Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மாவை சேனாதிராசா சுமந்திரன் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” நிகழ்வில் கலாநிதி கணேசலிங்கம் முன்வைத்த ஆய்வுக்குரிய கருத்துக்களுக்கு  நன்றி.

“ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” என்பது வடகிழக்கு தலைமையை ஏற்றுக்கொண்டு பயணிப்பதே என்பதை கொழும்பு தலைவர்கள் உணரவேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் விமர்சன நீதியாக வடகிழக்கு மக்கள் தெரிவுசெய்யும் தலைமையுடன் [ஏசி அனுசரணையாக செயல்படவேண்டும். . 

தமிழரசுக் கட்ச்சியும் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்ச்சி வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலை தருகிறது. கடந்த காலத்தில் தமிழர் தலைமை யாழ்பாணம் வன்னி, மற்றும் திருமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் கொழும்பிலும் இருந்து தெரிவானவர்களின் சமத்துவத்தையும் ஜனநாயக ரீதியான தீர்மானங்களையும் அடியொற்றி செயல்படவில்லை.

தமிழரசுக் கட்ச்சியின் வரலாறு நமக்கு நிறைய கற்பிக்கிறது. நாம்தான் கற்றுக்கொள்வதில்லை. கொழும்பு தமிழர்கள் கட்சி அரசியல் பணிக்கு மிக மிக அவசியமானவர்கள் ஆனால் கட்சி வடகிழக்கு மாகாண மக்கள் தலைமையின்கீழ் மட்டுமே  இயங்க வேண்டும். இதுதான் சத்தியாகைரகத்தின் தோல்வியின் பின்னான வரலாறும் அரை நூற்றாண்டின்பின்னர் ஆயுதப் போராட்டத்தின் பின்னைய வரலாறும் உரத்துச் சொல்கிறது.

 1949 டிசம்பரில் ஆரம்பிக்கபட தமிழரசுக்கட்ச்சி   1961 வரைக்கும் ஜனநாயக ரீதியில் ஐக்கிய வடமாகாண கிழக்கு மாகாண மக்களின் சமத்துவமான தலைமையின்கீழ் இயங்கியது. திருச்செல்வம் போன்ற கொழும்பு தலைவர்கள் கட்ச்சிக்கு கட்டுப்பட்டு தொழிற்சங்கம் போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாகவே செயல்பட்டனர். சத்தியாக் கிரகத்தின் தோல்விக்குப் பிறகு  திருச்செல்வம் செல்வநாயகம் ஐயாவை முடக்கி வைத்துக்கொண்டு கட்சி தலமையை இயக்கினார். தமிழரின் படு தோல்விகளுக்கு ஒருகாலத்தில் கட்ச்சிக்கு கட்டுப்பட்டு சிறப்பாக பணியாற்றிய திருச்செல்வத்தின் தலைமை ஆசையே காலானது.

அதேபோல வடகிழக்கு மாகாணத் தலைமைக்கு கட்டுப்பட்டு சிறந்த கட்ச்சியணியாளராக செயல்பட்டிருக்கக்கூடிய  கொழும்பு தமிழர் நீலன் திருச்செல்வமும் வடகிழக்கு மாகாணத் தலைமையின் உறுதியின்மையால் தலமைக்கு ஆசைபட்டு யு.என்.பியின் நோக்கங்களுக்கு இசைந்து  தோல்விகளுக்கு வழிவகுத்தார்.   

போருக்குப்பின்னான விரக்தியும்  குறிப்பாக சம்பந்தர் ஐயா போன்ற வடகிழக்கு தலைவர்களின் முதுமை விரக்தி என்பவை மீண்டும் வடகிழக்கு தலைமையை பலகீனப்படுத்தியுள்ளது. இது 1960பதுகளில் சத்தியாக் கிரக தோல்வியின்பின்னர் வடகிழக்குத் தலைமை செயலிழந்த சூழலை ஒத்த நிலமையாகும். இதுதான் ஒழுங்காக கட்ச்சிப் பணி ஆற்றிய திருச்செல்வம் போன்ற கொழும்புத்தமிழர்கள் கட்ச்சியைக் கைப்பற்றிய காலக்கட்டம். கொழும்பு தமிழ் தலைமை  தமிழர் வல்லமைகளை ஐக்கியதேசிய கட்ச்சிக்கு அடைவு வைத்து நேரடியாகவும் மறைமுகமாகவும் அமைச்சு அதிகாரங்களை அனுபவித்த காலம்.  

1960களில் ஏற்பட்ட சத்தியாக்கிரக தோல்வி போலவே சரியாக அரைநூற்றாண்டின் பின்னர் ஏற்பட்ட  ஆயுதப் போராட்டத்தின் பெரும் தோல்வியும் வடகிழக்கு ஈழ தமிழர்களின் போராட்டத் தலைமையை விரக்தியும் துரோகங்களும் நிறைந்த ஒரு காலகட்டத்தினுக்குள் தள்ளிவிட்டது. 

திருச்செல்வம் நீலந்திருச்செல்வம்போலவே கட்சியின் பணிகளுக்கும் வடகிழக்கு தலைமைக்கு கட்டுப்பட்டு பொறுப்புகளை நிர்வகிப்பதற்க்கும் கொழும்புத் தமிழரான சுமந்திரன் மிகவும் வல்லமையுள்ளவர்.

திருச்செல்வங்கள் விட்ட தவறுகளை தொடரமால் சுமந்திரன் வடகிழக்கின் தலமைப் பாத்திரத்தை வகிப்பவர்கள் கருத்தை விவாதித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்த விடயமாயினும்   கட்சியின் முடிவுகளை   ஏற்று கட்ச்சிக்குக் கட்டுபட்டு  கழப் பணியாற்றவேண்டுமென பணிவன்புடன் கோருகிறேன்.  

 

 

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவறுநிகழ்ந்துவிட்டது. திருத்தி வாசிக்கவும்.

.

திருச்செல்வங்கள் விட்ட தவறுகளை தொடரமால் சுமந்திரன் வடகிழக்கின் தலமைப் பாத்திரத்தை வகிப்பவர்கள் கருத்தை விவாதித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்த விடயமாயினும்   கட்சியின் முடிவுகளை   ஏற்று கட்ச்சிக்குக் கட்டுபட்டு  கழப் பணியாற்றவேண்டுமென பணிவன்புடன் கோருகிறேன்.  

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.