Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

Featured Replies

  • தொடங்கியவர்

மக்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் யாருக்கு உண்டு? ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையில், மக்களின் வாழ்க்கைக்கு பாதகத்தை ஏற்படுத்த கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள பிரதேசங்களுக்கு அனுமதியில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஊரடங்கு உத்தரவு தொடர்பான கட்டளைகள், ஊடரங்கு சட்டத்தினை அமுல் படுத்துவதற்கான பிதேசத்தை தெரிவு செய்தல் மற்றும் தனிமைப்படுத்துவதற்குரிய பிரதேசங்களின் பெயர்களை வெளியிடுதல் ஆகிய தீர்மானங்களை அரசாங்கத்தின் உயர்பீடமே தீர்மானிக்கும்.

அமுலில் காணப்படுகின்ற ஊரடங்கு உத்தரவின் பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படவேண்டிய தேவைகள் காணப்படுமாயின் அதனை கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பணிக்குழுவின் வாயிலாகவே அறிவிக்கபடும்.

தவிர, பொது மக்களின் இயல்பான வாழக்கைக்கும் அவர்களுக்கான பாதகத் தன்மையை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்வதற்கு வேறு எவருக்கும் அனுமதியில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/140154?ref=imp-news

  • Replies 111
  • Views 9.8k
  • Created
  • Last Reply

ஊரடங்கு உத்தரவு முதலாம் திகதி வரை நீடிக்கப்படும்

In இலங்கை     March 30, 2020 1:06 pm GMT     0 Comments     2014     by : Jeyachandran Vithushan

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிரந்தஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 01 ஆம் திகதி காலை 06 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறு அறிவிப்பு வரும்வரை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இவை தவிர்ந்த 16 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்டு மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஊரடங்கு-முதலாம்-திகதி-வர/

உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் அழையுங்கள்…!

கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் பிரதம அலுவலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • 0113456200
  • 0113456201
  • 0113456202
  • 0113456203
  • 0113456204

http://athavannews.com/உணவு-மற்றும்-மருத்துவம்/

அசாதாரண சூழ்நிலையில் ஏற்படும் அசௌகரியங்கள்! வழங்கப்படவுள்ள விசேட பாஸ் நடைமுறை!

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலுணவு வியாபாரிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில், கடற்றொழில்சார் போக்குவரத்துக்களை மேற்கொள்வோரும் கடல்சார் உற்பத்திகளின் வியாபாரிகளும் தங்கள் பிரதேசங்களில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரயல் வளத் திணைகளத்தின் உதவிப் பணிப்பாளரை அணுகி அவர்களின் சிபாரிசு கடிதத்தினைப் பெற்று அதனை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து போக்குவரத்து அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக கடற்றொழில் சமூகத்தினர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று அமைச்சில் சம்ந்தப்பட்ட அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தீர்மானம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவிக்குமாறு அமைச்சின் செயலாளரை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கும் செயற்பாடுகள் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91

https://www.ibctamil.com/srilanka/80/140248

 

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா -விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இடைக்கிடையே தளர்த்துவதைத் தவிர்க்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் கொரோனாவின் ஆபத்து அதிகரிப்பதால் தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஒழிப்பு தொடர்பில் சமூக இடைவௌி கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.

"தற்போதைய நிலைமையில் வீடுகளுக்குள் மக்கள் இருப்பதே நூறு வீதம் நல்லது. அப்போதுதான் கொரோனா வைரஸை இந்த நாட்டிலிருந்து விரட்டலாம். மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்றடைவதை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நூறு வீதம் உறுதிப்படுத்த வேண்டும்" எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/140268

  • தொடங்கியவர்

நாட்டில் இன்று தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் , கண்டி மற்றும் யாழ்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று புதன்கிழமை(01.04.2020) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து ஏனைய எந்தவொரு தேவைக்காகவும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த சட்ட விரோதமானமுறையில் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் மக்களிடம் கேட்டுக் கொள்கிறது.

