Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் வேலையிழப்பின் இரண்டாம் அலை வருகிறது; யாருக்கும் பாதுகாப்பில்லை: வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் வேலையிழப்பின் இரண்டாம் அலை வருகிறது; யாருக்கும் பாதுகாப்பில்லை: வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி

second-wave-of-job-loss-coming-no-one-is-now-safe-wsj  
 

விமானத்துறை, சேவைத்துறை மட்டுமல்லாது, பல்வேறு துறைகளில் உயர் பதவியில் இருக்கும் அனைவரின் வேலையும் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் ஊரடங்கு நிலவுவதால், மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். சமூக விலகல் காரணமாக பல்வேறு துறைகள் செயல்படாத நிலையில் உள்ளன. இது நீடித்தால் 2007-09இல் உருவான வேலையில்லாப் பிரச்சினை மீண்டும் வரும் அபாயம் உள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது.

வேலை கொடுப்பவர்கள் இல்லை, விற்பனைகள் சரிவு, பணப்புழக்கக் கட்டுப்பாடு ஆகிய காரணங்களால், அதிக சம்பளம் தரும் மற்றும் அதிக திறனுக்கான வேலைகளுக்கும் ஆபத்து இருப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

57 பொருளாதார வல்லுநர்களை இந்த மாதம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பேட்டி கண்டது. அவர்களின் ஒருமித்த கருத்து, வரும் மாதங்களில் 14.4 மில்லியன் வேலைகள் காலியாகும் என்பதே. வேலை கிடைக்காத நபர்களின் சதவீதம் ஜூன் மாதம் 13 சதவீதம் என்ற சாதனை இலக்கை எட்டும். இது பிப்ரவரி மாதம் 3.5 சதவீதம் மட்டுமே இருந்தது.

16.8 மில்லியன் அமெரிக்கப் பணியாளர்கள், அதாவது அமெரிக்காவில் இருக்கும் பணியாளர்களில் 11 சதவீத மக்கள், ஏற்கெனவே வேலையில்லை என்று பதிவு செய்து, வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கான சலுகையைக் கோரியுள்ளனர்.

சில்லறை விற்பனை, மொத்த விற்பனை, தொழில் முறை வேலைகள், வியாபாரம், சட்டத்துறை, ஐடி, நிகழ்ச்சி மேலாண்மை என அனைத்து வகையான துறைகளும் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் அரசாங்கத்தில் வேலை செய்பவர்களும் அடக்கம். அமெரிக்காவின் பல நகராட்சிகள், பல நூறு பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பியுள்ளது.

45 வயதுக்குக் கீழ் இருக்கும் வாக்காளர்களில் 26 சதவீதத்துக்கும் அதிகமான நபர்கள் பேர் வேலையிழந்துள்ளனர், கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளனர் அல்லது வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வேலையிழந்தவர்களில் மீதமிருக்கும் 26 சதவீதத்தினர், 45 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்.

சம்பளம் இல்லாமல் அதிகபட்சம் இன்னும் 1 அல்லது 2 மாதங்கள் வரை மட்டுமே வாழ முடியும் என்கின்றனர் பெரும்பாலானவர்கள்.

 

https://www.hindutamil.in/news/world/549863-second-wave-of-job-loss-coming-no-one-is-now-safe-wsj-1.html

 

வேலையில்லாவர்களின் எண்ணிக்கை ஒரு சரிவில் இருந்து மட்டமாகின்றது. 

உலகின் பொருளாதாரம் மீளும்பொழுது அமெரிக்காவே வேகமாக மேலும் என்பதால், உலகம் இங்கேதான் முதலீடுகளை செய்யும், சிறிலங்காவில் அல்ல. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை 35 ஆயிரம் ; 2.2 கோடி பேர் வேலை இழப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை 35 ஆயிரம் ; 2.2 கோடி பேர் வேலை இழப்பு

 

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. 2.2 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர்.
பதிவு: ஏப்ரல் 17,  2020 08:39 AM
வாஷிங்டன்
 
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொற்றால் 2,152,000 பேர் பாதிக்கபட்டு உள்ளனர். கிட்டத்தட்ட 145,000 உயிரிழந்து உள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் 667,000  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து உள்ளனர்.
 
கடந்த வாரம் 52 லட்சம் அமெரிக்கர்கள் வேலைக்காக விண்ணப்பித்து உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்து இருந்தது. தற்போது அது 2.2 கோடியாக அதிகரித்து உள்ளது. இது அமெரிக்காவில் பெரும் வேலை இழப்பை காட்டுகிறது. கொரோனா பாதிப்பால் ஏழு அமெரிக்க தொழிலாளர்களில் ஒருவர் வேலை இழப்பை சந்திக்கிறார்.
 
