Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருந்துகள், உபகரணங்களைப் பதுக்கவே சீனா அபாயத்தை மறைத்தது – அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருந்துகள், உபகரணங்களைப் பதுக்கவே சீனா அபாயத்தை மறைத்தது – அமெரிக்கா

 

கொறோனாவைரஸ் வெகு தீவிரமாகப் பரவுகிறது என்பது தெரிந்திருந்தும் போதுமான மருந்துகள், உபகரணங்கள் பதுக்கப்படும்வரை அவ்வபாயத்தை வெளிநாடுகளுக்கு மறைத்துவிட்டது என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

கடந்த ஜனவரி மாதமே சீனாவுக்கு இந் நோயின் கொடூரம் பற்றித் தெரிந்திருந்தது எனவும், போதுமான மருந்துகளும், பாதுகாப்பு உபகரணங்களும் சேமிக்கப்படும்வரை அவ் விடயத்தை வெளியில் தெரிவிக்கவில்லை எனவும் அமெரிக்க உளவு நிறுவனங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவின் உள்ளகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட நான்கு பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொருட்களுக்கு அதிக தேவைகள் இருக்கிறது எனத் தெரியவரும்போது உலகின் பல நாடுகளும் நிறுவனங்களும், தனி மனிதர்களும் அவற்றைப் பதுக்குவதோ, விலைகளை அதிகரிப்பதோ வழக்கம்.

கொறோனாவைரஸின் பரவலுக்கு சீனாவே முழுப் பொறுப்பையும் எடுக்கவேண்டுமென அமெரிக்க நிர்வாகம் முன்வைக்கும் விமர்சனங்கள், கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. உள்நாட்டில் அமெரிக்க நிர்வாகம் இழைத்த தவறுகளின் மீதான விமர்சனங்களைத் திசை திருப்புவதற்காக அது இம் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக ட்றம்பை விமர்சிப்பவர்கள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும், அமெரிக்காவை விட மேலும் பல நாடுகள் தற்போது சீனாவின் மீதான இதே குற்றச்சாட்டுகளை முனவைக்கும் அதே வேளை, நட்டஈடுகளையும் கோர ஆரம்பித்துள்ளன.

 

இதர நாடுகளுக்கு மட்டுமல்ல, உலக சுகாதார நிறுவனத்துக்கும் இவ் விடயங்களைச் சீனா மறைத்துவிட்டது எனவும், ஜனவரி மாதத்தை அண்டிய காலங்களில் சீனா பெருந்தொகையான உடல், முக, கைக் கவசங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமெரிக்க உளவு நிறுவனங்களின் அறிக்கையை உதாரணம்காட்டி உள்ளக அமைச்சு தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

சீனாவின் இறக்குமதி, ஏற்றுமதி நடவடிக்கைகள் சாதாரண நாட்களைப்போல இருக்கவில்லை. அதில் காணப்பட்ட மாற்றங்கள் அசாதாராணமானவை எனவும் அது சுட்டிக்காட்டுகிறது.

சீனா, வைரஸ் தொற்று பற்றி உலக சுகாதார நிறுவனத்துக்க்கு டிசம்பர் 31 இலும், அமெரிக்க நோய்க்கட்டுபாட்டு மையத்துக்கு ஜனவரி 3 இலும் அறிவித்திருந்தது. ஆனாலும் மார்ச் 11 வரை இது ஒரு சீனாவில் பரவும் வியாதி (epidemic) வெளிநாடுகளுக்குப் பரவும் ஆபத்துக் குறைவு எனப் பொதுவாகக் கருதப்பட்டது.

ஜனவரி 20 இல் ‘இது ஒரு மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றும் வியாதி’ எனச் சீனா அறிவித்தது. ஆனால் இது ஒரு ஆபத்தான கொள்ளை நோய் (pandemic) மார்ச் 31 இல் தான் உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது. இதற்குள் சீனாவிலிருந்து பெரும்தொகையான பயணிகள் வெளிநாடுகளுக்கு நோயைக் கொண்டுசென்றுவிட்டார்கள். உலகசுகாதார நிறுவனத்தின் அறிவித்தல் கிடைக்கும்வரை உலக நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அதே வேளை சீனாவை எல்லையாகக் கொண்ட வியட்நாம், ஹொங் கொங், கொரியா போன்ற நாடுகள் தமது நோய்க் கட்டுபாட்டு நடவடிக்கைகளைத் துதிதப்படுத்திக்கொண்டுவிட்டன.