களுத்துறை மாவட்டத்தில் அட்டலுகம கிராமம் மற்றும் கண்டி மாவட்டத்தில் அக்குரணை கிராமம் என்பன முழுமையாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

எந்த சந்தர்ப்பத்திலும் இவ்விரு கிராமங்களுக்கும் செல்வதோ அல்லது அந்த கிராமத்திலிருந்து வெளியேறுவதோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/140283?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் , கண்டி மற்றும் யாழ்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று புதன்கிழமை(01.04.2020) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

 Bildergebnis für april+foolsஇன்று நான் செய்தி கேட்கா, வாசிக்கா விரதமிருக்க முடிவுசெய்தேன் ஆனாலும் யாழ்களம் காலை உதயமாகி, ஒரு நொடி என்னைப் பார்க்கவைத்துவிட்டது. 

அவசர தேவைகளை தீர்ப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!

In இலங்கை     April 2, 2020 7:18 am GMT     0 Comments     1283     by : Benitlas

வணிகத்துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதில்பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களை நேரடியாக தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழியில் விடங்களை கையாள்வதற்காக பிரத்தியேகமாக பிரதிபொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பிலக்கங்களும் அவர்கள் கையாளும் விடயதானங்களும் வருமாறு,

மருந்தகங்கள் மற்றும் ஆய்வக சேவைகள்

பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர குமார – 0718592648

 

துறைமுகம், விமான நிலையம், கப்பற்போக்குவரத்து முகவர்கள்

பிரதி பொலிஸ்மா அதிபர் முடித்த புஸ்செல்ல – 0718592649

 

முதலீட்டு மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகள்

பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த சந்திரசிறி – 0718592650

 

தமிழ் மொழி மூலம்

பிரதி பொலிஸ்மா அதிபர் நவாஸ் -071 859 18 62

http://athavannews.com/அவசர-தேவைகளை-தீர்ப்பதற்க/

போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

In இலங்கை     April 3, 2020 4:06 am GMT     0 Comments     1453     by : Benitlas

அவசரகால அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூவார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அவசர நோய் நிலமை ஏற்பட்டால் எத்தகைய வாகனங்களிலும் செல்ல முடியும். இதற்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தேவையில்லை.

பொலிஸாரினால் வழங்கப்படும் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதுடன் இது தொடர்பாக புலனாய்வு பிரிவை பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்படும்.

இதே போன்று அவசரகால அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும்“ எனத் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/போலி-ஆவணம்-சமர்ப்பிப்போர/

வடகிழக்கு மக்களைப் புறக்கணித்த போர்குற்றவாளிகளின் சொறிலங்கா அரசின் புதிய நாடகம்?

வெளிவந்தது விசேட வர்த்தமானி

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மத்தியில் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதியின் விசேட செயலணி மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பான விசேட வர்த்தமானி வெளியாகி உள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ள செயலணி குறித்து வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழித்துக்கட்டும்போது அதிக நெருக்கடியான நிலையில் உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அப்பிரதேசங்களுக்கு கிராமியப் பிரதேச மற்றும் உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் உணவு விநியோகம் உடனடியாக நுகர்வோருக்குப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் வாழ்க்கையை உரியவாறு நடாத்திச் செல்வதற்குத் தேவையான சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதை வழிநடத்துதல், கூட்டிணைத்தல் மற்றும் தொடராய்வு செய்வதற்காக இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

வர்த்தமானியின் முழு வடிவத்தை காண இங்கே அழுத்தவும்...

https://www.ibctamil.com/srilanka/80/140501?ref=imp-news

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் விசேட நடைமுறைகள்! தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்