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமான நடுத்தர வர்க்கத்தினர் வறுமைக்குச் செல்லும் ஆபத்து- 2 கோடியே 20 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது

கோவிட்-19-னால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நடுத்தர வர்க்கத்தினர் வறுமைக்குச் செல்லும் ஆபத்து இருப்பதாக அமெரிக்காவை ஐ.நா. எச்சரித்துள்ளது. உடனடியாக அமெரிக்கா தனது கரோனா வைரஸ் தடுப்பு உத்திகளை மாற்றி அவசரகால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

ஐநா தீவிர வறுமை மற்றும் பட்டினி சிறப்பு அதிகாரி மற்றும் மனித உரிமைகள் தலைவர் பிலிப் ஆல்ஸ்டன் எச்சரிக்கும் போது, அமெரிக்க ஆட்சியாளர்கள் பலருக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனில் அமெரிக்க மக்கள்தொகையில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கை வறுமையில் தள்ளப்படுவார்கள், என்று எச்சரித்துள்ளார்.

குறைந்த வருவாய் மற்றும் ஏழை மக்கள் நீண்ட கால புறமொதுக்குதல், மற்றும் பாகுபாடுகாரணமாக கரோனாவினால் அதிகபட்ச இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். கார்ப்பரேட் நோக்கிலான லாப வேட்டை அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சமூகத்தின் பெரும்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு எதுவும் சென்றடையவில்லை, அமெரிக்க அரசு தொழிலதிபர்களையும் நல்ல நிலையில் வசதிபடைத்தவர்களை மட்டுமே கவனிக்கிறது” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

மார்ச் 27ம் தேதி அதிபர் ட்ரம்ப் வரலாறு காணாத நிவாரணமான 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகைக்கான சட்டத்தில் கையெழுத்திட்டார். இது தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், தொழிற்துறையினருக்கானது.

ஏற்கெனவே அங்கு உருப்படாத சில கார்ப்பரேட் நிறுவனங்கள் ட்ரம்பின் இந்தத் திட்டம் மூலம் நிதியை அபேஸ் செய்ய முயற்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் மத்தியதர மற்றும் அதற்கும் கீழ் உள்ள 10-30 லட்சத்துக்கும் அதிகமானோர் வறுமைக்குள் மூழ்கலாம் என்று ஐநா எச்சரித்துள்ளது.

கடந்த 4 வாரங்களில் 2 கோடியே 20 லட்சம் பேர்கள் வேலையின்மை காரணமாக நிவாரணத்துக்காக விண்ணப்பித்துள்ளனர். இது 4 கோடியே 70 லட்சம் ஏன் 5 கோடியாகவும் அதிகரிக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.

உணவு வங்கியின் பயன்பாடு வானளாவ உயர்ந்துள்ளது. வீடுகளுக்கு வாடகையும் குடியிருப்போர் தரவில்லை.

கருப்பரின மக்கள் அதிகமாக கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கணக்கான பாகுபாட்டினால் அவர்கள் வேலையிழக்கின்றனர், வறுமை காரணமாக கரோனா பாதிப்பு இடர்பாடுள்ள பகுதிகளில் இவர்கள் பணியாற்ற நேரிடலாம், இவர்களிடம் பணம் இல்லை, அதனால் அதிக அளவில் மரணமடைகின்றனர் என்று தனிப்பட்ட மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் குறை வருவாய் குடும்ப குழந்தைகள் லாக்-டவுன் கால ஆன்லைன் கல்வியும் கிடைக்க வாய்ப்பில்லை போல் தெரிகிறது. அமெரிக்க அரசின் நிவாரணங்கள் போய்ச்சேர வேண்டியவர்களுக்குப் போவதில்லை.

லட்சக்கணக்கானோருக்கு காப்பீடும் கிடையாது. இவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அரசு எதையும் செய்யவிலலை என்று ஐநா-வின் ஆஸ்ல்டன் சாடுகிறார்.

நாளை கரோனா வாக்ஸைன் வந்தாலும் முதலில் செல்வந்தர்களுக்குத்தான் அது செல்லும் பிறகுதான் சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு செல்லும் என்று அவர் கொடிய பாகுபாட்டினை துல்லியமாக எடுத்துரைக்கிறார்.

கரோனா நெருக்கடிக்கு முன்னரே கூட 5 அமெரிக்கர்களில் 2 பேர் 400 டாலர்கள் செலவினத்தைக் கூட சந்திக்க ந்முடியாத நிலையில் இருந்தனர், அதாவது கடன் வாங்காமல் இவர்களால் 400 டாலர் செலவினத்தைச் சந்திக்க முடியாது. அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2018-ல் 3 கோடியே 81 லட்சம் பேர் வறுமையில் உள்ளனர்.

சாதாரணமாக நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் கிடைக்கும் உலகளாவிய சுகாதார, மருத்துவ வசதிகளும் அமெரிக்காவில் இவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதான் உலகின் பணக்கார நாடான அமெரிக்காவின் நிலை. இவர்கள் படுமோசமான் பணிச்சூழ்நிலைகளில் வாழ்கின்றனர். குறைந்த சம்பளம், கொடுக்க முடியாத வீட்டு வாடகை என்று ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினராக இவர்கள் இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசு இவர்களுக்கு எதுவும் செய்யாவிட்டால் நிச்சயம் இவர்கள் கடும் வறுமைக்குள் தள்ளப்படுவது உறுதி என்று ஐநா எச்சரிக்கிறது.

 

https://www.hindutamil.in/news/world/550164-us-must-improve-covid-19-strategy-to-keep-millions-from-falling-into-poverty-un-expert-3.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.