Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவைப் பரப்பும் கழிவறைகள்... கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள்! - மருத்துவர் அலெர்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவைப் பரப்பும் கழிவறைகள்... கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள்!  - மருத்துவர் அலெர்ட்

இதுவரை கை சுத்தம், முகக்கவசம், சமூக இடைவெளியில் மட்டுமே கவனம் செலுத்திவரும் நாம், இனி தினமும் உபயோகப்படுத்தும் கழிவறையிலும் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது!

``காய்ச்சல், வறட்டு இருமல், தலைவலி, உடல் சோர்வு, இறுதியாக மூச்சுத்திணறல்!" - இவையே கோவிட்-19 கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாகக் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட 5 அல்லது 6-ம் நாளில், அவருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வயிற்றுப்போக்கும் கொரோனா தொற்றின் அறிகுறிகளுள் ஒன்றாக தற்போது கூறப்பட்டுவருகிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டவரின் எச்சில் மற்றும் சுவாச நீர்த்துளிகள் மூலமே மற்றவர்களுக்குப் பரவிவந்ததாக நாம் நினைத்துக்கொண்டிருந்தோம். இந்நிலையில், தொற்று ஏற்பட்டவரின் கழிவின் மூலமும் பரவும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். எனவே, இதுகுறித்து உணவுக்குழாய் மற்றும் இரைப்பை, குடல் அறுவைசிகிச்சை மருத்துவர் ஆனந்திடம் பேசினோம்.

மருத்துவர் ஆனந்த்
``சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில், கோவிட்-19 கொரோனா வைரஸ் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன. சமீபத்தில், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவரின் மலத்தை எடுத்து ஆய்வுசெய்ததில், அவரது கழிவில் இருந்த கொரோனா வைரஸ், நோய்த் தொற்றை ஏற்படுத்தும் வீரியத்துடன் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே, கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரின் கழிவின் மூலமும் மற்றவர்களுக்குத் தொற்று பரவும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல் மூலம் வெளிப்படும் எச்சில் வழியாகவே வைரஸ் மற்றவர்களுக்குப் பரவும் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்று. காற்றில் பரவியிருக்கும் வைரஸ், சுவாசம் வழியே நம் உடலுக்குள் செல்கிறது. மூக்கு அல்லது வாய் வழியே உள்ளே செல்கிறது.

அதேவேளை, வாயின் வழியே உடலுக்குள் செல்லும் வைரஸ்களும், சுவாசத்தின் வழியே வந்த வைரஸும் உணவுக்குழலின் வழியே இரைப்பை, பெருங்குடல், சிறுகுடலுக்குள் செல்கிறது. நமது வயிற்றுப்பகுதில் உள்ள இரைப்பை, கணையம் போன்ற உறுப்புகளின்மீது `மியூகோசா' (Mucosa) எனப்படும் வழவழப்பான ஓர் அடுக்கு காணப்படும்.

 

குடல் பகுதி

 

 

உணவுக்குழலின் வழியே செல்லும் வைரஸ்கள், இந்த மியூகோசா அடுக்கின்மீது நன்றாகப் படிந்துகொண்டு நமக்கு உணவு செரிமானப் பிரச்னை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற வயிற்று உபாதைகளை ஏற்படுத்துகின்றன. எனவே, கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

 

நுரையீரலுக்குள் இருக்கும் வைரஸ், இருமும்போது எச்சில் திவலைகளுடன் வெளியில் சென்று மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படுத்துவதைப்போல வயிற்றுக்குள் இருக்கும் வைரஸ் மலத்தின் வழியே வெளியில் சென்று தொற்றை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, கொரோனா பாதித்த ஒருவர் பயன்படுத்திய கழிவறையை சரியாக சுத்தப்படுத்தாமல் இன்னொருவர் பயன்படுத்தினால், அதன் மூலமாகவும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம்.

இந்த முறையில் தொற்று ஏற்படுவதைத் தடுக்க மருத்துவமனையிலும், கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும், தங்களுக்கென்று தனி கழிவறையைப் பயன்படுத்தலாம். ஆனால், இது பெரும்பாலும் சாத்தியமில்லை என்பதால், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய கழிவறையை ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி கொண்டு நன்றாக சுத்தப்படுத்திய பின்னரே மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு முறையும் கழிவறை சென்று வந்த பிறகு, கிருமிநாசினி கொண்டு கைகளை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் சுகாதார முறைகளைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில், நோய் வருவதற்கு முன்பே நம்மை தற்காத்துக்கொள்வதுதான் கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க நம்மிடம் இப்போது உள்ள ஒரேவழி.

இதில் கவனிக்கப்படவேண்டிய பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் பல கிராமங்களில் உள்ள மக்கள் திறந்தவெளியிலேயே மலம் கழிக்கிறார்கள். பலர் பொதுக்கழிவறைகளைப் பயன்படுத்துகின்றனர். லட்சக்கணக்கான மக்கள், தங்களது வீட்டில் அடிப்படை கழிவறை வசதிகள்கூட இல்லாமல் இருக்கிறார்கள். இதுபோல், திறந்தவெளியில் கழிவுகளை வெளியேற்றும்போது, அதன்மூலம் தொற்று நிறைய பேருக்குப் பரவ அதிக வாய்ப்புள்ளது.

எனவே, மனிதக் கழிவுகள் மூலமும் கொரோனா பரவலாம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை அரசு மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும். மக்கள் திறந்த வெளியைக் கழிவறையாகப் பயன்படுத்தாமல் இருக்க, போதுமான அடிப்படை கழிவறை வசதிகளை அவர்களுக்கு செய்துதர வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் தங்களது சுய சுத்தத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்கிறார், மருத்துவர் ஆனந்த்

 

இதுவரை கை சுத்தம், முகக்கவசம், சமூக இடைவெளியில் மட்டுமே கவனம் செலுத்திவரும் நாம், இனி தினமும் உபயோகப்படுத்தும் கழிவறையிலும் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது!

 

https://www.vikatan.com/health/healthy/unhygienic-toilets-may-spread-corona-virus

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே போனால் ஆளுக்கு ஒரு கழிவறை தேவைப்படும் ...தண்ணி குடிக்க முடியாது போகும்..சாப்பாட்டுக் கஸ்டம் வரும்...கடைசியில்  சேர்த்துவைத்த காசை குவியலாக்கிவிட்டுத்தான் எம்மை எரிக்க வேண்டிவரும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.