Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்துங்கள்’ - கடற்படைக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கிய ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

'ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்துங்கள்’ -  கடற்படைக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு

 

உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் தனிந்தபாடில்லை. 
 
அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பாரசீக வளைகுடா பகுதியின் சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்றி வளைத்தனர். 
 
ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் அமெரிக்க கப்பல்களை சுற்றி வளைத்து வட்டமிட்டு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்க கப்பலை சுற்றுவளைத்த ஈரான் படகுகள்
 
இந்நிலையில், அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கி ஏந்திய அனைத்து ஈரான் படகுகளையும் சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 
 
இது குறித்து டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் துப்பாக்கி ஏந்திய ஈரான் நாட்டின் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தி அழிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.
 
ஈரான் படகு
 
ஈரான் கடற்படையினரின் படகுகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதால் வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
 
இதற்கிடையில், ராணுவ செயல்பாட்டிற்காக செயற்கைக்கோள் ஒன்றை ஈரான் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

 

ஒரு சண்டை வரும் என்றும் ஒரு செய்தி உள்ளது 

- சரிந்து இருக்கும் மசகு / கச்சாய் எண்ணெய் விலை அதிகரிக்கும், பங்கு சந்தை அதிகரிக்கும் - அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி 

- அமெரிக்க மக்கள் கோவிட் 19 இழப்பை 'மறக்க வைக்க' இது ஒரு வைத்தியமாக அமையும் 

- சரியும் "அரசரின்" செல்வாக்கை உயர்த்தி, மீண்டும் அரியாசனம் எற உதவும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் வலிமை பற்றி தெரியும் அமெரிக்காவை எச்சரித்த ஈரான்

ஈரானின் ராணுவக் கப்பல்களுக்கு அச்சுறுத்தும் விதமாக அமெரிக்கா நடந்துகொண்டால், வளைகுடாவில் இருக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அனைத்தும் நொறுக்கப்படும் என்று ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
பதிவு: ஏப்ரல் 24,  2020 08:41 AM
தெஹ்ரான்
 
பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்றி வளைத்தனர்.
 
ஈரானின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் அமெரிக்க கப்பல்களை சுற்றி வளைத்து வட்டமிட்டது.
 
இந்நிலையில், அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் துப்பாக்கி ஏந்திய ஈரான் நாட்டின் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தி அழிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்நிலையில், அப்படி ஏதேனும் நடந்தால் வளைகுடாப் பகுதியில் இருக்கும் அமெரிக்க கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் மேஜர் ஜெனரல் ஹுசைன் சலமி எச்சரித்துள்ளார்.
 
இது குறித்து சலமி கூறியதாவது:-
 
எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதேனும் ஊறுவிளைவித்தால், மிக மோசமாக எதிர்வினையை சந்திக்க நேரிடும்.அவர்களுக்கு எங்களின் வலிமைப் பற்றி தெரியும். முந்தைய சமயங்களில் நாங்கள் கொடுத்த பதிலடியிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள் என கருதுகிறோம் என்றார்.
 
அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே 2018 முதல் மீண்டும் போர்ச் சூழல் மூண்டுவந்த நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகனைத் தாக்குதல் நடத்தி கொன்றது.
 
அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது.அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 78 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் மீது ஈரான் நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும்.
 
தற்போது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கொரோனா வைரஸால் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிற நிலையில்,இவ்விருநாடுகளும் மீண்டும் போர்ச் சூழலை நோக்கி நகர்வது ஆபத்தான போக்காகப் பார்க்கப்படுகிறது.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.