Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடைமேலும் நீடிப்பு

October 20, 2021
 

spacer.png

 

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரிய தரப்பினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
 

https://globaltamilnews.net/2021/167471

  • Replies 1.1k
  • Views 268.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸ் கொழும்பில் அடையாளம்!

கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் குறித்த எச்சரிக்கை – ஒன்றுகூடுவதை நிறுத்துமாறு கோரிக்கை!

இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் ஏற்கனவே பரவியிருந்த டெல்டா பிளஸ் குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை, இந்த மாற்றங்களின் விளைவாக நாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் எனினும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள சுகாதார மேம்பாட்டு அலுவலக பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ, சுகாதார அதிகாரிகளின் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் பெரும்பாலான மக்கள், குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்காதது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றதால், சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதை நிறுத்திய பெரிய மக்கள்தொகை கொண்ட சில நாடுகளையும் டெல்டா பிளஸ் தாக்கியுள்ளது என்றும் இது இலங்கையிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என கவலையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே, தடுப்பூசி போடப்பட்டவர்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது மற்றும் நீண்ட காலத்திற்கு மக்களுடன் தொடர்புகொள்வதைத் தவிர்ப்பது போன்ற வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சில சுகாதார வல்லுநர்கள் காற்றோட்டம் இருப்பதால் வெளிப்புற கூட்டங்களை நடத்தலாம் என்று கூறினாலும் வெளிப்புற இடங்களிலும் மக்கள் வருகை குறைவாக இருக்க வேண்டும் என்று விளக்கினார்.

அரசாங்கம் பொருளாதாரத்தை இயக்குவதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், மருத்துவர்கள் புதிய இயல்பு வாழ்க்கைக்கு பழகிக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளனர். எனவே, இந்த வாழ்க்ககைக்கு மக்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2021/1245975

  • கருத்துக்கள உறவுகள்

பாரளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனா

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை அவரே இன்று காலை தனது முகப்புத்தகத்தில் அவர் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் அவர் பங்கேற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Capture.JPG

https://www.virakesari.lk/article/115903

 


 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத A.30 என்ற புதிய வைரஸ் மாறுபாடு குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் உள்ளது – ஜயசுமன

தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத A.30 என்ற புதிய வைரஸ் மாறுபாடு குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் உள்ளது – ஜயசுமன

பைஸர் மற்றும் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத A.30 என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்து இலங்கை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.

தடுப்பூசியால் உருவாகும் நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிப்பதில் புதிய மாறுபாடு மிகவும் திறன் வாய்ந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

உலகம் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளும் புதிய மாறுபாடு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன என்றும் இலங்கையும் அவ்வாறே எச்சரிக்கையுடன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வரவிருக்கும் குளிர்காலத்தில் இந்த மாறுபாடு வேகமாக பரவினால், உலகில் பேரழிவை ஏற்படுத்தும் ஒரு நிலைமை ஏற்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.

https://athavannews.com/2021/1247559

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கொரோனா வைரஸின் புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் – PHI

கொரோனா வைரஸின் A.30 என்ற புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, ஏனைய நாடுகளில் முன்னர் கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா வைரஸின் பிறழ்வுகளும்  குறுகிய காலத்திற்குள் இலங்கையில் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.

அதேபோல, இந்த புதிய மாறுபாடும் நாட்டில் எந்த நேரத்திலும் அடையாளம் காணப்படலாமென அவர் தெரிவித்தார்.

இந்த புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழைந்து பரவத் தொடங்கினால், நிச்சயமாக ஒரு பேரழிவு சூழ்நிலை ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.

