Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடனடியாக நடவடிக்கை எடுங்கள்! இல்லையேல்.... உலக நாடுகள் அனைத்துக்கும் புதிய எச்சரிக்கை விடுத்தார் அமெரிக்க அதிபர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து, அமெரிக்காவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டுப் பிரஜைகளை அந்தந்த நாடுகள் உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு அழைக்க மறுக்கும் அல்லது அழைத்துக் கொள்வது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கா நாடுகளுக்கு உடனடியாக விசா தடைகளை போட வேண்டிய நிலை வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் என்னும் கொள்ளை நோய் காலக்கட்டத்தில் அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டு குடிமக்களை அழைத்துக் கொள்ளாத அல்லது அழைத்துக் கொள்ள மறுக்கும் அல்லது போக்கு காட்டும் நாடுகள் மீதான விசாத்தடைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

இந்த புதிய விசா சட்டத்திட்டங்கள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்த புதிய சட்டத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கும்.

அமெரிக்காவில் வாழும் பிற நாட்டு மக்கள், குடியிருப்பு வாசிகள் ஆகியோரை திரும்ப அழைத்துக் கொள்ள மறுப்பது, காரண காரியமில்லாமல் திரும்ப அழைப்பதில் தாமதம் காட்டுவது போன்றவை ஏற்றுக் கொள்ள முடியாதது, இதனால் அமெரிக்கர்களுக்கு பொதுச்சுகாதார இடர்பாடுகள் ஏற்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

அமெரிக்க விதிமுறைகளை மீறும் பிற நாட்டு குடிமக்களை அமெரிக்கா திரும்பியும் அவர்கள் நாட்டுகே அனுப்புவதில் உறுதியாக இருக்க வேண்டும். இது தொடர்பில் ஹோம்லேண்ட் பாதுகாப்புச் செயலர் மற்றும் அமெரிக்க அமைச்சரிடம் ட்ரம்ப் பேசியுள்ளார்.

இது தொடர்பான நடைமுராஇஅக்லை ஹோம்லேண்ட் பாதுகாப்புச் செயலர் தொடங்டுவார், அவர் அமெரிக்காவின் இந்த கோரிக்கையை ஏற்காத நாடுகளை அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொள்வார் என்று ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

அடையாளம் கண்ட நாடுகளின் பட்டியலை ஹோம்லேண்ட் பாதுகாப்புச் செயலர் அமெரிக்க அரசுச் செயலரிடம் கையளிப்பார். இந்தப் பட்டியல் அவர் கைக்கு வந்து சேர்ந்த 7 நாட்களில் அந்த நாட்டின் மீது விசாக்கட்டுப்பாடுகளை அவர் விதிப்பார்.

அப்படி அந்த அறிவிக்கை அளிக்கப்பட்டு இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் நாடுகள் மீது உடனடியாக விசா தடைகள் அகற்றப்படும் என்று ட்ரம்ப் தீர்மானத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை தற்போது நிலைகுலையச் செய்திருக்கும் இக்கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தொடர்ந்தும் அந்நாட்டில் பலியாகிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

முன்னதாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிபர் ட்ரம்ப், அமெரிக்கர்கள் இரண்டு லட்சம் பேரை இழக்கப் போகின்றோம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ibctamil.com/usa/80/140979?ref=home-imp-flag

 

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது இது தானோ?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாக உங்கள் மக்களை அழைத்துச் செல்லுங்கள்!’ - பிற நாடுகளுக்கு விசா தடை போட்ட ட்ரம்ப்

விதிகளை மீறும் வெளிநாட்டினரைத் தாயகம் அழைத்துக்கொள்ளாத பிற நாடுகள் மீது கடுமையான விசா தடை விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாக முதல் இடத்தில் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 5 லட்சமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,747 ஆகவும் உள்ளது. உலகிலேயே கொரோனா வைரஸால் அதிக மக்கள் உயிரிழந்த பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டது அமெரிக்கா. அதேபோல் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அங்கு நேற்று ஒரே நாளில் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

 
தொடக்கத்திலேயே நாட்டு எல்லைகள் மூடப்படாததும் கடுமையாக கட்டுப்பாடுகளும் இல்லாததால் அங்கு சமூக பரவல் அதிகமாகியுள்ளது. இதுதான் அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், பரவலைத் தடுப்பதற்காக அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்கள் வெளியில் நடமாட முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் இறுதிக்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

இதன் வரிசையில் தற்போது மற்றுமொரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப். ஆனால், இது அமெரிக்கர்களுக்கு இல்லை பிற நாடுகளுக்குத் தெரிவித்துள்ளார். `அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் அங்கு வசிக்கும் பிற நாட்டு மக்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளாமல் இருப்பது, காரணமில்லாமல் தாமதமாக அழைத்துக் கொள்வது மற்றும் போக்கு காட்டும் நாடுகள் விசா தடைகளைச் சந்திக்க நேரிடும்' என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

விசா
 
விசா

பிற நாட்டைச் சேர்ந்த மக்கள் பலர் அமெரிக்காவின் விதிமுறைகளை மீறுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் அவர்களைத் தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்லாத நாடுகள் மற்றும் தங்கள் நாட்டுக்குச் செல்ல விரும்புபவர்கள் மக்களை அழைத்துச் செல்லாத நாடுகளுக்கே இந்த அறிவிப்பு எனக் கூறப்பட்டுள்ளது. இருந்தும் ட்ரம்ப் எந்த நாடுகளின் பெயர்களையும் வெளிப்படையாகக் கூறவில்லை. நாடுகளின் மீது விதிக்கப்பட்டுள்ள விசா தடை உடனடியாக நடைமுறைக்கு வந்து டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விதிமுறைகளை மீறும் பிற நாட்டினரை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதில் உறுதியாக இருக்க வேண்டும் பாதுகாப்பு செயலர் மற்றும் அமைச்சர்களிடம் அறிவுறுத்தியுள்ளார் ட்ரம்ப். இன்னும் 7 நாள்களுக்குள் நாடுகளின் பட்டியல் பாதுகாப்புத் துறைச் செயலருக்கு அனுப்பப்படும் என்றும் பட்டியல் கிடைத்ததும் அவர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிடுவார் எனவும் கூறப்படுகிறது. பிற நாட்டினரால் அமெரிக்கர்களுக்கு சுகாதார இடர்பாடுகள் ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/story-feed

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கிழவனுக்கு மண்டை பிசகுதான்... கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகையில் வந்த அருமையான கருத்தோவியம்.

கொரோனா அந்த போடு போடுது. அதுக்குள்ளயும் WHO உலக சுகாதார அமைப்பின் மீது தாக்குதல் நடுத்திறார் எண்டத அருமையா சொல்லுது.
 

image_7d58c7157e.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.