Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளை மாதிரி வளர்த்த வாழையை வெட்டி அழிச்சிட்டீங்களே'- வனத்துறை செயலால் கதறும் பழங்குடிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`பிள்ளை மாதிரி வளர்த்த வாழையை வெட்டி அழிச்சிட்டீங்களே'- வனத்துறை செயலால் கதறும் பழங்குடிகள்

வெட்டிய வாழை

வெட்டிய வாழை

காப்புக் காடுகளில் விவசாயம் செய்வதாகச் சொல்லி, வாழை விவசாயத்தை, வளர்த்தவர்களையே வெட்டச் சொல்லி அழித்திருக்கிறது வனத்துறை.

``அத்துவான காட்டுல வாழுற எங்களை இப்படி வதைக்கிறீங்களே... பிள்ளைக மாதிரி வளத்த வாழையை வெட்டுறீங்களே... எங்க வீட்டுல இன்னிக்கு அரைக்காபடி அரிசி இல்லை. கூலிக்கும் போகமுடியல. வாழையை வெட்டி எங்க குடும்பத்தையே அழிக்குற மாதிரி அழிச்சீட்டீங்களே... அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம்வரைக்கும் இங்கதானே வாழுறோம். இந்தப் பாரஸ்டுல தத்தெடுக்குறோம்... தத்தெடுக்குறோம்னு சொல்றீங்க. இதுதான் நீங்கத் தத்தெடுக்குற லட்சணமா...'' என உயிர்வலியோடு கதறும் அந்த மலைக்கிராமப் பெண்ணின் குரல் நெஞ்சைப் பிழிகிறது.

வெட்டப்பட்ட வாழை
 
வெட்டப்பட்ட வாழை

கொடைக்கானல் வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்டது கடப்பாரை கிராமம். சாலை வசதியே இல்லாத மலைக் கிராமம். அந்தக் கிராமத்தை அடைய பெரியகுளம் வழியாக 4 மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். அந்தக் கிராமத்தில் பன்னெடுங்காலமாக வசிக்கும் தொல்குடிகள் இருக்கிறார்கள். வனம்தான் அவர்களது வாழ்வாதாரம். குடியிருப்பை ஒட்டிய விவசாய நிலங்களில் வாழை விவசாயம் செய்து வருகிறார்கள்

இந்நிலையில், நேற்று அங்கு சென்று தேவதானப்பட்டி வனச்சரகத்தைச் சேர்ந்த வனத்துறையினர், `அது வனப்பகுதி, வாழைகளை வளர்க்கக் கூடாது' எனச் சொல்லி, பழங்குடிகளை வைத்தே அவர்கள் வளர்த்த வாழையை வெட்ட வைத்திருக்கிறார்கள். 6 மாத வயதுடைய வாழைகளை, அழுதுகொண்டே வெட்டி வீழ்த்தியிருக்கிறார்கள். அதை வனத்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது வேதனை பொறுக்க முடியாமல், அழுத பழங்குடிப் பெண்மணியின் குரல்தான் மேலே படித்தது.

வனத்துறையினர்
 
வனத்துறையினர்

இதுதொடர்பாக, கருத்துக்கேட்டால், ``அது வனத்துறைக்கான காப்புக் காடு. சட்டப்படி அங்கு விவசாயம் செய்யக் கூடாது. அதனால், அவர்களையே வெட்டச் சொன்னோம்'' என்கிறார்கள் வனத்துறையினர்.

 

கொடைக்கானல் வனப்பகுதியில் பல்வேறு இடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. அதை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் பெரும் செல்வந்தர்கள் என்பதால் அங்கு சட்டம் பேசாத வனத்துறையினர், மண்ணின் மைந்தர்களான தொல்குடிகளை வதைக்கிறார்கள். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகச் சொல்பவர்கள், குத்தகை காலம் முடிந்த நிலங்களுக்கு நேரடியாகப் போய், வனத்துறை கட்டுப்பாட்டில் அந்த இடங்களைக் கொண்டு வரவேண்டியதுதானே. ஆனால், அவர்களுக்கு மட்டும் நோட்டீஸ் விநியோகித்து, அவர்கள் நீதிமன்றம் செல்ல வழிகாட்டுகிறார்கள். அதற்குப் பிறகு அந்த வழக்குகளில் ஆர்வம் காட்டுவதில்லை. தனியார்கள் அந்த இடத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

