Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ் தொற்று – 3 ஆயிரத்தை அண்மிக்கும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

wuhan-coronavirus-768x512-1-720x450.jpg

கொரோனா வைரஸ் தொற்று – 3 ஆயிரத்தை அண்மிக்கும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை

கொவைட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,992ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 2,870 போ் சீன வைத்தியசாலைகளில் உயிரிழந்தவா்கள் ஆவா்.

ஏற்கெனவே ஈரான், தென் கொரியா, ஜப்பான், தாய்வான், பிலிப்பைன்ஸ், ஹொங்கொங், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழந்த 122 பேரையும் சோ்த்து, கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,992 ஆக உயா்ந்துள்ளது.

மேலும் 87,651 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உருவான சீனாவில், அந்த வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 573 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதையடுத்து, அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 79,826ஆக அதிகரித்துள்ளது என சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 7,825 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 87,651ஆக உயா்ந்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டமை ஆய்வில் தெரியவந்தது.

மனிதா்களின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘கொரோனா வைரஸ்’ வகையைச் சோ்ந்த அது, சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்தனா்.

அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது.

மேலும் ‘கொரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ என்று அந்த அமைப்பு பெயரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தொற்று-3-ஆயிர/

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: 10 நாடுகள், 3000 மரணம் - உலகம் வெல்லுமா? - கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்
 
கொரோனா வைரஸ்: 10 நாடுகள் 3000 மரணம் - முடியுமா அல்லது நீடிக்குமா? - சில தகவல்கள்படத்தின் காப்புரிமை Getty Images

நேரடியாக சொல்ல வேண்டுமானால் கொரோனாவின் கொட்டத்தை யார் அடக்குவார் என்ற கேள்விதான் இப்போது சர்வதேச அளவில் பேசு பொருளாக இருக்கிறது.

 

இதுநாள் வரை கொரோனா வைரஸால் 3000 பேர் இறந்திருக்கிறார்கள். சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை மேலும் 42 அதிகரித்து இருக்கிறது. இதுவரை சீனாவில் மட்டும் 2912 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலான மரணங்கள் சீனாவின் ஹூபே மாகாணத்தில்தான் பதிவாகி இருக்கிறது.

சரி கொரோனா வைரஸ் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.

  • கொரோனா வைரஸ் காரணமாக இப்போதுவரை 10 நாடுகளில் 3000 பேர் பலியாகி உள்ளனர். பெரும்பாலான மரணங்கள் சீனாவில்தான் என்றாலும், தென்கொரியா, இரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் கணிசமான பேர் பலியாகி இருக்கிறார்கள்.
  • இரானில் 50க்கும் அதிகமான பேரும், இத்தாலியில் 30க்கும் அதிகமான பேரும் பலியாகி உள்ளனர்.
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி இருக்கிறது. இப்போது வரை 90 ஆயிரம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. பிரிட்டனில் இதுவரை 36 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்: 10 நாடுகள் 3000 மரணம் - முடியுமா அல்லது நீடிக்குமா? - சில தகவல்கள்படத்தின் காப்புரிமை Getty Images
  • உலகின் அனைத்து திசைகளிலும் கொரோனா பரவி இருக்கிறது. கம்போடியா தொடங்கி கத்தார் வரை. சீனா தொடங்கி அமெரிக்கா வரை என எல்லா கண்டங்களிலும் இந்த வைரஸ் பரவி இருக்கிறது.
  • கொரோனாவால் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதை தாண்டியவர்கள்.
  • இத்தாலியில் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
  • சீனாவுக்கு அடுத்தப்படியாக தென் கொரியாவில்தான் அதிக பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குமட்டும் 3081 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.
  • தென்கொரியாவில் நிகழ்ந்த சில கொரோனா வைரஸ் மரணங்கள் தொடர்பாக, அந்நாட்டில் உள்ள மதப்பிரிவு ஒன்றின் தலைவர் கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.ஷின்சியோன்ஜி திருச்சபையின் நிறுவனர் லீ மான்-ஹீ மற்றும் 11 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதியும்படி தலைநகர் சோல் நகர அரசு தமது புலனாய்வு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாக, யார் யாருக்கு இந்த நோய் பரவியிருக்கக் கூடும் என்று ஒரு பட்டிலைத் தயாரிப்பதற்கு அதிகாரிகள் முயன்றபோது தங்கள் திருச்சபையின் சில உறுப்பினர்களின் பெயர்களை மறைத்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Presentational grey line
  • அறுபது வயதை தாண்டியவர்களைதான் கொரோனா வைரஸ் சுலபமாக தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.
  • கொரோனா வைரஸ் காரணமாக சீனா உற்பத்தி துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டு பொருளாதாரத்தில் பெரிய அளவில் தாக்கத்தை செலுத்தும்.

https://www.bbc.com/tamil/global-51701265

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.