எனவே, சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2021/1247791

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ் திரிபு காரணமாக சில நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளுக்குத் தடை விதிக்க சுகாதார அமைச்சு தீர்மானம்

பொத்ஸ்வானா, தென்னாபிரிக்கா, நமீபியா, லெசோதோ, எஸ்வடினி மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் தடை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக குறித்த நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளுக்குத் தடை விதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.இதேவேளை கடந்த 14 நாட்களுக்குள் குறித்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட உள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)
 

http://www.samakalam.com/வைரஸ்-திரிபு-காரணமாக-சில/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் மேற்குறிப்பிட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று ஆகக்குறைந்தது மூன்று மாத இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம் என சுட்டிக்காட்டியுள்ளர்.

இரண்டு தடவைகள் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களில் கொரோனா தொற்றிற்கு உள்ளானவர்கள் அவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 06 மாத கால இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு, 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் (தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் பணிபுரிவோர், சுகாதார துறை சாராத முன்னிலை ஊழியர்கள்) மேலதிகமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(15)
 

 

http://www.samakalam.com/வட-மாகாணத்தில்-எதிர்வரும/

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி அட்டை கட்டாயம்; 2 வாரங்களில் நடைமுறை!

பொது இடங்களுக்கு செல்லும் போது, கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது நேற்று முதல் கட்டாயமாக்கப்படுகின்ற போதிலும், அது நடைமுறையாவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்காக செயலி ஒன்றையும் ‘க்யூஆர் கோட்’ ஒன்றை உருவாக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 

https://newuthayan.com/தடுப்பூசி-அட்டை-கட்டாயம்/

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் – பொது சுகாதார பரிசோதகர்கள்

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.எனவே, நாட்டில் ஒரு பெரிய வெடிப்பைத் தடுக்க, பூஸ்டர் டோஸைப் பெறுவதும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதும் முக்கியமானது என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல பகுதிகளில் இருந்து ஒமிக்ரோன் நோயாளர்கள் கண்டறியப்பட்டு முழு தீவுக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.மறுபுறம் பொது மக்கள் ஒமிக்ரோன் பரவலை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லையென்பது அண்மைக்கால விடுமுறை நாட்களில் மக்கள் செயற்பட்டதில் தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டார்.

தற்போது ஒமிக்ரோன் சமூகத்தில் பரவத் தொடங்கியதால், சிந்தப்பட்ட பாலுக்காக அழுவது அபத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.எனவே, நாட்டில் ஒரு பெரிய வெடிப்பைத் தடுக்க, பூஸ்டர் டோஸைப் பெறுவதும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதும் முக்கியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.(15)

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் கோவிட்-19 தொற்றாளர்கள் அதிகரிப்பு – கொழும்பு சென்று திரும்பும் பலருக்கு தொற்று

January 25, 2022

spacer.png

 

தென்னிலங்கைக்கு பொதுப் போக்குவரத்தில் பயணித்து வடக்கு மாகாணத்துக்கு திரும்புவோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரவலாகக் கண்டறியப்படுகிறது என்று சுகாதார அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தருவோரிடம் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் பெருமளவானோர் கோவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை தகவல்கள் குறிப்பிட்டன.

தென்னிலங்கையில் நாளாந்தம் கண்டறியப்படும் கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றன என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வடக்கு மாகாணத்திலிருந்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி கொழும்பு சென்று திரும்புவோரில் பலர் காய்ச்சலுடன் மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நிலையில் அவர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் தேவையற்று கொழும்பு செல்வதையோ அல்லது பொதுப்போக்குவரத்தை தேவையின்றி பயன்படுத்துவதையோ தவிர்ப்பது மீண்டுமொரு கோவிட்-19 அலையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியும் என்று சுகாதார அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண்டறியப்படும் கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடுத்து மருத்துவமனையில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாளை உயர்மட்ட கலந்துரையாடலை மருத்துவமனை நிர்வாகம் ஒழுங்கு செய்துள்ளதாக அறிய முடிகிறது.

 

https://globaltamilnews.net/2022/172274

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒரேநாளில் 30 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த திட்டம்!