வெட்டப்பட்ட வாழை
 
வெட்டப்பட்ட வாழை

ஆனால், மலைக்கிராம மக்களிடம் சர்வாதிகார போக்கைக் காட்டுகிறார்கள். வனத்தை நம்பிப் மக்கள், வாழையைத் தானே பயிரிட்டார்கள். அதில் வனபாதுகாப்புக்கு எந்தச் சிக்கலும் இல்லையே? காப்புக்காட்டில் விவசாயம் செய்ததாகவே இருந்தாலும், முறைப்படி நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். அதன் பிறகுதானே இந்த நடவடிக்கைக்குப் போக வேண்டும். மனிதாபிமான அடிப்படையிலாவது `இந்த ஒருமுறையோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இனி இங்கு விவசாயம் செய்யக் கூடாது' என எச்சரிக்கை செய்திருக்கலாம். அதைவிட்டு, சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறது வனத்துறை'' எனக் கொதிக்கிறார்கள் பழங்குடி அமைப்பின் தலைவர்கள்.

``பழங்குடியின மக்களைத் தத்தெடுத்துள்ளோம் எனச் சொல்லிக்கொள்ளும் வனத்துறை, இந்தக் கொரோனா காலத்தில் பழங்குடி மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. வாழைகளை வெட்டித் தற்சார்பு வாழ்க்கையையும் கெடுக்கிறார்கள். உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாம்'' எனக் கலங்குகிறார்கள் பழங்குடி மக்கள்

https://www.vikatan.com/news/controversy/forest-department-has-destroyed-the-cultivated-banana-of-the-tribes

 

வெட்டிய வாழை

 

வெட்டப்பட்ட வாழை

 

வெட்டப்பட்ட வாழை

வனத்துறையினர்

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு ஏழைகளில் மட்டுமே வீரத்தை காட்டமுடியும் , கெடு கெட்டவர்கள், பார்க்கவே மனதை என்னவோ செய்கின்றது, வாழையை வளர்த்தவர்க்குதான் அதன் அருமை புரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, உடையார் said:

இவர்களுக்கு ஏழைகளில் மட்டுமே வீரத்தை காட்டமுடியும் , கெடு கெட்டவர்கள், பார்க்கவே மனதை என்னவோ செய்கின்றது, வாழையை வளர்த்தவர்க்குதான் அதன் அருமை புரியும் 

எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் கொரனோ  வந்து ஆட்டம் காட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இவர்களுக்கு ஏழைகளில் மட்டுமே வீரத்தை காட்டமுடியும் , கெடு கெட்டவர்கள், பார்க்கவே மனதை என்னவோ செய்கின்றது, வாழையை வளர்த்தவர்க்குதான் அதன் அருமை புரியும் 

 

55 minutes ago, பெருமாள் said:

எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் கொரனோ  வந்து ஆட்டம் காட்டுது .

ஒரு பக்க நியாயம் மட்டும் கேட்டு தீர்வை சொல்லக்கூடாது, நியாமாரே.

இந்த காடுகளை காத்து, காடாக வைத்திருக்கவே, வனதுறையினரை அரசு நியமித்துள்ளது.

தேக்கு, சந்தன மரங்களை வெட்டி, காடழிப்பதனை தடுப்பதே இவர்களது முக்கிய இலக்கு. 

வனதுறை இல்லாத காலங்களில், வன்னிக்கு போய், கல்லெறிந்து காணி பிடித்த கதைகள், அந்த பிடித்த காணிகளை, வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தே தமக்கு சொந்தம் என்று கள்ள உறுதி எழுதி, காடழித்து, வாழை வளர்த்து, மா, தென்னை வைத்து பயிர் செய்த கதை உள்ளது.

இங்கே காட்டு பகுதியில், அதே போல வாழை வைத்திருக்கிறார்கள். வனத்துறை கண்ணை மூடிக்கொண்டிருந்தால், நாளடைவில், அந்த நிலம் அவர்கள் சொந்தமாகி, இங்க இருந்த காடு எங்கடா என்று கேட்கும் நிலைமை உருவாகும்.

ஒன்று, வாழை பலன் தரும் வரை காலம் கொடுத்திருக்கலாம். ஆனால், வாழையின் இயல்பு, குட்டி போட்டு.... தொடரும்.

ஆகவே, இங்கே சட்டம் தனது கடமையை சரியாக செய்துள்ளதாகவே பார்க்கிறேன்.   

