Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிக்கிறது - மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிக்கிறது - மாவை

வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

mavai.jpg

பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டியில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

நாட்டில் என்றுமில்லாத வகையில் கடந்த காலத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைந்து ஒரு நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தது. இந்தக் காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 

வடக்கிற்கு அதிகளவான  அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் இந்தக் காலப்பகுதியில் தான், இருப்பினும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்  அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக முன்னைய அரசாங்கத்தால் ஒதுக்கீடுசெய்யப்பட  நிதியை  இந்த அரசாங்கம் விடுவிக்காது செயற்பட்டு வருகின்றது. 

அது மட்டுமன்றி கடந்த அரசாங்கத்தால் செய்யப்பட்டு வந்த வேலைத்திட்டங்களையும் இடை நிறுத்தியுள்ளது. தேர்தலுக்கு பின்னரான சூழலில் தமிழ் மக்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்ற சூழலில் ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளையும் அதிலிருந்து விலகுவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இது ஒரு புறம் இருக்க மறுபுறத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக்கூறி அந்த நேர்முகத் தேர்வில் இராணுவத்தினரைப் பயன்படுத்தியுள்ளது. வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் குழப்பி இராணுவ ஆட்சிக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கான முயற்யாகவே இதன் வெளிப்பாடு உள்ளது. இத்தகைய விடையங்களை தமிழ் மக்கள் சரியாக முறையாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இங்குள்ள சிலரும் இணைந்து செயற்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது. தமிழ் மக்கள் கடந்த காலங்களில்தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எவ்வாறு ஆதரவை வழங்கினார்களோ! அத்தகைய ஆதரவை தொடர்ந்தும் வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தவேண்டும். என தெரிவித்தார்.

fgwer__3_.jpg

 

https://www.virakesari.lk/article/76772

 

17 minutes ago, கிருபன் said:

நாட்டில் என்றுமில்லாத வகையில் கடந்த காலத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைந்து ஒரு நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தது. இந்தக் காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன

அந்த ஐந்து வருடங்களிலும் என்ன சாதனைகளை இவர்கள் மைத்திரி - இரணில் அரசில் செய்தார்கள் ? ஏன் எந்த தீர்வையும் அவர்களால் தரமுடியவில்லை? இல்லை தந்து தான் இருப்பார்கள் என நம்பவைப்பதும் ஏமாற்று வேலை தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

அந்த ஐந்து வருடங்களிலும் என்ன சாதனைகளை இவர்கள் மைத்திரி - இரணில் அரசில் செய்தார்கள் ? ஏன் எந்த தீர்வையும் அவர்களால் தரமுடியவில்லை? இல்லை தந்து தான் இருப்பார்கள் என நம்பவைப்பதும் ஏமாற்று வேலை

101% உண்மை 👌

  • கருத்துக்கள உறவுகள்

தந்துதான் இருக்கினம்...பை நிறைய காசு...போதாக்குறைக்கு மாட மாளிகை...இனி அவை வந்து மகன் பேரப்பிள்ளை குடும்பத்துக்கு குடுக்க வென்றாலும் மீளவும் ஆட்சிக்கு வரவேண்டும்..

On 2/29/2020 at 6:23 PM, கிருபன் said:

வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிக்கிறது - மாவை

கடந்த 5 வருஷத்துல கூட்டமைப்பின் சாதனை.

  • மாவையின் மகன் அரசியலில். குடும்ப அரசியல்.
  • சம்பந்தனுக்கு கொழும்பில ஒரு சொகுசு வீடு.
  • சுமந்திரன் ரணிலிடமிருந்தும் கனடாவில இருந்து கோடி கோடியா பணம் சுருட்டினார்.
  • செல்வம் அடைக்கலநாதன் குழுத்தலைவர் என்டு அரச பாதுகாப்போட சொகுசு பயணம், மகனுக்கு மத்திய வங்கில வேலை வாய்ப்பு
  • பாராளுமன்றதுல ஒவ்வொருக்காவும் கைதூக்கேக்க கோடி கோடியா பணம் போகேற்றுக்குள்ள.
  • சுமந்திரன் சொறிலங்கா அரசுக்கு காலத்தை கடத்த கால அவகாசம் கிடைக்க நாய்படாதபாடா அலைஞ்சார். அதால மந்திரி பதவி தேடிவந்தும் பெறமுடியாத சூழ்நிலை
  • சுமந்திரன் புனையப்பட்ட ஒரு கொலை முயற்சி மூலம் அரச பாதுகாப்போட சொகுசு பயணம்,
  • அரசியல் கைதிகள் விடுவிக்க படேலை
  • பல காணிகள் விடுவிக்க படேலை
  • கல்முனை பிரதேச சபை இன்னுமில்லை
  • சரவணபவன் ஜனாதிபதியை வீட்டுக்கு கூப்பிட்டு பர்த்டே கொண்டாடினார்
  • சொறிலங்கா அரசுக்கு எதிரா ஐநா சென்ற அனந்தி சசிதரனால் வெகுண்ட சம்பந்தன்-சுமந்திரன்-மாவை கோஷ்டி அவவை கட்சியை விட்டு துரத்தினர்
  • சுமந்திரன், மாவை சொறிலங்கா அரசோட விக்கியை துரத்த பலசதிகளை செய்து அவரை வெளியேற்றினர்
  • கூட்டமைப்பிலிருந்து சுரேஷ் கட்சியை வெளியேற்றினர்
  • சுரேஷ் கட்சியை சேர்ந்த சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ள முடியாமல் தடைகளை சம்பந்தன்-சுமந்திரன்-மாவை கோஷ்டி ஏற்படுத்தினர்

இப்பிடி 5 வருஷத்துல கூட்டமைப்பின் தமிழின விரோத செயல்களை பக்கம் பக்கமா அடுக்கிக்கொண்டே போகலாம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.