Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதியெனக்கூறி பிரான்சில் வசித்த இந்தியர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அகதியெனக்கூறி பிரான்சில் வசித்த இந்தியர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் கைது

வீரகேசரி நாளேடு

இலங்கை அகதியெனக்கூறி 16 ஆண்டுகளாக பிரான்ஸில் வசித்துவந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது குட்டு வெளிப்பட்டதையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்திய குடியுரிமை அதிகாரிகளின் தொடர் விசாரணையில் உண்மை வெளிவந்ததையடுத்து. சென்னை விமான நிலைய பொலிஸார் அந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம்குறித்து மேலும் தெரியவருவதாவது; கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகவன் நாயர் என்பவர் சென்னையை அடுத்த ஆலந்தூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். இவரது மகன் சபரிநாதன் (வயது 37). பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார். இவர், கடந்த புதன்கிழமை இரவு லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவரிடம் வழக்கமான குடியுரிமைச் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்பொழுது, அவரின் கடவுச்சீட்டில், அவரது பெயர் தனசிங்கம் என்றும், இலங்கையைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், சபரிநாதனின் நடை, <உடை, பாவனை ஆகியவை குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்பொழுது பல தகவல்கள் கிடைத்தன. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் கே.கே.நகரில் இலங்கையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். அவர்களின் ஒத்துழைப்போடு, இலங்கை அகதி என்ற போர்வையில், தவறான தகவல் கொடுத்து, சபரிநாதன் பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு ஒரு ஓட்டலில் மாதம் 50 ஆயிரம் ரூபா சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இடையில் இந்தியா வந்த சபரிநாதன், கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு பின்னர் சபரிநாதன் இலங்கையைச் சேர்ந்தவர் இல்லை என்பதும், கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும் குடியுரிமை அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து விமான நிலையப் பொலிசாரிடம் சபரிநாதன் ஒப்படைக்கப்பட்டார். பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரை மாதிரி நிறைய இந்தியர்கள் தாங்கள் ஈழதமிழர் எண்டு சொல்லி போலி ஆவணங்களை குடுத்து அகதி அந்தஸ்த்தோடை பிரான்சிலை வசிக்கினம். ஆனால் அதாலை எங்களிற்கு எந்த நட்டமும் இல்லை லாபமும் இல்லை தமிழ் உறவுகள் எண்டதாலை யாரும் காட்டி கொடுப்பதும் இல்லை

இதைப்பற்றி கனக்க "இங்கு யாழில்" விவாதிப்பது நல்லதல்ல.... :lol::o

இவரை மாதிரி நிறைய இந்தியர்கள் தாங்கள் ஈழதமிழர் எண்டு சொல்லி போலி ஆவணங்களை குடுத்து அகதி அந்தஸ்த்தோடை பிரான்சிலை வசிக்கினம். ஆனால் அதாலை எங்களிற்கு எந்த நட்டமும் இல்லை லாபமும் இல்லை தமிழ் உறவுகள் எண்டதாலை யாரும் காட்டி கொடுப்பதும் இல்லை

Edited by Netfriend

ஆற்றில் ஓடும் தண்ணீரை யார் குடித்தாலென்ன. அதனால் இந்த விடயதைப்பற்ரி நாம் பெரிதக விவாதிக்க தேவையில்லை என்பது எனது கருத்து. இந்தியர்களாக இருந்தாலும் அவர்களும் எம் உடன் பிறவாத சகோதரர்களே.

Edited by mathuka

உண்மை ஆனால்..உங்கள் சகோதர பாசத்தால்.. நியாயமாக விசாப்பெறவேண்டிய பலரின் வாழ்க்கை..கேள்விக்குறியாக மட்டுமல்ல வீணாக்கப்பட்டிருக்கிற உண்மை நிகழ்வுகள் உண்டு..

ஆனால் அதை தப்பு என்ற சொல்ல முடியாது விசாவுக்கா பாதி பொய் சொல்கிறோம்..