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பெருமாள் said:

எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் கொரனோ  வந்து ஆட்டம் காட்டுது .

இல்லை பெருமாள் கொரொணா வந்து ஆட்டியும் இவர்கள் திருந்தமாட்டார்கள், ஏழைகளில் தான் இவர்களில் வீரம், கோழைகள்.

அவர்கள் இயற்கையுடன் எப்படி வாழ்கின்றார்கள் மகிழ்ச்சியாக, அதை போய் இவர்கள் கெடுக்கின்றார்களே, இதயமில்லா மிருகங்களா இவர்கள்?  

2 minutes ago, Nathamuni said:

 

ஒரு பக்க நியாயம் மட்டும் கேட்டு தீர்வை சொல்லக்கூடாது, நியாமாரே.

இந்த காடுகளை காத்து, காடாக வைத்திருக்கவே, வனதுறையினரை அரசு நியமித்துள்ளது.

தேக்கு, சந்தன மரங்களை வெட்டி, காடழிப்பதனை தடுப்பதே இவர்களது முக்கிய இலக்கு. 

வனதுறை இல்லாத காலங்களில், வன்னிக்கு போய், கல்லெறிந்து காணி பிடித்த கதைகள், அந்த பிடித்த காணிகளை, வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தே தமக்கு சொந்தம் என்று கள்ள உறுதி எழுதி, காடழித்து, வாழை வளர்த்து, மா, தென்னை வைத்து பயிர் செய்த கதை உள்ளது.

இங்கே காட்டு பகுதியில், அதே போல வாழை வைத்திருக்கிறார்கள். வனத்துறை கண்ணை மூடிக்கொண்டிருந்தால், நாளடைவில், அந்த நிலம் அவர்கள் சொந்தமாகி, இங்க இருந்த காடு எங்கடா என்று கேட்கும் நிலைமை உருவாகும்.

ஒன்று, வாழை பலன் தரும் வரை காலம் கொடுத்திருக்கலாம். ஆனால், வாழையின் இயல்பு, குட்டி போட்டு.... தொடரும்.

ஆகவே, இங்கே சட்டம் தனது கடமையை சரியாக செய்துள்ளதாகவே பார்க்கிறேன்.   

நாதமுனி நீங்கள் நினைப்பதுபோல் காட்டை அழித்து அவர்கள் விவசாயம் செய்யவில்லை, ஊடு பயிராகவே வாழையை வளர்த்திருப்பார்கள். காட்டு மரங்களை அவர்கள் தெய்வமாக வழிபடுகின்றார்கள். 

1 hour ago, உடையார் said:

 

கொடைக்கானல் வனப்பகுதியில் பல்வேறு இடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. அதை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் பெரும் செல்வந்தர்கள் என்பதால் அங்கு சட்டம் பேசாத வனத்துறையினர், மண்ணின் மைந்தர்களான தொல்குடிகளை வதைக்கிறார்கள். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகச் சொல்பவர்கள், குத்தகை காலம் முடிந்த நிலங்களுக்கு நேரடியாகப் போய், வனத்துறை கட்டுப்பாட்டில் அந்த இடங்களைக் கொண்டு வரவேண்டியதுதானே. ஆனால், அவர்களுக்கு மட்டும் நோட்டீஸ் விநியோகித்து, அவர்கள் நீதிமன்றம் செல்ல வழிகாட்டுகிறார்கள். அதற்குப் பிறகு அந்த வழக்குகளில் ஆர்வம் காட்டுவதில்லை. தனியார்கள் அந்த இடத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

வெட்டப்பட்ட வாழை
 
வெட்டப்பட்ட வாழை

ஆனால், மலைக்கிராம மக்களிடம் சர்வாதிகார போக்கைக் காட்டுகிறார்கள். வனத்தை நம்பிப் மக்கள், வாழையைத் தானே பயிரிட்டார்கள். அதில் வனபாதுகாப்புக்கு எந்தச் சிக்கலும் இல்லையே? காப்புக்காட்டில் விவசாயம் செய்ததாகவே இருந்தாலும், முறைப்படி நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். அதன் பிறகுதானே இந்த நடவடிக்கைக்குப் போக வேண்டும். மனிதாபிமான அடிப்படையிலாவது `இந்த ஒருமுறையோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இனி இங்கு விவசாயம் செய்யக் கூடாது' என எச்சரிக்கை செய்திருக்கலாம். அதைவிட்டு, சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறது வனத்துறை'' எனக் கொதிக்கிறார்கள் பழங்குடி அமைப்பின் தலைவர்கள்.