மரணத்தின் பின்னரான பி.சி.ஆர். பரிசோதனைகள் கட்டாயமில்லை – புதிய அறிவிப்பு

மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகள் இனிமேல் அவசியமில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வீட்டிலோ அல்லது வைத்தியசாலைகளிலோ உயிரிழப்பவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் அவசியமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தேவைப்படுமாயின் சட்ட வைத்தியரின் விருப்பத்துடன், பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1267269

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

ஒமிக்ரோன் வேகமாக பரவுவதால் வைத்தியசாலைகளில் நெருக்கடி ; தாமதமின்றி மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார தரப்பு வலியுறுத்தல்

(எம்.மனோசித்ரா)

ஒமிக்ரோன் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகின்றமையால் கொவிட் தொற்றாளர்களுடன், ஏனைய நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வைத்தியசாலைகளில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலைமை மேலும் தீவிரமடையாமல் இருப்பதற்கு அனைவரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் கீதால் பெரேரா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏனைய வைரஸ்களுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரோன் மிகவும் வேகமாகப் பரவுகின்றமையால் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

இதனால் வைத்தியசாலைகளில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. காரணம் கொவிட் நோயாளர்கள் அனுமதிக்கப்படும் விடுதிகளில் ஏனைய நோயாளர்களை அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே இதய நோய் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டு ஒட்சிசன் தேவையுடைய நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறான நோயாளர்கள் இருக்கும் பகுதிகளில் கொவிட் நோயாளர்களை அனுமதித்தால் அது அபாயம் மிக்கதாகும். 

எனவே சகலரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தற்போது நாட்டிலுள்ள பெரும்பாலான தொற்றாளர்கள் தமக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமலேயே வீடுகளில் உள்ளனர். இது ஏனைய நோயாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தவிர தற்போது கொவிட் தொற்றுக்கு பின்னரான நோய் நிலைமைகளும் ஏற்படுகின்றன. 

சிலருக்கு தொற்றின் போது எவ்வித அறிகுறிகளும் காண்பிக்காத போதிலும் , சுமார் 4 வாரங்களின் பின்னர் ஏனைய நோய் நிலைமைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தென்படுபவர்கள் பொறுத்தமான வைத்தியரை நாடி உரிய ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றார்.

 

https://www.virakesari.lk/article/123298

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Face Mask Eating GIF - Face Mask Eating Covid19 GIFs

பொது இடங்களில்... முகக்கவசம் அணிவது, கட்டாயமில்லை!

இலங்கையில் இன்று முதல் (18.04.22) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளின் போது அணிவதை  தவிர, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அறிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1277194

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு... 4ஆவது தடுப்பூசி!

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான நான்காவது டோஸை இன்று (செவ்வாய்க்கிழமை) தடுப்பூசி மையங்களில் பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிராந்திய தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் டினு குருகே கேட்டுக்கொண்டார்.

தடுப்பூசியைப் பெறத் தகுதியுடையவர்கள் 20 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் மூன்றாவது தடுப்பூசி பெற்று மூன்று மாதங்கள் முடிந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் தங்களின் முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசி டோஸ்களை காலை 9:00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பெறுவதற்காக புதிய பஸார் மகப்பேறு இல்லம், டீன்ஸ் வீதியில் உள்ள MOH அலுவலகம் மற்றும் வெள்ளவத்தையில் உள்ள MOH அலுவலகம் ஆகியவற்றிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்தோடு, இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை விஹார மகாதேவி பூங்காவில் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும் நான்காவது டோஸ் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் நோயெதிர்ப்பு குறைபாடு மற்றும் நாட்பட்ட கோளாறுகள் உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1285752

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

கொரோனாவின்... புதிய பிறழ்வு, இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதா?

கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான BA5 இலங்கையில் கண்டறியப்படவில்லையென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டில் புதிய வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என அவர் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் BA5 என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸை தான் உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் கூறினார்.

