இதனால் அதிகரித்த தாக்கத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகமே. எனவே இச்சவாலை ஒரு சமூகமாக எதிர்கொள்வோம். ஒருவருக்கு ஒருவர் ஆதாரசக்தியாக, உளவள துணையாக தாங்கி நிற்ப்போம்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை

 

உலகில் எம்மை அனைத்து முறைமைகளிலும், ஆற்றல் உள்ள வலிமைமிக்க சமூகமாக வெளிப்படவேண்டும் என்பதற்காவும், அதியுயர் ஈகத்தை செய்த எங்கள் வீரமறவர்களின் அந்தக்கனவைத் தாங்கி, இன்றைய சவாலையும் ஒரு சமூகமாக தீர்க்கமான செயற்பாடுகளுடன் நாம் எதிர்கொள்ளவேண்டும். இன்றைய நிலையிலாவது, ஒரு ஒற்றுமை எம் சமூகத்தில் ஏற்ப்படட்டும். அந்தப் பொறுப்பை அனைவரும் ஏற்ப்போம். எமது சமூகத்தில் உள்ள அனைத்துத்துறைசார் வல்லுனர்களும், சமூகத்தின் நலன்சார்ந்து இணையும் புள்ளி ஒன்று இங்கு வெளிப்படுகிறது. இன்றைய சவாலையும் ஏனைய சமூகங்களைவிட சிறப்பாக இப்பூமிப்பந்தில் கடந்தோம் என்பது வரலாறாகட்டும். தொடர்ந்தும் நிறையவே தயார் படுத்தலுக்கான தகவல்களுடன் சந்தித்துக் கொள்வோம்.

 

 

முகநூல் பதிவு ஒன்றில் இருந்து சில மாற்றங்களுடன் 

Link to comment
Share on other sites

காலச்சக்கரம்
பெய்ஜிங் சீனாவில் இருந்து இணைகிறார்
மருத்துவர் சி சதீஸ்குமார்
தொகுத்து வழங்குவது
சி ஸ்ரீகுமார்

UzpfSTY1NTcwNTI2MToxMDE2MzA5ODAxNDU0NTI2

UzpfSTY1NTcwNTI2MToxMDE2MzA5ODAxNDU0NTI2

Link to comment
Share on other sites

Coronavirus: When will the outbreak end and life get back to normal?

 

It is clear the current strategy of shutting down large parts of society is not sustainable in the long-term. The social and economic damage would be catastrophic.

What countries need is an "exit strategy" - a way of lifting the restrictions and getting back to normal.

But the coronavirus is not going to disappear.

If you lift the restrictions that are holding the virus back, then cases will inevitably soar.

"We do have a big problem in what the exit strategy is and how we get out of this," says Mark Woolhouse, a professor of infectious disease epidemiology at the University of Edinburgh.

"It's not just the UK, no country has an exit strategy."

It is a massive scientific and societal challenge.

https://www.bbc.com/news/health-51963486

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 'For people who still don't take it seriously. ITALY: February 23: 155 Cases February 28: 888 Cases March 18: 41,035 Cases Canada March 13: March 19: 150 Cases 801 Cases Wash your hands Do your Part Stay at Home' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

Link to comment
Share on other sites

தண்ணீரையும் 'ப்ளீச்சையும்' சேர்த்து வீட்டில் கோவிட்டை அழிக்கும் திரவத்தை தயாரித்து வீட்டில் பாவிக்கலாம்.  

 

Link to comment
Share on other sites

Hydroxychloroquine and azithromycin as a treatment of COVID-19: results of an openlabel non-randomized clinical trial

Hydroxychloroquine_final_DOI_IJAA-24-1024x546.jpg

https://www.mediterranee-infection.com/hydroxychloroquine-and-azithromycin-as-a-treatment-of-covid-19/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
    • உந்த‌ இஸ்கோர‌ பார்த்து  ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது   கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை......................................... ஜ‌பில் வ‌ர‌லாற்றில் ஒரு போட்டியில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிச்ச‌து என்றால் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தான் என்று நினைக்கிறேன் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் 168 அடிச்சாலே போதும் வெற்றிய‌ உறுதிய‌ செய்ய‌ ஆனால் இப்ப‌ 261 ர‌ன்ஸ் அடிச்சும் எதிர் அணி அடிச்சாடி வெல்லுகின‌ம் என்றால் பிச்ச‌ கால‌ப் போக்கில் மாற்றி விட்டின‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாக‌.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.