பொலிஸ் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுத்து செல்லும் நோக்கில் தற்போது வாகனங்களுக்கான ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரங்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளை ஆராய்ந்து அனுமதி பத்திரங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதுவொருபுறமிருக்க, கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 11 ஆயிரத்து 607 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் இரண்டாயிரத்து 878 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/140497?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரா தெரிவித்துள்ளார்.இல்லையென்றால், நிலைமை ஆபத்தாகலாம் எனத் தெரிவித்த அவர், இன்னும் இரண்டு வாரங்களுக்குள், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகலாமென்றும் எச்சரித்துள்ளார்.இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்றானது குறிப்பிடத்தக்களவு மேலும் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டால் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும்.மூன்று மாதங்களுக்கு நாடு முடக்கப்படுவது கடினம் எனில், குறைந்ததது ஒரு மாதத்திற்காவது ஊரடங்குச் சட்டம் நீட்டிக்கப்பட வேண்டும். இல்லை எனில் நிலைமை மோசமாகிவிடும் என மேலும் தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/நாடு-முழுவதும்-மூன்று-மா/

54 minutes ago, கிருபன் said:

குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரா தெரிவித்துள்ளார்

 நேரத்துக்கு நேரம் ஆளுக்காள் ஒவ்வொன்றை சொல்லி பயப்படுத்துறாங்கள்!

  • தொடங்கியவர்

நாடு முழுவதுமாக முடக்கப்படாது அவ்வாறு வெளியான செய்திகள் வதந்தி

 

police-jaffna.jpg

நாடு முழுவதுமாக முடக்கப்படும் என்று வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தவறான தகவல்களை பரப்பியவர்கள் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/நாடு-முழுவதுமாக-முடக்கப்/

19 மாவட்டங்களில் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு!

In இலங்கை     April 5, 2020 5:17 am GMT     0 Comments     3346     by : Benitlas

நாட்டின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

http://athavannews.com/19-மாவட்டங்களில்-நாளை-தற்க/

நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன மருந்தகங்கள்!

In இலங்கை     April 5, 2020 7:12 am GMT     0 Comments     1015     by : Benitlas

ஓய்வூதியம் பெறுவோருக்கான மருந்து கொள்வனவிற்காக மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன.

நாளை(திங்கட்கிழமை) இவ்வாறு மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டாம் திகதியும், மூன்றாம் திகதியும் இதே காரணத்திற்காக மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாளை-மீண்டும்-திறக்கப்பட/

19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது..!

In இலங்கை     April 6, 2020 2:35 am GMT     0 Comments     1239     by : Jeyachandran Vithushan

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி  மற்றும் யாழ்ப்பாணம்  உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை தளர்த்தப்பட்டது.

அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்ள வழங்கப்படும் காலத்தில் சுகாதார ஆலோசனைகளை  பின்பற்றி மக்கள் செயற்படுங்கள் என அரசாங்கம் அறிவுறுத்துகின்றது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுகொள்ள வேண்டும் என்பதற்காக ஊரடங்கு உத்தரவு 08 மணி நேரங்களுக்கு தளர்த்தப்படுகின்றது.

இதில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் தவிர்ந்து ஏனையே 19 மாவட்டங்களுக்கு இன்று காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்க்கப்பட்டாலும் கூட ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிக்க முடியாது எனவும் அத்தியாவசிய தேவை தவிர்ந்து ஏனைய எந்தவொரு தேவைக்காகவும் எவரும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.

அதனையும் மீறி எவரேனும் சட்டதிட்டங்களுக்கு முரணாக செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி அனுமதியையும் வழங்கியுள்ளார்.

http://athavannews.com/19-மாவட்டங்களில்-ஊரடங்கு-த/

வவுனியாவில் ஊரடங்கு நீக்கப்பட்டவேளை நகரில் திரண்ட மக்கள்!

In இலங்கை     April 6, 2020 12:21 pm GMT     0 Comments     1094     by : Litharsan

Curfew-Released-Time-Vavuniya-Situation-Coronavirus-Alert-Situation-06042020.jpg

கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை வவுனியாவில் 6 மணிமுதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் நகர சபையினால் நகரை அண்டிய பகுதிகளில் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அதிகளவான மக்கள் இன்று (திங்கட்கிழமை) நகரை நோக்கி வருகைதந்திருந்தனர்.

