Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவசாயிகளிடமிருந்து 9 இலட்ச கி.கி. மரக்கறிகள் கொள்வனவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலணியின் தலையீட்டின் மூலம் அரசாங்கத்தின் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் திட்டத்தின் மூலம் ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 9 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய திட்டங்களுக்கு அமைவாக நாட்டின் அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பொருட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதற்கமைய  மரக்கறி மற்றும் பழங்களை கொள்வனவு செய்வது தொடர்பான விசேட வேலைத்திட்டமொன்றை அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணி தலையீட்டின் கீழ் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட நிலைமையில், தங்களது உற்பத்திகளை விற்பனை செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டும், தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் உயிர்த்த ஞாயிறு காலப்பகுதியில் நுகர்வோருக்கு மரக்கறி மற்றும் பழங்களை  வழங்குவது இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் நேற்று முன்தினம் (11) மற்றும் நேற்றைய தினம் (12) ஆகிய இரு நாட்களில் ஒன்பது இலட்சம் கிலோகிராம் இற்கும் அதிகமான (904,010 கி.கி.) மரக்கறி மற்றும் பழங்கள் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அவசியமான நிதி உதவியை, நுவரெலியா மற்றும் மாத்தறை   மாவட்டங்களின், மாவட்ட செயலாளரிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளதோடு, பொருளாதார மத்தியநிலையங்கள் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மட்டத்தில், நேற்று முன்தினம் (11) மரக்கறிகள் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டதுடன், இம்மரக்கறிகளை போக்குவரத்து செய்வதற்கான பணிகள் நேற்று (12) நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

மரக்கறிகளை கொள்வனவு செய்வது தொடர்பில் பொருளாதார மத்திய நிலையங்கள் மட்டத்தில் பெறப்பட்ட மரக்கறிகள் ஏப்ரல் 11ம் திகதி கொள்வனவு செய்யப்பட்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன் அன்றைய தினமே நாடுமுழுவதும் அனுப்பி வைக்கப்பட்டன. நுவரெலியாவில் கொள்வனவு செய்யப்பட்ட மரக்கறிகளின் அளவு 3 இலட்சத்து 17 ஆயிரத்து 396 கிலோகிராம் (317,396kg) என்பதோடு, இதன் பெறுமதி, ரூபா 2 கோடி 86 இலட்சத்து 34 ஆயிரத்து 975 (ரூ. 28,634,975)  ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் எடுத்துக் கொண்டால், சுகாதார பாதுகாப்பின் அடிப்படைகள் லொறிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருந்தது. அதற்கமைய பிரதேச மத்திய நிலையங்கள் ஒரு சிலவற்றிலிருந்து ஏப்ரல் 11ஆம் திகதி மரக்கறிகள் கொள்வனவு  ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது அரசாங்கத்தினால் மக்களுக்காக  செலுத்தப்படும் அதிக விலை காரணமாக, எதிர்வரும் நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய அறுவடைகளையும் விற்பனை செய்வதற்கு விவசாயிகள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய தம்புள்ளை பிரதேசத்தில், அதிகளவிலான மரக்கறிகள் சந்தைக்காக முன்வைக்கப்பட்டதன் அடிப்படையில், மரக்கறிகளின் அளவை, நிறுவைகள், பற்றுச்சீட்டு வழங்குதல், ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம், பொருளாதார மத்திய நிலையத்தின் தொடர்பாடல் போன்ற விடயங்களை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் இதற்காக அதிகளவான நேரம் எடுத்திருந்தது. ஆயினும் கடைசி கிலோகிராம் வரை அரசாங்கம் மரக்கறிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.

