Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாக் கால நெருக்கடிகளைக் கையாள்வதில் அரசின் செயற்பாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான இரண்டு சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது.

லங்கையில் கொரொணா நிலைமையினைச் சமாளிப்பதற்காக‌ அரசும், அரசினுடைய வெவ்வேறு கட்டமைப்புக்களும் பல்வேறு நடவடிக்கைகளினை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவத் துறையினைச் சேர்ந்தவர்கள் முன்னணியில் இருந்து இந்நோய்த் தொற்றினைக் கண்டறியும் பணியில் இருந்து, நோயுற்றோரினைக் குணப்படுத்தும் பணி வரை தமது கடமைகளை மிகவும் இடரான சூழலிலே முன்னெடுக்கிறார்கள். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையிலே பொலிஸார் சட்டம் ஒழுங்கினைப் பேணும் பணிகளிலே ஈடுபடுகின்றனர். நிருவாகப் பதவிகளில் இருப்போரும் தத்தமது மாவட்டங்களிலே இந்த நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்துவதிலும், நிவாரணங்களை வழங்குவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மேலதிகமாக நிலைமையினைக் கையாளும் முயற்சிகளுக்காக இராணுவத்தினரின் பங்குபற்றுதலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அரசினால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிகளிலே பங்குபற்றும் எல்லாத் தரப்பினரும் மிகவும் அபாயம் நிறைந்த சூழலிலே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சேவைகள் மதிக்கப்படுவது அவசியம். அவர்களினால் விடுக்கப்படும் நியாயமான அறிவுறுத்தல்களைச் செவிமடுப்பதும், பின்பற்றுவதும் மிகவும் முக்கியம்.

ஆனாலும், இந்த நோய்த் தொற்றினால் ஏற்பட்டிருக்கும் மருத்துவ மற்றும் பொருளாதார நெருக்கடிகளினைத் தீர்க்கும் வகையில் அரசினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் போதுமானவையா? அவை எல்லா மக்களையும் சென்றடைகின்றனவா? அவற்றினால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் எப்படிப்பட்டவை? இந்நெருக்கடியான காலத்திலே அரசு எவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்கின்றது? எவ்வாறான முறைகளிலே அந்தத் தீர்மானங்கள் அமுல்படுத்தப்படுகின்றன? இந்நெருக்கடியினைக் கையாளுவதற்கு இராணுவத்தின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை உடனடியாகவும், நீண்ட காலத்திலும் எவ்வாறான விளைவுகளை உருவாக்கும்? போன்ற ஜனநாயகத்தின் இருப்புக்கு அவசியமான கேள்விகளை இன்றைய சூழலிலே எழுப்புவது மிகவும் முக்கியம். ஓரு மையத்திலே அதிகாரத்தினைக் குவித்து உருவாக்கப்படும் அரச கட்டமைப்புக்கள் குறித்தும், இராணுவமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டு வரும் அரச பொறிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம்.

வெவ்வேறு பிரிவினருக்கான நிவாரணம்

இலங்கை பல பிளவுகளைத் தம்மிடையே கொண்டிருக்கின்ற மக்களைக் கொண்ட ஒரு தீவு. இந்தப் பிளவுகள் மக்களின் பொருளாதார வலு, பிராந்தியம், இனத்துவம், சமயம் மற்றும் கலாசாரம், பால் நிலை மற்றும் சாதி போன்ற விடயங்களின் அடிப்படையில் அவதானிக்கப்படுகின்றன. எல்லாப் பிரிவினரும் கொரொணா நெருக்கடியினை ஒரே மாதிரி எதிர்கொள்ளவில்லை. எனவே ஒரே மாதிரியான நிவாரணங்களை எல்லாப் பிரிவினருக்கும் வழங்க முடியாது. வறிய, உழைக்கும் மக்கள், நோய்த் தொற்று அவதானிக்கப்பட்ட பின்னர் தமது தொழில்களை இந்த மக்கள், பொருளாதார ரீதியாக ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்கள், இடம்பெயர்ந்தவர்கள் போன்றோருக்கு விசேடமான முறைகளிலே நிவாரணங்கள் வழங்கப்படுவது அவசியம்.

