Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை : கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை மறைத்தால் ஆறு மாத சிறைத் தண்டனை

Featured Replies

(எம்.எப்.எம்.பஸீர்)

யாரேனும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதனை வெளிப்படுத்தாமல் பொது மக்களிடையே நடமாடுவாராயின், அந்த நோயை பரப்பமுயற்சிப்பாராயின் அந் நடவடிக்கைகளும் அந் நிலைமையை அறிந்தும் வேறு ஒருவர் அதனை மறைப்பாறாக இருப்பின் அதுவும் சட்டத்தின் பிரகாரம் தண்டனைக் குரிய குற்றமாகும் என சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அவ்வாறு பொறுப்பற்று செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அத்தகையோர் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.

கொரோனா மருத்துவ கண்காணிப்பை நிராகரிப்பதும் அதே தண்டனையை பெறத் தக்க குற்றமாகும்.

இந் நிலையில் அது குறித்து செயற்பட அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் பொலிஸ் தலைமையகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, தொற்று நோய் தடுப்பு விவகாரத்தை கையாளவென பொலிஸ் தலைமையகம் விஷேட படையணியை அமைத்துள்ளதாகவும் கூறினார்.

கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகரவுக்கு 0718591864 அல்லது 0112435271 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை வழங்க மேலதிக விஷேட 5 தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 499 பொலிஸ் நிலையங்களிலும் தலா 7 பேர் கொண்ட விஷேட குழு, குறித்த தகவல்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள படையணியின் ஆலோசனைக்கு அமைய செயற்பட  தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தல் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவினால்  ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

https://www.virakesari.lk/article/77878

  • கருத்துக்கள உறவுகள்

 மதனமுத்து கூத்து என்பது இதுதானாக்கும் வைரஸ் வந்து மறைத்தால்  ஆள்  மார்கயா அதன் பின்  செத்த பொடியையா ஆறு மாதம் ஜெயிலில் போடப்போறாங்கள்  ?

நேற்று மட்டும் தமிழ் சிங்கள ஆங்கில மீடியாக்களில் "கொர்னோவை  அடக்கிய ஜனாதிபதி கோத்தபாயா " என்ற செய்தி தொகுப்பு கிடந்தது.இனியும் கிடந்தால்  சனமே பிச்சு உதறியிருக்கும்  .

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

 மதனமுத்து கூத்து என்பது இதுதானாக்கும் வைரஸ் வந்து மறைத்தால்  ஆள்  மார்கயா அதன் பின்  செத்த பொடியையா ஆறு மாதம் ஜெயிலில் போடப்போறாங்கள்  ?

நேற்று மட்டும் தமிழ் சிங்கள ஆங்கில மீடியாக்களில் "கொர்னோவை  அடக்கிய ஜனாதிபதி கோத்தபாயா " என்ற செய்தி தொகுப்பு கிடந்தது.இனியும் கிடந்தால்  சனமே பிச்சு உதறியிருக்கும்  .

ஜெயிலில்... சிவனே என்று இருப்பவர்களுக்கும், கொரோனா வைரஸை கொடுக்கும் திட்டம் இது. :grin:

  • தொடங்கியவர்
9 hours ago, ampanai said:

அவ்வாறு பொறுப்பற்று செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அத்தகையோர் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.

நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஆனால், மக்களை ஒரு பயத்திற்குள்ளாக்கும் அறிவிப்பு. 

யார் யாருக்கு கோவிட்19 உள்ளது என யார் அறிவார் பராபரமே ? 🙂 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ampanai said:

நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஆனால், மக்களை ஒரு பயத்திற்குள்ளாக்கும் அறிவிப்பு. 

யார் யாருக்கு கோவிட்19 உள்ளது என யார் அறிவார் பராபரமே ? 🙂 

உண்மையில் கொர்னோ  தொற்று உள்ளவர்களுக்கு கூட தாங்கள்  பாதிக்க பட்டு இருக்கிறார்களா  என்று தெரியாது அவர்கள் அறியவே பலநாட்க்கள் எடுக்கும்  இந்த அறிவிப்பு தேவையில்லாமல் சளி காய்ச்சல் வந்தால் பெரும்பான்மை இனமுள்ள இடத்துக்கு வரவேண்டாம் எனும் எச்சரிக்கை சொறிலங்கா சொறிலங்காதான் .திருத்துவதுக்கு இன்னும் 1000 வருஷம் வேணும் .

  • தொடங்கியவர்
7 hours ago, பெருமாள் said:

நேற்று மட்டும் தமிழ் சிங்கள ஆங்கில மீடியாக்களில் "கொர்னோவை  அடக்கிய ஜனாதிபதி கோத்தபாயா " என்ற செய்தி தொகுப்பு கிடந்தது.இனியும் கிடந்தால்  சனமே பிச்சு உதறியிருக்கும்  .

ஓ, இவர்களைத்தான் ஆறுமாதம் சிறையில் அடைக்க வேண்டும் 😅

  • கருத்துக்கள உறவுகள்

களவாய் இத்தாலிக்கு கப்பலில் போனவர்கள் எல்லாம் களவாய் அதே  மாதிரி கப்பலில் திரும்பி வந்து ஓடி ஒளியினமாம்..அவர்களால் தான் இலங்கையில் பரவுதாம் ...ஏயாப் போட்டால் போறவையை 14 நாள் அடைச்சு போட்டு நோய் அறிகுறி இல்லை என்றால் வெளியில் விடினமாம் ...ஆனால் இவையளை தேடிப் பிடிக்க வேண்டி இருக்கு 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.