அநுராதபுர மாவட்டத்தில் மரக்கறிகள் கொள்வனவு, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. இக்கொள்வனவுக்கான நிதி, மாவட்ட செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

தம்புள்ளை மற்றும் தமுத்தேகம ஆகிய இடங்களில்  நேற்றைய தினம் (12)  5 இலட்சத்து 86 ஆயிரத்து 614 கிலோ கிராம் (586,614கி.கி.) மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டது. அதன்படி நுவரெலியா, மாத்தளை, ஆகிய மாவட்ட செயலாளர்கள் மூலம் 9 இலட்சத்திற்கும் அதிகமான (904,010 கி.கி.) மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டு போக்குவரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து மரக்கறிகளும் தற்போது நாடு முழுவதும் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு விநியோகிக்கப்பட்டு, அவற்றின் ஊடாக நியாயமான விலையில் அந்தந்த பிரதேசங்களில் விற்பனை செய்யப்படும். அதற்கமைய பாவனையாளர்களுக்கு தட்டுப்பாடின்றி மரக்கறி மற்றும் பழங்களை சலுகை விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, ஒரு சில இடங்களில் கொடையாளர்கள் முன்வந்து அரசாங்கத்தின் செலவை ஏற்றுக் கொள்வதன் மூலம் மக்களுக்கு இலவசமாக மரக்கறிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரியவருகின்றது.

இதற்கமைய, மாவட்ட ரீதியில் மரக்கறிகளின் கொள்வனவுக்கான கோரிக்கைகள் கிடைத்துள்ளன. உதாரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் நுவரெலியா மரக்கறிகள் 161,881 கிலோகிராம் முற்பதிவும், தம்புள்ளை மரக்கறி கொள்வனவுக்காக 168,000 கிலோகிராம் முற்பதிவும் கிடைத்துள்ளன. இம்மாவட்டங்களுக்கு 161,881 கிலோ கிராம் நுவரெலியா  மரக்கறிகளும், 158,508 கிலோ கிராம் தம்புள்ளை மரக்கறிகளும் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு பெரும்பாலான மாவட்டங்களில் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கான முற்பதிவுகள் கிடைத்துள்ளதோடு, நுவரேலியா மரக்கறி களுக்கான மொத்த கேள்வி 303,000 கிலோகிராம் என்பதோடு, தம்புள்ளை மரக்கறிகளுக்கான மொத்த கேள்வி 994,000  கிலோகிராம் ஆகும்.

எவ்வாறாயினும் இவ்வேளையில் தங்களது விளைச்சல்களை இதுவரை விற்க முடியாத விவசாயிகள் காணப்படுவார்களாயின், அது தொடர்பில் எவ்வித பயமும் கொள்ளத் தேவையில்லை எனவும், இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொதுமக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உயர்ந்த அளவில் ஈடுபட்டு வருவதோடு, தொடர்ந்தும் இவ்வாறு அரசாங்கம் விவசாயிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய விவசாயிகளின் விளைச்சலை விற்பனை செய்ய முடியாமல் அல்லது வீணாவதற்கு இடமளிக்க வேண்டாம் என அரசாங்கம், அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த மரக்கறி கொள்வனவுத் திட்டமானது, தமது விளைச்சல்களை அரசாங்கம் கொள்வனவு செய்யுமா என சந்தேகத்தில் இருந்த விவசாயிகளுக்கு, அரசாங்கம் வழங்கிய பலன் இது என்பதோடு நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பான உறுதிப்பாட்டையும் இது வெளிக்காட்டுகின்றது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

https://newuthayan.com/விவசாயிகளிடமிருந்து-9-இல/

 

நுவரெலியா விவசாயிகளுக்கு ஆறுதல்.
ஆனா சொறிலங்கா அரசிடம் விநியோகிக்கும் உருப்படியான திட்டங்கள் இதுவரை இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழாயிரம் கிலோ மரக்கறிகள் அழுகிய நிலையில் மீட்பு

 

image_db3db9c2ea.jpg

எப்.முபாரக்   

திருகோணாமலை, கந்தளாய் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், சுமார் நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஏழாயிரம் கிலோகிராம் மரக்கறிகள், அழுகிய நிலையில், இன்று (15) மீட்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில், புகைப்படம் எடுக்கம் சென்ற ஊடகவியலாளர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவருகிறது. 