இந்த புதிய வைரஸ் 63 நாடுகளில் பதிவாகியுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார். மற்ற வைரஸ்களைவிட இந்த வைரஸ் மிக வேகமாக பரவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1288646

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி : வட இந்திய மக்களுக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

கொரோனா வைரஸின்... பதிய திரிபு பரவும் அபாயம் – 4 தடுப்பூசிகளையும், செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்து.

கொரோனா வைரஸின் பதிய திரிபு மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியை சகல அரச வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொரோனாவுக்கு எதிரான 4 தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்வதன் ஊடாக வைரஸ் தொற்றின் பாதிப்பினை குறைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், மரணம் ஏற்படும் அபாயத்திலிருந்து விடுபட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1289747

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை – ஹேமந்த

கொரோனா... தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை, அதிகரிப்பு – ஹேமந்த ஹேரத்

நாட்டில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஆகவே அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே டொக்டர் ஹேமந்த ஹேரத் இந்த கோரிக்கையை விடுத்தார்.

கடந்த நான்கு நாட்களில் முறையே 34, 62, 75 மற்றும் 57 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் நாளாந்தம் 10 முதல் 20 வரையான வழக்குகள் மட்டுமே பதிவாகியதாக டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1292080

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.மேலும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அனைவரும் இணைந்து செயற்படவில்லையாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார் .

இதேவேளை நாளாந்த கொரோனா தொற்றாளர்களுடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா தொற்றாளர்களின் வேகம் அதிகரித்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார் .நேற்று வெள்ளிக்கிழமை 131 கொரோனா தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/இலங்கையில்-தற்போது-நாளாந/

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

60 இலட்சம் பேர் முதலாவது பூஸ்டர் தடுப்பூசியை பெறவில்லை: வைத்தியர் சமித்த கினிகே

 

கொரோனாவுக்கு எதிரான முதலாவது பூஸ்டர் தடுப்பூசியை பெறாத சுமார் 60 இலட்சம் பேர் இன்னும் நாட்டில் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தற்போதைய கொரோனா தொற்று அபாயத்தை கருத்திற்கொண்டு பெற வேண்டிய தடுப்பூசிகளை உடனடியாக எடுத்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=164909

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் காலாவதியாகவுள்ள எட்டு மில்லியன் பைசர் தடுப்பூசிகள்!

இலங்கையில் காலாவதியாகவுள்ள எட்டு மில்லியன் பைசர் தடுப்பூசிகள்!

இலங்கையால் தருவிக்கப்பட்ட எட்டு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் வரும் மாதத்தில் காலாவதியாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு தடுப்பூசியும் 10-15 அமெரிக்க டொலர்கள் என்ற பெறுமதியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தளவு அதிகப்படியான அளவு இறக்குமதிக்கு யார் ஒப்புதல் அளித்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த மாதத்திற்கு முன்னர் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவது சாத்தியமற்றது என்று சுட்டிக்காட்டிய அவர், மருந்தளவு பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறதா என்றும் வினவியுள்ளார்.

எனினும் இதற்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, தேவைப்படும் சனத்தொகையை கணக்கிட்ட பின்னரே தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், பெரும்பாலான மக்கள் மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசிகளை பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

https://newuthayan.com/252-3/

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த தீர்மானம்!

சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த தீர்மானம்!

சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த இலங்கை சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் பைசர் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவக்கூடிய அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் இதுவரை கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை  பெறாதவர்கள் சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது இலங்கையில் 1.8 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் சுகாதார அமைச்சில் இருப்பதாக இலங்கை தொற்று நோயியல் பிரிவின் புதிய தலைமை தொற்று நோயியல் நிபுணரான வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆறு மில்லியன் பேர் இதுவரை பூஸ்டர் தடுப்பூசிகளை பெறவில்லை எனலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1319004

############################################

பிற் குறிப்பு: சினோபார்ம் தடுப்பூசி, சீனாவில் தயாரிக்கப் பட்டது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.