இந்நெருக்கடியினை அடுத்து அரசினால் வறிய மக்களுக்கு வழங்கப்படும் என்று சொல்லப்படுகின்ற ரூபா ஐந்தாயிரம் அம்மக்களினது பொருளாதார நெருக்கடியினைக் கையாளுவதற்கு போதுமற்றது. மேல் மாகாணத்தில் இருக்கும் திறந்த வர்த்தக வலயத்தில் பணியாற்றிய ஊழியர்கள் — இவர்களிலே பலர் பெண்கள் — தமது வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். இவர்கள் தமது குடும்பங்களின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலே பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பெருந்தோட்டத் தொழிலாளர்களும், வீட்டுப் பணி செய்வோரும் பணக் கஷ்டத்தினை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே தொழில்புரிந்த கட்டமைப்புக்களிலே அவதானிக்கப்படும் ஒடுக்குகின்ற, சுரண்டுகின்ற தன்மைகள் இந்த உழைப்பாளர்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. இவ்வாறான மக்களின் சமூகப் பொருளாதார ரீதியிலான பாதுகாப்புக்கு கொரொணா நெருக்கடி தோன்ற முன்னரும், தோன்றிய பின்னரும் அரசினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போதுமற்றனவாகவும், பொருத்தமற்றனவாகவும் இருக்கின்றன.

விவசாயிகள் தாம் அறுவடை செய்த பொருட்களை நியாயமான விலைகளுக்கு விற்க முடியாதுள்ளது. வர்த்தக நிலையங்கள் சில பொருட்களின் விலைகளைக் கண்மூடித்தனமாக அதிகரித்துள்ளன. சந்தைப்படுத்தலுக்கான வாய்ப்புக்கள் குறைந்தமையினாலும், ஏற்றுமதிக்கான சந்தர்ப்பங்கள் வீழ்ச்சி அடைந்தமையினாலும், மீனவ சமூகங்கள் இந்நெருக்கடி நிலையினால் பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ளுகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக சீவல் தொழில் செய்பவர்களின் வருமானம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்கும் பொருட்டு அரசு விசேட திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும்.

கொரொணாத் தொற்று நாட்டிலே அவதானிக்கப்பட்ட பின்னர் சில மாவட்டங்களிலே ஊரடங்கு மூன்று வாரங்களாகத் தொடர்கிறது. நோய்த் தொற்று இருக்கலாம் எனச் சில கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. இவ்வாறான பிரதேசங்களுக்கு விசேட முறைகளில் உணவு, மருந்து முதலிய அத்தியாவசியப் பொருட்களை அரசு வழங்க வேண்டும்.

கொரொணாக் கால இராணுவ மயமாக்கமும், அரச கண்காணிப்பும்

நாட்டின் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் பணிகளிலும், நோயின் பரம்பலினைக் கண்காணிக்கும் பணியிலும், நிவாரணங்களை வழங்கும் பணியிலும் இராணுவக் கட்டமைப்புக்கள் இன்று தீவிரமாக ஈடுபடுத்தப்படுகின்றன. நோய் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் அவசர நிலைமைகளைக் கையாள இராணுவ உதவி கோரப்படுவதனை நாம் விளங்கிக் கொண்டாலும், நாட்டில் இடம்பெற்ற‌ நியாயமான போராட்டங்களைக் கண்காணிக்கவும், ஒடுக்குவதற்கும் அரசின் இராணுவக் கட்டமைப்புக்கள் முழுவீச்சிலே கடந்த காலங்களிலே பயன்படுத்தப்பட்டன. இன்று இராணுவமயமாக்கத்தின் மூலமாகவும், இராணுவ மனநிலை உடைய கட்டமைப்புக்களின் மூலமும் உருவாக்கப்படும் கண்காணிப்புப் பொறிமுறைகளும், ஒழுக்கப்படுத்தும் செயன்முறைகளும், நாளை இந்நெருக்கடி முடிவுற்ற பின்னர் மக்களின் நாளாந்த வாழ்க்கையினையும், அரசியற் செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட மாட்டாது என்பதற்கு எந்த‌ உத்தரவாதமும் இல்லை. எனவே நெருக்கடியினை அடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் இராணுவ ரீதியிலான கண்காணிப்புக்கள் குறித்தும் அவற்றின் எதிர்காலம் குறித்தும் நாம் அரசினைப் பொறுப்புக் கூறச் செய்வது அவசியம்.