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதி மக்களுக்கு, குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காகக் கொண்டுச்செல்லப்பட்ட மரக்கறிகளே, கந்தளாயிலுள்ள எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன நகர மண்டபத்திலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு மீட்கப்பட்ட மரக்கறிகளில், கரட், கோவா, ராபு, லீக்ஸ், பூசனிக்காய், போஞ்சி போன்ற மரக்கறிகள் அதிகம் காணப்பட்டன என்றும் இவை சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

கந்தளாய் பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம், முறையாக முன்னெடுக்கப்படாததால், மரக்கறிகள் பிரயோசனமற்று போயுள்ளன  என்று, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அழுகிய மரக்கறிகள் தொடர்பாக படம் எடுப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களுக்கு கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக தெரியவருகிறது.

image_b9b9fdd1d2.jpgimage_f46e3c0b11.jpgimage_d121e8bb30.jpgimage_229f362f88.jpg


 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் 2,387 மெ.தொன் நெல் கொள்வனவு

அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் முதலாம் வாரம் வரை 2,387 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 135 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

இவை மாவட்டத்தில் உள்ள 14 அரிசி ஆலைகளிலும், 07 களஞ்சியசாலைகளிலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. நெல் குற்றுவதற்கான அனுமதி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றதும் அது தொடர்பான மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் இம்முறை சிறுபோகத்தில் மாவட்டத்தில் மொத்தமாக 21,500 ஹெக்டயர் அளவில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இதற்கு யூரியா 4,600 மெட்ரிக் தொன்,டி.எஸ்.பி. 573 மெட்ரிக் தொன், எம்.ஓ.பி 1,220 மெட்ரிக் தொன் பசளைகள் தேவையாக உள்ளதாகவும் தெரிவித்த அவர்,

குறித்தளவான உரங்களே கையிருப்பில் காணப்படுவதாகவும் தேவையான விவசாயிகள் உரிய கமநல சேவைகள் நிலையம் மூலம் இதனைப் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

https://newuthayan.com/திருகோணமலையில்-2387-மெ-தொன்-ந/

 

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளை காப்பாற்றுங்கள்.

kilino.jpg

கிளிநொச்சி மாவட்டமக்களிற்கு தேவையான மரக்கறிகள் கிளிநொச்சியில் உள்ளது தென்னிலங்கையில் இருந்து வரும் மரக்கறிகளை நிறுத்தி கிளிநொச்சியில் மேலதிகமாக இருக்கும் மரக்கறிகளை வேறு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளை காப்பாற்றுங்கள்.

கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கதலைவர் – யேசுராஜன்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மரக்கறிகளை சந்தைபடுத்தில் ஏற்படும் சிரமம் தொடர்பாக இன்றைய தினம் கிளிநொச்சி சந்தை வளாகத்தில் கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்க தலைவர் யேசுராஜன் ஊடகசந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியிருந்தார் அதன்போது மேற்கொண்டவாறு கூறினார் அவர் மேலும் குறிப்பிடுகையில்

உள்ளுராட்சி அதிகாரிகளின் ஊடாக மக்களின் மரக்கரிகள் கொள்வனவு செய்தாக நாங்கள் அறிந்திருந்தோம் ஆனால் இன்றுவரை அது நடைமுறையில் உள்ள்ளதா என்று கேள்விகுறியாக உள்ளது இன்று கூட கிளிநொச்சி சந்தைவளாகத்தில் அதிகளவான மரக்கறிகளை மீண்டும் கொண்டு செல்ல வேண்டிய துப்பாக்கி நிலைக்கு தள்ளமப்பட்டுள்ளோம்.

இந்த விடயத்தை அரசாங்கம் கவனத்தில் கொண்டு மானிய முறையிலோ மக்களிற்குசந்தைபடுத்தி விவசாயிகளை காக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

http://www.vanakkamlondon.com/கிளிநொச்சி-மாவட்ட-விவசா/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளைந்த காய்கறிகளை விற்பனை செய்வதற்கு வழியில்லை!

VEGETABLES.jpg?189db0&189db0

நீண்ட நாட்களாக காத்திருந்து பெற்ற மொத்த விளைச்சலை சில்லறையாக விற்க முடியாது. அப்படி விற்பதால் மொத்தமாகப் பணத்தைப் பெறவும் முடியாது. எனவே மரக்கறிச் செய்கையாளர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை குறைந்த விலையில் மொத்த வியாபாரிகளுக்கே இப்போது கொடுக்கிறார்கள். மொத்த வியாபாரி ஒரு மாதத்திற்குப் பிறகே பணத்தைக் கொடுப்பார். விலையும் அவர் நிர்ணயிக்கின்ற விலைதான். இது வியாபாரிகளின் ஒருவகையான சுரண்டல்!

