Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் உறவுகளே தனித்திருந்து உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்- செல்வம்

Featured Replies

புலம் பெயர்ந்த உறவுகளின் பலமே எம் தேசத்தின் பலமாக பார்க்கின்றோம். எனவே புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

selvam.jpg


இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது ஈழத்தமிழ் மக்களுக்கு பாரிய அளவில் பல்வேறு வகையிலும் உதவிகளையும், ஆதரவுகளையும் வழங்கிய புலம் பெயர்ந்த எம் உறவுகள் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கின்ற கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதீக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர்.

புலம் பெயர்ந்த எம் உறவுகள் தனித்து பாதூகாப்புடன் செயற்பட வேண்டும். நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது ஈழத்தமிழ் உறவுகளுக்கு பாரிய உதவிகளை வழங்கிய புலம் பெயர்ந்த எம் உறவுகள் இன்று கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

பலர் உயிரிழந்த போதும், ஆயிரக்கணக்கான எம் உறவுகள் பாதீக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த எம் உறவுகளுக்கு இதய அஞ்சலியை செலுத்துவதோடு, பாதீக்கப்பட்ட உறவுகள் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

இலங்கை அரசின் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு வகையில் குரல் கொடுத்து அழுத்தங்களை பிரையோகித்து வர்தவர்கள் எமது புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள்.

புலம் பெயர்ந்த சமூகத்தின் பலம் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் குறைவடைந்து வருகின்றது. எனவே புலம் பெயர்ந்த உறவுகள் முடிந்த அளவு தமது வீடுகளில் இருந்து உயிரை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்.

புலம் பெயர்ந்த உறவுகளின் பலமே எம் தேசத்தின் பலமாக பார்க்கின்றோம். எனவே புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள். என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/80098

சோழியன் குடுமி சும்மா ஆடாதாம்। புலம் பெயர்ந்தோரை இப்படி எதாவது சொன்னால்தானே நாலு காசு சம்பாதிக்கலாம்। இவங்களெல்லாம் இந்த சாக்கடை அரசியலை விடடால் கஞ்சா விக்கவும், கொள்ளையடிக்கவும்தான் போக வேண்டும்। 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

புலத்தில் அதிகரித்துள்ள கொரோனா தாக்கம்: புலம்பெயர் உறவுகளிடம் அடைக்கலநாதன் கோரிக்கை!

புலம்பெயர்ந்த உறவுகளின் பலமே எம் தேசத்தின் பலமாகப் பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், புலம்பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உயிரைக் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஈழத் தமிழ் மக்களுக்குப் பாரிய அளவில் உதவிகளையும், ஆதரவுகளையும் வழங்கிய புலம்பெயர்ந்த எம் உறவுகள் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கின்ற கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் உள்ளனர்.

உயிரிழந்த எம் உறவுகளுக்கு இதய அஞ்சலியை செலுத்துவதோடு பாதிக்கப்பட்ட உறவுகள் நலம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இலங்கை அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும், புலத்தில் இருந்து தாயகத்தில் மக்களுக்காக பல்வேறு வகையில் குரல் கொடுத்து சர்வதேசத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தவர்கள் எமது புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள்.

இந்நிலையில், புலம்பெயர்ந்த உறவுகள் முடிந்த அளவு தமது வீடுகளில் இருந்து கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து உயிரைப் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்.

புலம்பெயர்ந்த உறவுகளின் பலமே எம் தேசத்தின் பலமாகப் பார்க்கின்றோம். எனவே புலம்பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/புலத்தில்-அதிகரித்துள்ள/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.