Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவிட் - 19 ன் 2 ஆம் அலை புதிய சவால்களை ஏற்படுத்தும்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’கொவிட்-19 இன் 2 ஆவது அலை புதிய சவால்களை ஏற்படுத்தும்’

image_2461202081.jpg

கொவிட்-19 வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலை ஏற்படவுள்ளதாகவும் அது, புதிய சவால்கள் மற்றும் புதிய சிரமங்களை ஏற்படுத்தும் என, சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்திச் சேவையான ஷிங்சூவா வெளியிட்டுள்ள செய்தியில், உயர்மட்டத் தீர்மானங்களை எடுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நேற்று (08) கூடிய போதே சீன ஜனாதிபதி இதனை குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளது.

உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஸ்திரமின்மை மற்றும் நிச்சயமற்ற பல காரணிகள் தலைத்தூக்கி வருகின்றன எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தலைத்தூக்கிய வூஹான் நகரம், நேற்று முன்தினம்  மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, சீனாவை உலகம் சிறந்த கண்ணோட்டத்துடன் பார்த்தாலும், ஆபத்து புதிய தோற்றத்தில் தலைத்தூக்கக் கூடும் என்பது சீன ஜனாதிபதியின் கருத்துகள் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் சீனப் பிரஜைகள் குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறும் சீன ஜனாதிபதி தனது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எந்த வகையில் கொவிட்-19 என்ற கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாய் வீடாக சீனா இருக்கக் கூடாது எனவும், சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கவட-19இன-2ஆவத-அல-பதய-சவலகள-ஏறபடததம/50-248306

டிஸ்கி :

ஒரு அலைக்கே உலகம் தாங்கல ; இதுல இரண்டாவது வேற..

" சீனாவை உலகம் சிறந்த கண்ணோட்டத்துடன் பார்த்தாலும்"

tenor.gif

..மிடில..

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஒரு அலைக்கே உலகம் தாங்கல ; இதுல இரண்டாவது வேற..

இல்லை அவர்கள் கோர்னோ a யுடன்தான் கொள்ளுப்பட்டு இருக்கினம் அதிவிரைவாக மியுடடேசன் எனப்படும் பிறழ்வு நடப்பதுக்கு  சான்ஸ் இதுவரை வந்த தொத்து  நோய்களுக்கு இல்லை இதுக்கு நடந்து உள்ளது சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொரனோ  b யுடன் முட்டி மோதியிருக்கினம் ஆனால் அதிவிரைவாக திரும்பவும் மியுடடேசன் நடத்தி உள்ளது அது கொரனோ  c  இத்தாலியை தாக்கியது கொரனோ  சி கீழே உள்ள படத்தில் விளக்கமாக உள்ளது .

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும்போது மூன்று தனித்துவமான விகாரங்களாக மாற்றப்பட்டது

மேலதிக விளக்கம் மொழி பெயர்க்க முயட்சிக்கிறன் .

https://totalnews.uk/coronavirus-mutated-into-three-distinct-strains-as-it-spread-across-the-world/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

இல்லை அவர்கள் கோர்னோ a யுடன்தான் கொள்ளுப்பட்டு இருக்கினம் அதிவிரைவாக மியுடடேசன் எனப்படும் பிறழ்வு நடப்பதுக்கு  சான்ஸ் இதுவரை வந்த தொத்து  நோய்களுக்கு இல்லை இதுக்கு நடந்து உள்ளது சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொரனோ  b யுடன் முட்டி மோதியிருக்கினம் ஆனால் அதிவிரைவாக திரும்பவும் மியுடடேசன் நடத்தி உள்ளது அது கொரனோ  c  இத்தாலியை தாக்கியது கொரனோ  சி கீழே உள்ள படத்தில் விளக்கமாக உள்ளது .