இந்த கொள்ளை இலாபம் காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்கள் இலாபத்தைக் காண முடியாதுள்ளது.

மரக்கறிச் செய்கையில் முதலீடு செய்த பணத்தையும் ஈட்டிக் கொள்ள முடியாமல் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசும், அதனைத் தொடர்ந்து வந்த ஊரடங்குச் சட்டமும் மரக்கறி உற்பத்தியாளர்களின் உழைப்பில் பாரிய நட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மரக்கறி உற்பத்தியாளர்கள் தங்களது தோட்டச் செய்கையை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கறிச் செய்கைக்கு பெயர் பெற்ற கிராமங்களில் களுதாவளை, வாகரை ஆகியன முக்கியமானவையாகும்.

இங்கே உற்பத்தியாகும் மரக்கறிகள் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவை தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கும் முன்னர் எடுத்துச் செல்லப்பட்டன. சுமாரான இலாபத்தை மரக்கறி உற்பத்தியாளர்கள் பெற்று வந்தார்கள். பல தோட்டச் செய்கையாளர்கள் இதனை தமது ஜீவாதாரத்திற்கான தொழிலாக தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

இன்னும் பலர் இதனை தமது மேலதிக வருமானமீட்டும் தொழிலாக்கிக் கொண்டுள்ளனர். என்னதான் விளைச்சல் பெருகினாலும் விற்பனைக்கான சந்தை வாய்ப்பு அவசியம். அதுவும் பொருத்தமாக அமைய வேண்டும். பொருத்தமான சந்தைப்படுத்தல் இல்லாவிட்டால், உற்பத்தியாளனுக்கு பாடுபட்டதற்கான ஊதியம் கிடைக்காமற் போய் விடும்.

இப்போது மட்டக்களப்பு பிரதேச சந்தைகளில் பயற்றங்காய் கிலோ 120 ரூபாவுக்கும், மரவள்ளிக் கிழங்கு கிலோ 120 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றன. இந்த விலையில் அரைவாசிதானும் உற்பத்தியாளருக்கு போய்ச் சேருவதில்லையென வாகரையைச் சேர்ந்த உற்பத்தியாளரொருவர் தெரிவிக்கிறார்.

மரக்கறி உற்பத்தியாளர்கள் தமது உடல் உழைப்புக்கு அப்பால் பல செலவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. அவை நிலத்தைப் பண்படுத்தல் தொடக்கம் அறுவடை வரை தொடர்ந்து செல்லும். ஒரு மூட்டை உலர வைக்கப்பட்ட சாணம் ரூபா 500க்கு விற்கப்படுகிறது, நீர் இறைப்புச் செலவு, கிருமி நாசினிகளுக்கான விரயம் என்று அவையெல்லாம் அதிகம்.

ஒரு ஏக்கர் நிலத்தை உழுவதற்கு ஏக்கரொன்றுக்கு ரூபா 5000 தேவை. அறுவடைக்கு ஆகக் குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டும்.

இப்படியெல்லாம் நீண்ட நாட்களாகக் காத்திருந்து பெற்ற மொத்த விளைச்சலை சிறிது சிறிதாக விற்க முடியாது. அப்படி விற்பதால் மொத்தமாக பணத்தைப் பெற முடியாது. அதற்காக குறைந்த விலையில் மொத்த வியாபாரிக்கே காய்கறிகளைக் கொடுக்கிறார்கள். மொத்த வியாபாரி ஒரு மாத்திற்குப் பிறகே பணத்தைக் கொடுப்பார். விலையும் அவர் நிர்ணயிக்கின்ற விலைதான்.

இப்போது மொத்த வியாபாரிகள் கொள்வனவுக்காக வருவதில்லை. அதனால் மரக்கறிச் செய்கையாளர்களின் உற்பத்தி தேங்கிக் கிடக்கிறது. அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளார்கள். அவற்றை வாங்குவதற்கு ஆட்கள் வருவதில்லை. இதனால் மரக்கறிச் செய்கையாளர்கள் பாரிய நட்டத்தை சந்திக்கிறார்கள். அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. அரசு இதற்கு ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மரக்கறிச் செய்கையாளர்கள் வேண்டுகின்றனர்.

 

https://newuthayan.com/விளைந்த-காய்கறிகளை-விற்ப/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.