Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்கள் கொவிட் 19 நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்

Featured Replies

(ஆர்.யசி)

கொரோனா தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடுக்கவேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்த இஸ்லாமிய நபரின் உடலை தகனம் செய்ததை அடுத்து அதற்கு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் எதிர்ப்புக் கருத்துக்கள் எழுந்த நிலையில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த காரணம் பிரதான காரணியாக பேசப்பட்டுள்ளது.

78051292_448269296077649_871072253708599


கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளான ரவுப் ஹகீம், ரிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தப்பா உள்ளிட்ட பிரதிநிதிகளே இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் நபர்களை நல்லடக்கம் செய்ய ஒன்று உடலை எரிக்க முடியும், அதேபோல் புதைக்கவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சுகாதார அமைப்புகள் கூறியுள்ளனர்.

அவ்வாறு இருக்கையில் இலங்கையில் உயிரிழந்த இஸ்லாமிய நபர் எரிக்கப்பட்டுள்ளதானது இஸ்லாமிய மத சம்பிரதாய முறைமைகளை மீறும் விதத்தில் அமைந்துள்ளது. ஆகவே இந்த விடயத்தில் இஸ்லாமிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்த சுகாதார அதிகாரிகள் இலங்கையில் நிலைமைகளை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் சகல உடல்களையும் எரிக்கவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த அவசரகால நிலைமையில் எவரும் மத சடங்குகளை கருத்தில் கொள்ளாது சுகாதார ரீதியிலான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் செயற்பட வேண்டும்.

அதுவே நாட்டு மக்களை பாதுகாக்க ஒரே வழிமுறையாக அமையும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் அரச தரப்பினர் இடையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இது குறித்து ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இஸ்லாமிய முறைமைகளை நன்கறிந்த, அதேபோல் மருத்துவ, அறிவியல் சார் நபர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் அது குறித்து சிந்திப்பதாகவும் எனினும் மருத்துவ துறையினர் என்ன கூறுகின்றனரோ அதனை கையாள்வதே ஆரோக்கியமனதாக அமையும் எனவும் கூறியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/79161

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய முறைமைகளை நன்கறிந்த, அதேபோல் மருத்துவ, அறிவியல் சார் நபர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் அது குறித்து சிந்திப்பதாகவும் எனினும் மருத்துவ துறையினர் என்ன கூறுகின்றனரோ அதனை கையாள்வதே ஆரோக்கியமனதாக அமையும் எனவும் கூறியுள்ளனர்.

அவர்கள்  சொல்வதை சொல்லிவிட்டர்கள்... முசுலிம் பார்ட்டி விழுந்தும் மீசையில் மண்படவில்லை என கதை விடுகினம்..தமிழ்நாடு ,வட கிழக்கில்   நோய்க்காவிகளாகவும் இவர்கள் இருக்கிறார்கள்...

வெளி நாடுகளில் எப்படி அடக்கம் செய்கிறார்கள்? இஸ்லாமிய நாடுகளிலும் கொரோனவால் அநேகர் மரித்திருக்கிறார்கள்। அங்கு எவ்வாறு இறுதிக்கிரியை செய்கிறார்கள்? அங்கு அவர்களை புதைக்கிறார்களா?  இதட்கு பதில் கிடைத்தால் இவர்களது போராட்டத்துக்கும் ஒரு முடிவை காணலாம்।

WHO சடலங்களை புதைக்க அனுமதி கொடுக்கும்போது இவர்கள் அதட்கு எதிராக செயட்படுவது சரியாக தெரியவில்லை।

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Vankalayan said:

வெளி நாடுகளில் எப்படி அடக்கம் செய்கிறார்கள்? இஸ்லாமிய நாடுகளிலும் கொரோனவால் அநேகர் மரித்திருக்கிறார்கள்। அங்கு எவ்வாறு இறுதிக்கிரியை செய்கிறார்கள்? அங்கு அவர்களை புதைக்கிறார்களா?  இதட்கு பதில் கிடைத்தால் இவர்களது போராட்டத்துக்கும் ஒரு முடிவை காணலாம்।