``பழங்குடியின மக்களைத் தத்தெடுத்துள்ளோம் எனச் சொல்லிக்கொள்ளும் வனத்துறை, இந்தக் கொரோனா காலத்தில் பழங்குடி மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. வாழைகளை வெட்டித் தற்சார்பு வாழ்க்கையையும் கெடுக்கிறார்கள். உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாம்'' எனக் கலங்குகிறார்கள் பழங்குடி மக்கள்

https://www.vikatan.com/news/controversy/forest-department-has-destroyed-the-cultivated-banana-of-the-tribes

 

நாதமுனி இந்த தனியார் நிறுவனங்களிடம் இவர்களின் வீரம் பயுமா? , at least 1min

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

 

 

ஆகவே, இங்கே சட்டம் தனது கடமையை சரியாக செய்துள்ளதாகவே பார்க்கிறேன்.   

சட்டம் ஒரு இருட்டறை ஏழைகளுக்கு, பணக்காரன் வாழ்ந்திட்டுப்போறன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயண்படுத்தி, நாதமுனி உங்கள் இதயத்தை தொட்டு சொல்லுங்கள் இல்லையா என்று??

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்,

நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஆனால், இங்கே பத்திரிகையாளரின் சாமர்த்தியம், நுணுக்கமாக பார்த்தால் தான் புரியும்.

தான் எடுத்துக் கொண்ட தலைப்புக்கு அமைய, பின்னணிகளை சேர்ப்பது பத்திரிகையாளரின் சாமர்த்தியம்.

இன்னோரு விதமாக சொல்கிறேன். உங்கள் வளவினுள், யாராவது ஏழை, உங்களைக் கேளாமல் வாழை போட அனுமதிக்க மாட்டீர்கள்.  

அனுமதி இல்லாமல் போட்டவர் சமூகத்தில் உங்கள் தரத்தில் உள்ளவர் ஆயின், அட்ஜஸ்ட் பண்ணி போவீர்கள்.

நான் இதனை சரி என்று சொல்லவில்லை. ஆனால் சட்டப்படி தவறு இல்லை என்றே சொல்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்,

இதே செய்திக்குறிப்பினை, இப்படி வாசித்துப் பாருங்களேன்.

  • அரசுக்கு சொந்தமான காட்டுப்பகுதியில், சட்டவிரோதமாக வாழைப்பயிர் செய்தவர்கள், வனத்துறை அதிகாரிகளை கண்டு தலை தெறிக்க ஓட்டம்.
  • அவர்களை திரத்திப்பிடித்த அதிகாரிகள், மீண்டும் இவ்வாறு செய்தால், கைதாகி, நீதிமன்றில் நிறுத்தி, சிறைக்கு அனுப்பப்படுவர் என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
  • அவர்கள் அங்கே சட்ட விரோதமாக வைத்திருந்த வாழை மரங்கள் அழிக்கப்பட்டன.

வாழை மரத்தில் ஆம்பித்து, ஊடுபயிர் கஞ்சாவில் முடிவது தெரியாது போலுள்ளது. 🤔

கஞ்சா செடி, தனியார் காணிகளில் வளர்க்கப்பட்டால், அந்த நிலம், பறிமுதலாகும். யாருடைய காணி என்று தெரியாத வகையில், அரச காணிகளில் தான் வளர்க்கப்படும். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழங்குடி மக்கள் காடுகளை நம்பித்தானே வாழ்கின்றார்கள்.அவர்கள் காடுகளை ஒரு போதும் அழிக்க நினைக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பழங்குடி மக்கள் காடுகளை நம்பித்தானே வாழ்கின்றார்கள்.அவர்கள் காடுகளை ஒரு போதும் அழிக்க நினைக்க மாட்டார்கள்.

காட்டினுள் வாழ்வதால் அவர்களுக்கு, சில சிறப்புரிமைகள் வழக்கப்பட்டுள்ளன. 

அதனை மீறாமல், அதனுள் வாழவதனை உறுதிப்படுத்தவும், அவர்களது வாழ்வினை வெளியார் குழப்புவதனையும் தடுப்பதே வனத்துறையின் ஒரு முக்கிய நோக்கம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Nathamuni said:

காட்டினுள் வாழ்வதால் அவர்களுக்கு, சில சிறப்புரிமைகள் வழக்கப்பட்டுள்ளன. 