இதேவேளை, பொலிஸாரினால் கொரோனா தொற்று நோய் தொடர்பாக துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டதோடு விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும், எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையாக நின்றதுடன் பல்பொருள் விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அத்துடன் அதிகளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

Curfew-Released-Time-Vavuniya-Situation-

மலையகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நகரங்களில் குவிந்த மக்கள்!

In இலங்கை     April 6, 2020 11:56 am GMT     0 Comments     1143     by : Litharsan

Curfew-Released-Time-Upcountry-Situation-Coronavirus-Alert-Situation-06042020-4-720x450.jpg

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று தற்காலிகமாகத் தளர்த்தப்பட்ட நேரத்தில் மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.

ஏப்ரல் முதலாம் திகதி பிற்பகல் 2 மணி முதல் இன்று காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்ததால் அண்மைய நாட்களை விடவும் இன்று (திங்கட்கிழமை) சனக் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.

சதொச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்தியாவசியப் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்தனர்.

ஹற்றன், தலவாக்கலை, கொட்டகலை, பொகவந்தலாவ ஆகிய நகரங்களில் இந்நிலைமையைக் காணக்கூடியதாக இருந்ததுடன் பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதை காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தலவாக்கலை நகரில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பேணும் வகையில் மக்கள் நிற்கவேண்டிய இடங்கள் குறித்தொகுக்கப்பட்டிருந்ததுடன் வெள்ளை நிறத்தில் அடையாளம் இட்டுக்காட்டப்பட்டிருந்தது.

அதேவேளை, ஒரு சில வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை விடவும் கூடுதல் தொகைக்கு பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

Curfew-Released-Time-Upcountry-Situation-Coronavirus-Alert-Situation-06042020.jpg

Curfew-Released-Time-Upcountry-Situation

Curfew-Released-Time-Upcountry-Situation

Curfew-Released-Time-Upcountry-Situation-Coronavirus-Alert-Situation-06042020-2.jpg

Curfew-Released-Time-Upcountry-Situation

Curfew-Released-Time-Upcountry-Situation

 

http://athavannews.com/மலையகத்தில்-ஊரடங்கு-தளர்/

Edited by Rajesh

ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு இதோ!

In இலங்கை     April 6, 2020 10:50 am GMT     0 Comments     2367     by : Jeyachandran Vithushan

19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 9 வியாழக்கிழமை மீண்டும் தளர்த்தப்பட்டு மீண்டும் அதே நாளில் மாலை 4 மணிக்கு  அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று பரவலைக் கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

இன்று ஏப்ரல் 6 ஆம் திகதி திங்கள் முதல் 10 ஆம் திகதி வெள்ளி வரையான வேலை நாட்கள் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியச் சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்கலை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலைத் தோட்டங்கள், ஏற்றுமதிப் பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்நுழைவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஊரடங்கு-தொடர்பான-அறிவிப-2/

  • தொடங்கியவர்

கிளிநொச்சி நகரில் அதிகளவில் ஒன்று கூடிய மக்கள்

இன்று(06) ஊரடங்கு 2 மணிவரை   தளர்த்தப்பட்ட போது கிளிநொச்சி நகரில் அதிகளவில் ஒன்று கூடிய மக்கள்.

படங்களை பார்த்தால் யுத்தம் வந்து இடம்பெயர்ந்து போவது போல உள்ளது.