மையப்படுத்தப்பட்ட திட்டமிடல்

கொரொணாத் தொற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் அறிமுகப்படுத்தப்படும் கொள்கைகளும், நெருக்கடியினைக் கையாளுவதற்கான நிவாரண முயற்சிகளும் பெரும்பாலும் கொழும்பிலேயே திட்டமிட்டப்பட்டு நாடு முழுவதற்கும் பொதுவான முறையிலே அமுல்படுத்தப்படுகின்றன. நெருக்கடிக் காலத்தில் பாடசாலைகளினாலும், பல்கலைக்கழகங்களினாலும் இணைய வழிக் கல்வி போதிக்கப்படல் வேண்டும் போன்ற தீர்மானங்கள் கூட மையப்படுத்த முறையில், கொழும்பின் உயர் மட்டங்களினால், சம்பந்தப்பட்ட விடயத்துடன் தொடர்புபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பிராந்திய ரீதியிலான கல்வி அதிகாரிகளின் கருத்துக்கள் எதனையும் பரந்துபட்ட அளவிலே பெற்றுக்கோள்ளாது, ஏனைய பிரதேசங்களைப் புறந்தள்ளும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. நிவாரணப் பணிகளிலே நாட்டில் இருக்கும் உள்ளூராட்சி அமைப்புக்களையும், கூட்டுறவுச் சங்கங்களையும், உள்ளுர் விவசாய, சமூக அமைப்புக்களையும் எவ்வாறு ஈடுபடுத்தலாம் என்பது பற்றிய சிந்தனை உயர் மட்டங்களிலே திட்டங்களை வடிவமைப்போரிடம் காணப்படாதமை வருந்தத்தக்கது.

இன்றைய‌ சூழலிலே சமூகத் தனிமைப்படுத்தல் அவசியமாக இருக்கின்றமையால், பெரிய அளவிலான கூட்டங்களை வைத்துத் தீர்மானங்களினை மேற்கொள்வது கடினமாக இருந்தாலும், அதிகாரப் பரவலாக்கல், பிராந்திய ரீதியிலான தீர்மானம் மேற்கொள்ளும் அரசியற் கலாசாரம் போன்றன எமது நாட்டில் சாதாரண நிலைமைகளிலும் ஊக்குவிக்கப்படாமை நாம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒரு பிரதான காரணமாக அமைகின்றது

 

கொரொணா காலத்திலே மக்களுக்கு, அதிலும் குறிப்பாக மக்களின் நலிவுற்ற மற்றும் ஒடுக்கப்பட்ட‌ பிரிவினருக்கு, இருக்கும் பிரத்தியேகமான பிரச்சினைகள் குறித்து எழுதுவதற்கும், பேசுவதற்கும் எமக்கு இருக்கும் சந்தர்ப்பங்களையும், வெளிகளையும் நாம் முழுமூச்சாகப் பயன்படுத்த வேண்டும். எமது குரல்களைச் செவிமடுப்பது, இந்த நிலமையினை அரசு, மருத்துவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிறப்பான முறையிலே கையாளுவதற்கு முதற்படியாக அமையும். விமர்சனக் குரல்கள் ஒலிப்பதற்கான வெளிகளை அரசு மூட முற்படுவதோ, அவ்வாறான குரல்களை வெளியிடுவோரினை மௌனமாக்க முயற்சிப்பதோ, ஜனநாயக விரோதமான, சமூக நீதிக்கு எதிரான செயல்களாகவே பார்க்கப்படல் வேண்டும். கொரொணா காலத்திலும் ஜனநாயகம் பேணப்படல் வேண்டும்.

 

http://thinakkural.lk/article/39087

 

 

18 minutes ago, உடையார் said:

இன்றைய‌ சூழலிலே சமூகத் தனிமைப்படுத்தல் அவசியமாக இருக்கின்றமையால், பெரிய அளவிலான கூட்டங்களை வைத்துத் தீர்மானங்களினை மேற்கொள்வது கடினமாக இருந்தாலும், அதிகாரப் பரவலாக்கல், பிராந்திய ரீதியிலான தீர்மானம் மேற்கொள்ளும் அரசியற் கலாசாரம் போன்றன எமது நாட்டில் சாதாரண நிலைமைகளிலும் ஊக்குவிக்கப்படாமை நாம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒரு பிரதான காரணமாக அமைகின்றது

ஒரு சரியான கருத்தாக உள்ளது. 

ஆனால், ஒற்றையாட்சி கொண்ட பௌத்த மதவாதம் ஊறிய நாட்டில் மாற்றங்கள் வரும், ஆனால் வராது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.