உண்மை ஆனால்..உங்கள் சகோதர பாசத்தால்.. நியாயமாக விசாப்பெறவேண்டிய பலரின் வாழ்க்கை..கேள்விக்குறியாக மட்டுமல்ல வீணாக்கப்பட்டிருக்கிற உண்மை நிகழ்வுகள் உண்டு..

ஆனால் அதை தப்பு என்ற சொல்ல முடியாது விசாவுக்கா பாதி பொய் சொல்கிறோம்..

அப்படி சொல்ல முடியாது. கொடுக்கப்ப்படும் தகவல் ஆதாரத்துடன் நம்பும் படியாக இருந்தால் அகதி அந்தஸ்து ஏற்கப்படுகிறது. அப்படி இல்லை யேல் பொதுவாக இலங்கை தமிழர் என்ற காரணத்துக்காக தங்கும் வதிவிட அனுமதி கொடுப்பார்கள்.

ஆற்றில் ஓடும் தண்ணீரை யார் குடித்தாலென்ன. அதனால் இந்த விடயதைப்பற்ரி நாம் பெரிதக விவாதிக்க தேவையில்லை என்பது எனது கருத்து. இந்தியர்களாக இருந்தாலும் அவர்களும் எம் உடன் பிறவாத சகோதரர்களே.

எம்மீதான உங்கள் சகோதர பாசத்திற்கு நன்றி. :o

ஆனால் இச்செயலை செய்தவர். கேராளவை சேர்ந்த சகோதரர் (குடிக்க நீர் தருகிறான் இல்லை. எப்படி அழைப்பது சகோதரன் என்று. சரி விடுஙகள் இது இங்கே தேவை இல்லாத ஒன்று.)

ஆனால் தமிழர் அல்ல!!!

நீங்கள் சொல்வது போல் நடந்துகொள்ள கொஞ்சம் அதிகமாகவே புத்திசாலியாக..சாமர்த்தியசால

  • கருத்துக்கள உறவுகள்

தென் தமிழீழத்தில், இந்தியா அமைதிப்படையில் பணிபுரிந்த,மதுரையினைச் சேர்ந்த ஒருவருக்கும் புலம் பெயர்ந்த நாடுகளில் அகதி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. 2000ல் இருந்து 2002 வரையிலான காலப்பகுதியில் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்களில் கிட்டத்தட்ட 500 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஈழ அகதிகள் என்ற போர்வையில் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்தினைக் கோரியுள்ளார்கள். கனடா, ஐரோப்பிய நாடுகளில் உண்மையாகப் பதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் பலருக்கு நிரந்தர வதிவிட வசதி நிராகரிக்கப்பட்டுள்ள போதும், சில தமிழகத் தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

பிரித்தானியாவில் சில சிங்களவர்களும் ஈழத்தமிழர் என்ற போர்வையில் வந்து அகதி அந்தஸ்தினை பெற்றுள்ளார்கள். ஆங்கில மொழி தெரிந்துள்ளதினால் இவர்கள் மொழி பெயர்ப்பாளார்கள் தமக்கு தேவையில்லை என்று கூறி தமிழர்களாக நடித்து அகதி அந்தஸ்தினைப் பெற்று இருக்கிறார்கள்.

இலங்கை தமிழர் என்று கூறி மற்றய இனத்தவர்கள் அகதி அந்தஸ்து கோரும் போது இலங்கை தமிழர்களுக்கு ஓரளவு பாதிப்பு உண்டாவது உண்மைதான். அதேபோல் நாம் பொய் சொல்லி அகதி அந்தஸ்து கோரும் போது நம்மிடையே உள்ள உண்மையான அகதிகளுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதையும் மறக்க கூடாது. நாம் உண்மையா பாதிக்கப்பட்ட நம்முடைய சகோதரர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புடன் ஒப்பிடும் போது மற்றய இனத்தவர்கள் ஏற்படுத்துவது ஒப்பீட்டளவில் மிக மிக சிறியது. அதனால் இதனை பெரிதாக எடுக்க தேவையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.