படங்கள் - மு.தமிழ்செல்வன் 
FB_IMG_1586191761055.jpg
FB_IMG_1586191765222.jpg
FB_IMG_1586191769734.jpg
  • தொடங்கியவர்

ஊரடங்கு நேரத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் வங்கித்துறையினர் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

ஊரடங்கு சட்ட காலப் பகுதியில் பயணங்களை மேற்கொள்வதற்கு, உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பயன்படுத்த முடியும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாடாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்காவின் 25 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவக் கூடிய அபாயமுள்ள வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட கொழும்பு, களுத்துறை, கம்பஹா, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தொடர் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வடக்கிலுள்ள கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கிழக்கிலுள்ள மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சட்டமானது குறித்த 19 மாவட்டங்களிலும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலை 6மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்குச் சட்டம் காரணமாக திருகோணமலை மாவட்டம் வெறிச்சோடி காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாவட்டத்தின் திருகோணமலை நகர், மூதூர், சேருவில, கிண்ணியா, கந்தளாய், புல்மேட்டை உள்ளிட்ட நகரங்களிலுள்ள பொதுச் சந்தைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வீதிகளில் நடமாடுவது மிகவும் குறைவாக காணப்படுகின்ற போதிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதி பெற்று வெளியில் செல்லக் கூடய சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

வைத்தியசாலைகள் இயங்குகின்ற போதிலும் ஒரு சிலர் மாத்திரம் சென்று மருந்துகளை பெற்றுக்கொண்டு செல்வதை அவதானிக்க முடிவதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

அரச அதிகாரிகள் மக்களுக்குரிய நிவாரண சேவைகளையும் சமூர்த்தி கொடுப்பனவுகளையும் நேரடியாகச் சென்று வழங்கி வருகின்றனர்.

இவற்றைவிட மாவட்டத்திலுள்ள பிரதான வீதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவும் எமது பிராந்தியச் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

பொலிஸாரினால் வீதியால் செல்லுகின்ற வாகனங்கள் மற்றும் நபர்கள் நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் ஊடகத் துறையினர், வங்கித்துறையினர் உள்ளிட்டவர்கள் தமது பயணங்களை மேற்கொள்வதற்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முக்கியமான சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை தவறாக பயன்படுத்தக் கூடாது என கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140740

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்றுமுன் வெளியான செய்தி

கொரோனா அபாய வலயங்களாக குறிப்பிடப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல்வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு நாளை பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படவுள்ளது.

மேலும் குறித்த மாவட்டங்களில், எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள தளர்த்தப்பட்டு, அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/140816

கிளிநொச்சியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டவேளை அதிரடி நடவடிக்கை! கையும் களவுமாக சிக்கிய வர்த்தகர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்றையதினம் (09-04-2020) விலைக் கட்டுப்பாட்டு பகுதியினர், பொலிஸ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக சில வர்த்தகர்கள் கையும் மெய்யுமாக பிடிப்பட்டுள்ளனர்.

இன்று காலை கிளிநொச்சி மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு பகுதியினர், பொலிஸார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில மொத்த வியாபார நிலையங்களுக்கு தீடிரென சென்று பரிசோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இதன் போது பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களான பருப்பு, ரின் மீன், அரிசி போன்ற பொருட்கள் அடையாளம் காணப்பட்டதோடு, அதிகரித்த விலையில் பொருட்கள் விற்பனை செய்தமையும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர். காலாவதியான பொருட்களும் பிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த வியாபாரி நிலையங்களின் உரிமையாளர்களிடம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை நியாய விலையில் விற்பனை செய்து தங்களது விற்பனைச் சிட்டை காண்பிக்கப்பட வேண்டும் என எழுத்து மூலம் உத்தரவாத கடிதம் பெறப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற நடவடிக்கையும் உட்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் மீதான செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிகரித்த விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ச்சியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/140871

  • தொடங்கியவர்

மக்களே அவதானம் -நாளைமுதல் வருகிறது புதிய நடைமுறை

"ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளை மீறி மாவட்ட எல்லைகளைக் கடந்து செல்வோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்."

இவ்வாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாளை (10) முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பொதுமக்கள் ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளைக் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140893

பொது மக்களின் நலன்கருதி ஊரடங்குச் சட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மக்களின் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது.

அந்த வகையில், நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் நாளை முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் வேண்டுகளை அடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, முற்பகல் 9 மணி முதல் மாலை 5 மணி அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரத்தினை முறைகேடாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.