அதனை மீறாமல், அதனுள் வாழவதனை உறுதிப்படுத்தவும், அவர்களது வாழ்வினை வெளியார் குழப்புவதனையும் தடுப்பதே வனத்துறையின் ஒரு முக்கிய நோக்கம். 

வனத்துறை நீதி நேர்மையாக இருந்தால் எப்படி களவாக மரங்கள் மற்றும் மிருகங்கள் சூறையாடப்படுகின்றது????😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

வனத்துறை நீதி நேர்மையாக இருந்தால் எப்படி களவாக மரங்கள் மற்றும் மிருகங்கள் சூறையாடப்படுகின்றது????😁

அவர்களது நேர்மை நாடறியும்...

நான் சொல்லவந்தது... பத்திரிகையாளர் தனது எழுத்தின் மூலம், நியாயத்தினை, அநியாயமாகவும், அநியாயத்தினை, நியாயமாகவும் எழுத முடியும் என்பதனை...

எங்க திண்ணை பக்கம் காணமே.... விரதமோ? 🥴

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Nathamuni said:

அவர்களது நேர்மை நாடறியும்...

நான் சொல்லவந்தது... பத்திரிகையாளர் தனது எழுத்தின் மூலம், நியாயத்தினை, அநியாயமாகவும், அநியாயத்தினை, நியாயமாகவும் எழுத முடியும் என்பதனை...

எங்க திண்ணை பக்கம் காணமே.... விரதமோ? 🥴

 You can not chat because you're in block list.

ஊரிலை குத்திக்காட்டுறதெண்டு சொல்லுவினம். நீங்களும் அதையே செய்யிறியள்.😁 எரியிற நெருப்பிலை எண்ணை ஊத்துறமாதிரி கிடக்கு 😂 ஏற்கனவே திண்ணை நெருக்கடியாலை யாழ்களமே சிலோவாய் வேலை செய்யுதாம்.காகம் இருக்க பனம்பழம் விழுந்தது போலை எனக்கு திண்ணையிலை தடை.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

 You can not chat because you're in block list.

ஊரிலை குத்திக்காட்டுறதெண்டு சொல்லுவினம். நீங்களும் அதையே செய்யிறியள்.😁 எரியிற நெருப்பிலை எண்ணை ஊத்துறமாதிரி கிடக்கு 😂 ஏற்கனவே திண்ணை நெருக்கடியாலை யாழ்களமே சிலோவாய் வேலை செய்யுதாம்.காகம் இருக்க பனம்பழம் விழுந்தது போலை எனக்கு திண்ணையிலை தடை.:cool:

இதெப்ப நடந்தது.... பெருமாளுக்கு பதில் ஒண்டு போட்டு விட்டு, திரிகுள நிக்கிறியள்.... திண்ணப் பக்கம் கட்டாயம் வந்துருப்பியளே எண்டு, கேட்டனான்... 

இதெல்லாம், வீர தழும்புகள்... சோர்வாக கூடாது... இரண்டொரு நாளில சரியாப்போடும்... இப்போதைக்கு திரியிலை நிண்டு விளையாடுங்கோவன்.

பாணபத்திர ஓணாண்டிப் புலவரும் கொஞ்ச நாளாய் திணையில் தடை. பிறகு வந்தார்... இப்ப காணம்... ஏதோ எசகு பிசகா... சிக்கிப்போனார் போலை கிடக்குது.... முதலே மூண்டு.... இனி நாலாவதோட... மனிசன் சரியான கஷ்ட் பட போகுது கண்டியளே... 😄

Edited by Nathamuni

லஞ்சமா ஏதாவது கேட்டிருப்பாங்கள் இந்த கஸ்டநிலைமையில் சனம் குடுத்திருக்காது அதனால் வாழையை வெட்டிப்போட்டு போயிட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

வனதுறை இல்லாத காலங்களில், வன்னிக்கு போய், கல்லெறிந்து காணி பிடித்த கதைகள், அந்த பிடித்த காணிகளை, வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தே தமக்கு சொந்தம் என்று கள்ள உறுதி எழுதி, காடழித்து, வாழை வளர்த்து, மா, தென்னை வைத்து பயிர் செய்த கதை உள்ளது.

நீங்க ஒன்றும் ஆனந்தசங்கரி தர்மலிங்கம் போன்றோரை சொல்லலைத் தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.