Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியை கொலை செய்ய சதி - ஆறு பேர் கைது - இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள்தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியை கொலை செய்ய சதி - ஆறு பேர் கைது - இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள்தகவல்

வடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியொருவரை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகள் தெரியவந்துள்ளதை தொடர்ந்து வடக்குகிழக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர்  செய்திவெளியிட்டுள்ளது.

முக்கிய தமிழ் அரசியல்வாதியை கொலை செய்வதற்கு திட்டமிட்ட ஆறு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க  போராளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

வடபகுதியில் பயங்கரவாத விசாரணை பிரிவினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இணைந்து வீடொன்றை முற்றுகையிட்டு சோதனையிட்டவேளை நவீன தொலைத்தொடர்பு கருவிகளையும் வெடிபொருட்களையும் மீட்டுள்ளனர் எனவும்  டெய்லி மிரர் தெரிவித்துள்ளது

 முதலில் ஜேர்மனியின் கடவுச்சீட்டை வைத்திருந்த முன்னாள் போராளியொருவர் கைதுசெய்யப்பட்டார் அதன் பின்னர்  மறைவிடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது ஏனையவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

army_jaffna.jpg

மேற்குலக நாடுகளிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இந்த குழுவினரிற்கு நிதிஉதவி வழங்கியுள்ளனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் விசேட பயிற்சிகளை பெற்றுள்ளனர் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் நிதி மற்றும் ஏனைய ஆதரவை வழங்கியுள்ளனர் என இலங்கை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக சர்வதேச அமைப்புகளின் உதவி நாடப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 

 

https://www.virakesari.lk/article/77291

3 hours ago, கிருபன் said:

இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் நிதி மற்றும் ஏனைய ஆதரவை வழங்கியுள்ளனர் என இலங்கை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக சர்வதேச அமைப்புகளின் உதவி நாடப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அண்மையில் மலேசியாவில் இருந்து வந்த செய்தி சிங்கள அரசிற்கு சாதகமாக இருக்கவில்லை. ஆக, மலேசிய அரசிற்கு அழுத்தம் தர புனைக்கப்பட்ட செய்தியா?, என எண்ணத்தோன்றுகின்றது. 

மலேசியாவுடன் இந்தியாவும் இணைப்பது ஏன் என்று வினவத்தோன்றுகின்றது. நாம் தமிழர் கட்சி ?? 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தேர்தல் நெருங்கும் போதும் வடக்கின் சில முக்கிய அரசியல்வியாதிகள் சிங்கள  ஆட்சியாளர்களினதும்.. இராணுவத்தினதும் உட்தயவோடு.. இப்படியான தங்கள் சுயலாப அரசியல்.. விளம்பர நாடகங்களை நடத்தி.. அப்பாவி முன்னாள் போராளிகளை நிரந்தரமாக சிறையில் வைத்து விடுகின்றனர். 

நீதியே செத்துவிட்ட சொறீலங்கா போன்ற தேசங்கள்.... உலகில் இருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வி தான் எழுகிறது இன்று..??! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யார் அப்பா அந்த முக்கிய தமிழ் அரசியல்வாதி. எங்கு, எப்போது, எப்படி முக்கினார் என்றும் சொன்னால் யார் என்று கண்டுபிடித்திடலாம்.

Edited by vanangaamudi

வருங்காலத்தில் இராணுவ கெடுபிடிகள் அதிகரிக்கும் ; விக்கி 

வருங்காலத்தில் இராணுவ கெடுபிடிகள் அதிகரிக்கும் என தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் வடமராட்சி, கரணவாய் மேற்கு அந்திரான் குடியிருப்பு மக்களுடன் இடம் பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வட கிழக்கு மக்களிடையே அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றங்களை  சமாந்திரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எமது குறிக்கோள். அரசியலிலே எமது தன்னாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். வட கிழக்கு இணைவு மற்றும் தமிழர் தாயகத்தில் தன்னாட்சியானது சமஸ்டி ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதற்குக் காரணம் உண்டு.

பலர் கிழக்கைப் பற்றிப்பேசி அங்கு சிங்கள, முஸ்லீம் பெரும்பான்மையினர் மத்தியில் எவ்வாறு வடகிழக்கு இணைப்பை உறுதிப்படுத்தப் போகின்றீர்கள் என்று கேட்கின்றார்கள். அதனால் வட கிழக்கு இணைப்பை விட்டுவிடக் கோருகின்றார்கள். முஸ்லிம் மக்கள் தமிழ் பேசுகின்றவர்கள். வட கிழக்கு தமிழ் பேசும் பிராந்தியங்கள் கிழக்கிலும் தமிழ்மொழி பேசுவோரே பெரும்பான்மையினர்.

ஆகவே வலுப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். எமது ஏற்றுமதிகளைகூட்டி  இறக்குமதிகளைக் குறைக்கப் பாடுபட வேண்டும். எந்தவொரு அவசரகால நிலைமையிலும் நாங்கள் எங்களைப் பாதுகாப்பான நிலையில் வைத்துக்கொள்ள சேர்ந்து ஆவன செய்ய வேண்டும். வருங்காலத்தில் இராணுவ கெடுபிடிகள் கூடக்கூடும். அவர்கள் பிழைகள் செய்தால் அவர்களை அடையாளம் காட்டக்கூடியதாக நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொருளாதார ரீதியாக எம் மக்கள் தன்நிறைவு அடைய நாங்கள் எமது கடல் கடந்த உறவுகளின் உதவியை நாடியுள்ளோம். எமக்கென ஒரு நம்பிக்கைப்பொறுப்பை எமது கட்சி தொடங்கியுள்ளது. வெளிநாட்டு உள்நாட்டுப் பணங்கள் யாவும் நம்பிக்கைப் பொறுப்பால் ஏற்கப்பட்டு உரியவாறான செயற்றிட்டங்களை வட கிழக்கு மாகாணங்களில் இப்போது செய்து கொண்டு வருகின்றோம்.

இரணைதீவில் கடலட்டை வளர்க்குந் திட்டம் தற்போது மிக வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கின்றது. கனடாவில் கிடைத்த பணத்தை வைத்து அதை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

அடுத்து மட்டக்களப்பில் இரு செயற்றிட்டங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. உங்கள் மக்களுக்கு, முக்கியமாக போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அவர்கள் சேர்ந்து தம்மை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்தவும் தன்னிறைவை ஏய்தவும் அதற்கேற்ற செயற்றிட்டங்களை எமக்கு அடையாளப்படுத்தினால் அவற்றை நாம் பரிசீலித்துப் பார்த்து உரிய உதவிகள் செய்யக் காத்து நிற்கின்றோம். என்றார்.

இச் சந்திப்பில் வடமராட்சி அமைப்பாளர் இரா.மயூதரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், மற்றும் கிராம மக்கள் என் சுமார் நூறு பேர்வரை கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/77360

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.