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும்போது மூன்று தனித்துவமான விகாரங்களாக மாற்றப்பட்டது

மேலதிக விளக்கம் மொழி பெயர்க்க முயட்சிக்கிறன் .

https://totalnews.uk/coronavirus-mutated-into-three-distinct-strains-as-it-spread-across-the-world/

 

101 % உண்மை .. இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆரம்பம் போல் தெரிகுது தோழர்..😢

சீனாவை சிறுகச்சிறுக சித்திரவதை செய்யும் கொரோனா..!! மீண்டும் 41 பேருக்கு வைரஸ் தொற்று..!

dog-meat-10-jpg.jpg

சீனாவில் மீண்டும் 41 பேருக்கு கொரோனா தொற்று எற்பட்டிருப்பது சீனாவை மீண்டும் கலக்கம டைய செய்துள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக கூறிய நிலையில், இரண்டு மாதங்களுக்கும் மேலாக  பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த வுஹான் நகரை சுதந்திரமாக இயங்க அனுமதித்துள்ள நிலையில் மீண்டும் வைரஸ் அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது,   இது மீண்டும் சீனாவில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் ஹூபே  மாகாணம் வுஹானில்  தோன்றிய கொரோனா வைரஸ் இரண்டு மாதத்திற்கும் மேலாக அங்கு மெல்ல மெல்ல பரவி கடந்த  மார்ச் மாதம் முதல் வேகம் எடுக்க தொடங்கியது இது அடுத்த சில தினங்களில்  சீனா முழுவதும் பரவி ஒட்டுமொத்த சீனாவையும் கபளீகரம் செய்தது .   இந்த வைரசுக்கு சீனாவில் 81 ஆயிரத்து 953 பேர் பாதிக்கப்பட்டனர் , சுமார் 3339 பேர் உயிரிழந்தனர் .

சுமார் 77 ஆயிரத்து 525 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்,  ஆனாலும் தற்போது வரையில் 1089 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,  449 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர் . 

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவித்த சீன அரசு வைரசின் பிறப்பிடமான வுஹான் நகரத்தை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது.

தற்போது அந்நகரம் பழையபடி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது , மக்கள் ஆரவாரங்களுடன் இயல்பு வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கியுள்ளனர்.  சாலை,  ரயில் மற்றும் விமான போக்குவரத்து அங்கு  தொடங்கப்பட்டுள்ளது . தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன, ஊழியர்கள் பணிக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்து விதமான ஆலைகளும் செயல்பட ஆரம்பித்துள்ளன.   மெல்ல மெல்ல சீனா இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் ,  தற்போது திடீரென 46 பேருக்கு புதிதாக கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது .

இதனால் சீனா சற்று சலனம் அடைந்து உள்ளது அதுமட்டுமின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் சீனாவில் தென்பட்டுள்ள இந்த  அறிகுறி சீனாவை மட்டுமல்லாது சீனாவை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்  உலக நாடுகளையும் கவலை கொள்ள வைத்துள்ளது . 

ஏனெனில் கொரோனா வைரஸ் வேண்டும் மீண்டும் தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளதோ என சந்தேகிக்கப்பட வைத்துள்ளது,  அதாவது இரண்டாவது சூழ்ச்சியை ஆரம்பித்துள்ளதா  என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ள கொரோனா  மீண்டும் சிங்கப்பூர் சீனா உள்ளிட்ட  கிழக்காசிய நாடுகளை தாக்கக்க வாய்ப்பிருக்கிறது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர் . இதனால்  சீனாவில் தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள  வைரஸ் தொற்று  இரண்டாவது சுற்று தாக்குதலாக இருக்கக்கூடுமென கவலை கொள்ள வைத்துள்ளது.

எனவே,  மீண்டும் சீனா தனது நாட்டு மக்களை எச்சரித்துள்ளது .  முறையான சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் ,  பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்த்தல்  போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது . 

அதேபோல் வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு திரும்பும் குடிமக்கள்  கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள  வேண்டும் 14 நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

https://tamil.asianetnews.com/world/china-again-41-peopled-infected-by-corona-chine-totally-upset-q8mn

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சீனா முழுவதும் பரவி ஒட்டுமொத்த சீனாவையும் கபளீகரம் செய்தது . 

பிழையான செய்தி .

26 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அதேபோல் வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு திரும்பும் குடிமக்கள்  கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள  வேண்டும் 14 நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

உலகம் முழுக்க பரவியது  இவர்களால் அதன் கடைசி வேர்சனை  வாங்கிக்கொண்டு உள்ளே வரவேண்டாம் கதை நல்லா போகுது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.