WHO சடலங்களை புதைக்க அனுமதி கொடுக்கும்போது இவர்கள் அதட்கு எதிராக செயட்படுவது சரியாக தெரியவில்லை।

இங்கே எரிப்பத புதைப்பதா என்பதல்ல விடயம். சமூகத்திற்கு, நாட்டிற்கு எது பாதுகாப்பானதோ அதனைத்தான் செய்யலாம்.  இதுவொரு கொள்ளை நோய். இதற்கு எந்தவிதமான தடுப்பு மருந்துகளும் இதுவரை பரிந்துரைக்கப்படவில்லை.

போர்க்கால அடிப்படையில் இவற்றைக் கையாள்வதுதான் சரியான தெரிவாக அமையும்.🙂

முசிலும்களின் மிகவும் சுயனலமிக்க செயற்பாடு. ☹️

இல்லை சமய முறைப்படிதான் செய்யவேண்டுமென்றால், முசிலும் நோயாளரைக் கையாள்வதற்கு தாதியிலிருந்து வைத்தியர், மெளலவி நல்லடக்கம் செய்பவர்வரை எல்லாவ்ச்ற்றையும் முசிலும்களே பார்த்துக்கொள்ளட்டும் என கூறிவிட்டால் போச்சு. 

இவங்கள பேசாமல் சவூதிக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடலாம். மிகுதியை அவன் பார்த்துக் கொள்வான். 😀

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

இங்கே எரிப்பத புதைப்பதா என்பதல்ல விடயம். சமூகத்திற்கு, நாட்டிற்கு எது பாதுகாப்பானதோ அதனைத்தான் செய்யலாம்.  இதுவொரு கொள்ளை நோய். இதற்கு எந்தவிதமான தடுப்பு மருந்துகளும் இதுவரை பரிந்துரைக்கப்படவில்லை.

போர்க்கால அடிப்படையில் இவற்றைக் கையாள்வதுதான் சரியான தெரிவாக அமையும்.🙂

முசிலும்களின் மிகவும் சுயனலமிக்க செயற்பாடு. ☹️

இல்லை சமய முறைப்படிதான் செய்யவேண்டுமென்றால், முசிலும் நோயாளரைக் கையாள்வதற்கு தாதியிலிருந்து வைத்தியர், மெளலவி நல்லடக்கம் செய்பவர்வரை எல்லாவ்ச்ற்றையும் முசிலும்களே பார்த்துக்கொள்ளட்டும் என கூறிவிட்டால் போச்சு. 

இவங்கள பேசாமல் சவூதிக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடலாம். மிகுதியை அவன் பார்த்துக் கொள்வான். 😀

கபிதான்.....  அருமையான கருத்து. :)

  • தொடங்கியவர்
11 hours ago, Vankalayan said:

வெளி நாடுகளில் எப்படி அடக்கம் செய்கிறார்கள்? இஸ்லாமிய நாடுகளிலும் கொரோனவால் அநேகர் மரித்திருக்கிறார்கள்। அங்கு எவ்வாறு இறுதிக்கிரியை செய்கிறார்கள்? அங்கு அவர்களை புதைக்கிறார்களா?  இதட்கு பதில் கிடைத்தால் இவர்களது போராட்டத்துக்கும் ஒரு முடிவை காணலாம்।

WHO சடலங்களை புதைக்க அனுமதி கொடுக்கும்போது இவர்கள் அதட்கு எதிராக செயட்படுவது சரியாக தெரியவில்லை।

வெளிநாடுகளில், சட்டம் இனம், மதம் மற்றும் அவர்கள் சார்ந்த மொழியோ, கலாச்சாரமோ சார்ந்த ஒன்றல்ல. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.