Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் கவனத்தை ஈர்க்கத்தவறிய சோமாலியாவின் நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் கவனத்தை ஈர்க்கத்தவறிய சோமாலியாவின் நிலை

 

 

   1045     by : Yuganthini

corona-virus-in-somalia-720x450.jpg

உலகளாவிய ரீதியில் கொரோனா பெருந்தொற்று பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் ஆபிரிக்காவின் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் ஒற்றை மருத்துமனை மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் பலவிதமான தொற்றுநோய்கள் காலம் காலமாக ஏற்பட்டுக்கொண்டிருந்தாலும் மருத்துவ வசதிகள் ஆபிரிக்க நாடுகளை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இந்நிலை இவ்வருடம் கொரோனா வைரஸால் முழு உலகமும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் காலப்பகுதியிலும் மாற்றம் பெறவில்லை.

அமெரிக்கா இத்தாலி பிரித்தானியா உள்ளிட்ட உலகின் செல்வந்த நாடுகள் போதுமான மருத்துவ வசதிகள் இருந்தும் கூட கொரோனா தொற்று அதிகரிப்பினால் செய்வதறியாது திகைக்கும் நிலையில், சோமாலியாவின் குறித்த நிலையானது பலரது கவனங்களை ஈர்க்கத் தவறியுள்ளது.

சோமாலியாவின் தலைநகரில் அமைந்துள்ள மார்டினி வைத்தியலை மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்கவும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தவும் ஓரளவு போதுமான வசதிகளை கொண்ட மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களை சிகிச்சைக்கு உட்படுத்த வழி தெரியாமல் அந்நாட்டு அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தத்தொமாக ஆபிரிக்க நாடுகளில் தொற்றுநோயால் பீடிக்கப்படுபவர்களின் விகிதம் அதிகமாக காணப்படும் அதேவேளை, மருத்துவ வசதிகள் சீராக இல்லாத ஆபிரிக்க நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக உயர ஆரம்பித்துள்ளதாக அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதேவேளை சோமாலியாவில் இதுவரையான காலப்பகுதியில், 328 பேருக்கு கொரோனா தோற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களில் 8 பேர் மாத்திரமே குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/உலகின்-கவனத்தை-ஈர்க்கத்த/

3 hours ago, nunavilan said:

அமெரிக்கா இத்தாலி பிரித்தானியா உள்ளிட்ட உலகின் செல்வந்த நாடுகள் போதுமான மருத்துவ வசதிகள் இருந்தும் கூட கொரோனா தொற்று அதிகரிப்பினால் செய்வதறியாது திகைக்கும் நிலையில், சோமாலியாவின் குறித்த நிலையானது பலரது கவனங்களை ஈர்க்கத் தவறியுள்ளது.

ஆம், இவர்கள் கப்பலைகளை வழி மறித்து கொள்ளையடித்தால் தானே இவர்களை பற்றி தெரியவரும். 

இப்பொழுது கப்பல்கள் இல்லை, கொள்ளையும் இல்லை, யாரும் இவர்களை பற்றி அலட்டியும் கொள்வதில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.