 

எனவே, உலக சுகாதார நிறுவனம் சீனாவுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கும் காரணம் இல்லாமலில்லை.

இன்னுமொரு விடயம், சீனா தனது மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மீது விதித்த கட்டுப்பாடுகளும், தகவற் பரிமாற்றங்களின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளும். சில சமூக வலைத் தளங்களை குறிப்பிட்ட காலத்துக்கு முற்றாக அரசு கைப்பற்றியிருந்தது. அவசரகால நிலைமை ஏற்படும்போது பல நாடுகளும் இப்படியான நடவடிக்கைகளை எடுப்பது இயல்பேயெனினும், அது பிறநாடுகளின் மக்களின் துன்பங்களுக்குக் காரணமாக அமையுமானால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பல மேற்குநாடுகளும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலில் இயங்கியதால் பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் எல்லைப் பரிசோதனைகள் மேற்கொண்டதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அநியாயமாகப் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. தன்னைத் தயாரித்துக்கொள்வதற்கு அமெரிக்காவிற்கு இரண்டு மாதங்கள் இருந்தன. எனவே இததனை உயிர்பறிப்புகளுக்கும், பல நாடுகளின் அரசாங்கங்களும், உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் பெரும் பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

https://marumoli.com/மருந்துகள்-உபகரணங்களைப்/?fbclid=IwAR0dW3Ekk7YLOIHf1kWJoF3J0R-2dHk_IjkfgbOoZg9DgjnaEE_Un4gVPeA

  • கருத்துக்கள உறவுகள்

மருந்துப் பொருட்களை பதுக்குவதற்காக கரோனா தீவிரத்தை சீனா மறைத்துவிட்டது: அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தகவல்

america-slams-china  
 

வாஷிங்டன்

‘‘கரோனா வைரஸ் தொற்றின் தீவி ரத்தை உலக நாடுகளிடம் சீனா மறைத்துவிட்டது. அதன்மூலம் மருந்து பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்து பதுக்கிக் கொண்டுள்ளது’’ என்று அமெ ரிக்க உள்துறை பாதுகாப்புப் புலனாய்வுத் துறை தயாரித்துள்ள அறிக்கையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் உலகம் முழு வதும் பரவிய பிறகு அமெரிக்கா வின் பல்வேறு துறைகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன. சீனாதான் இதற்குக் காரணம். கரோனா வைரஸ் குறித்த உண்மையை கண்டறிவோம். உலக நாடுகளுக்கு சீனா பதில் சொல்லியே ஆக வேண்டும். அதற்கான விலை யைக் கொடுத்தாக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கடுமையாகப் பேசி வருகிறார்

இந்நிலையில், அமெரிக்க உள்துறையின் கீழ் செயல்படும், பாது காப்புப் புலனாய்வுத் துறையினர் கரோனா வைரஸ் குறித்து தீவிர விசாரணை மற்றும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ள னர். நான்கு பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, ‘ரகசியம்’ என்று குறிப்பிடப்படவில்லை. எனினும், ‘அலுவலகப் பயன்பாட்டுக்கு மட்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள் ளது. அந்த அறிக்கை அமெரிக்க செய்தி நிறுவனத்துக்குக் கிடைத் துள்ளது.

அந்த அறிக்கை குறித்து வெளி யான செய்தியில் கூறியிருப்ப தாவது:

கரோனா வைரஸின் தீவிரத்தை சீனத் தலைவர்கள் உள்நோக் கத்துடன் மறைத்துவிட்டனர். கடந்த ஜனவரி மாதமே வைரஸின் தீவி ரத்தை சீனா கூறியிருந்தால், இவ் வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால், கரோனா வைரஸின் தீவி ரத்தை அறிந்திருந்த சீனா, மருந் துப் பொருட்கள் ஏற்றுமதியை கணிசமாகக் குறைத்து கொண்டுள் ளது. அத்துடன் மருந்துப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்துள்ளது. குறிப் பாக முகக் கவசங்கள், கையுறை கள், மருத்துவ கவச உடைகள் மருத்துவப் பொருட்களை இறக்கு மதி செய்துள்ளது.

சீனாவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் திடீ ரென பெரும் மாற்றம் காணப் பட்டுள்ளது. இது வழக்கமானதாக தெரியவில்லை. எனவே, கரோனா வைரஸின் தீவிரத்தை சீனா நன்கு அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

https://www.hindutamil.in/news/world/552868-america-slams-china-1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.