Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனிமொழி எம்பி ஆகிறார்? கருணாநிதியின் குடும்பத்திற்கு இன்னுமொரு பதவி

Featured Replies

கனிமொழி எம்பி ஆகிறார்? கருணாநிதியின் குடும்பத்திற்கு இன்னுமொரு பதவி

எம்.பி. ஆகிறார் கருணாநிதி மகள் கனிமொழி

மே 27, 2007

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் கருணாநிதியின் மகள், கவிஞர் கனிமொழிக்கும், திருச்சி சிவாவுக்கும் சீட் தரப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு 6 பேரைத் தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் 4 பேரும், அதிமுக கூட்டணி சார்பில் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

karuna-family.jpg

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தேசிய செயலாளர் டி.ராஜா போட்டியிடவுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களைத் தேர்வு செய்ய நேற்று மாலை முதல்வர் கருணாநிதி தலைமையில், அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் அரங்கில் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை செய்தியாளர்களிடம் வாசித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் ஜூன் 15ம் தேதி நடைபெறவிருக்கிற மாநிலங்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு, இந்தத் தேர்தலில் நமது கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளருக்கும் ஆதரவு தருவது என்பதோடு, திமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களை நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருச்சி என்.சிவா, கவிஞர் கனிமொழி ஆகியோரை வேட்பாளராக நிறுத்துவதென ஒரு மனதாக உயர் நிலை செயல் திட்டக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது என்றார் கருணாநிதி.

திருச்சி சிவா ஏற்கனவே எம்.பியாக இருந்தவர், திமுக மாணவர் அணி அமைப்பாளராக இருக்கிறார். கனிமொழி முதல் முறையாக எம்.பி. ஆகிறார். மத்திய அமைச்சரவையிலும் அவருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2007/05/27/karuna.html

எம்.பி. ஆகிறார் கனிமொழி - தி.மு.க. சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் கவிஞர் கனிமொழியும், திருச்சி என். சிவாவும் போட்டியிடுகின்றனர்.

தி.மு.க.வுக்கு இரண்டு இடங்களிலும் வெற்றி உறுதி என்பதால் கனிமொழியும், திருச்சி என்.சிவாவும் மாநிலங்களவை எம்.பி. ஆகின்றனர். இதற்கான அறிவிப்பை தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் வெளியிட்டார்.

முன்னதாக, இதுகுறித்து முடிவு எடுக்க, திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியது:

ஜூன் மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் குறித்து உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், திமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு 2 வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி என். சிவாவும், கவிஞர் கனிமொழியும் போட்டியிடுகின்றனர்.

நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:

குதிரை பேரம் கூடாது:

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டி போட்டு, இங்குள்ள எம்.எல்.ஏ.க்களை அங்கு இழுப்பதும் அங்குள்ள எம்.எல்.ஏ.க்களை இங்கு இழுப்பதுமான குதிரை பேரத்துக்கு இடமளிக்கக் கூடாது.

சுமுகமான முறையில் மொத்தமுள்ள 6 இடங்களில் திமுகவுக்கு இரண்டு, எதிர்க்கட்சிக்கு இரண்டு, தோழமைக் கட்சிகளுக்கு இரண்டு என்கிற முறையில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியும், பரபரப்பும் இல்லாத தேர்தலை நடத்த விரும்புகிறேன் என்று ஒரு வாரத்துக்கு முன்பே நிருபர்களிடம் சொல்லி இருக்கிறேன்.

மத்திய அமைச்சருக்கு வாய்ப்பு இல்லை:

கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமா என உடனே கேட்கிறீர்களே.

தமிழகத்தில் இருந்து 13 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அதற்குமேல், சங்கப்பலகை இடம் தராது.

தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிகாரியாக சட்டப் பேரவை செயலாளர் செல்வராஜை முதலில் நியமித்துவிட்டு, இப்போது அவரை மாற்றி இருக்கிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது, சட்ட ரீதியான காரணமா? அரசியல் ரீதியான காரணமா? எனத் தெரியவில்லை என்று பதில் அளித்தார் கருணாநிதி.

-Tamilwin-

கனிமொழி, ஆகா இனிமையான தூய தமிழ்ப்பெயர், இவரின் பெயருக்கு மெருசேர்க்கும் வகையில் இவரின் தமிழ் ஈடுபாடு தனி அழகு. ஈழத்தமிழர் போராட்டுத்துக்குஇவரின் ஆதருவு இமையத்தின் அளவு. இவரின் பணி வெற்றியடைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் வாரிசுகளில் அதிக தமிழ் உணர்வு மிக்கவர் கனிமொழி.

Edited by கந்தப்பு

கனிமொழி ஒரு தமிழ் உணர்வாளர் மட்டும் இல்லை .ஒரு வித்தியாசமான பெண். தந்தையின் உணர்வால் வளர்ந்து ஒரு சாதாரண கணவரை கலப்புத்திருமணமாக செய்து கொண்டார் என்று வார இதழ்களில் வாசித்த ஞாபகம்.

கனிமொழி தமிழ் உணர்வாளராகவோ, ஈழத்தமிழர் ஆதரவாளராகவோ அல்லது வித்திசாமானவராகவோ இருக்கலாம்.

ஆனால் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை வழிநடத்துவது தமிழ்நாட்டு அரசியல்தான். ஆட்சியில் பெரிய பதவிக்கு வரும்போது தனது தனிப்பட்ட கருத்துப்படி பெரிதாக எதையும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாதிரியான கருத்துக்களை கள உறுப்பினர்கள் வைக்க வேண்டுமென்றும் நிர்வாகம் தெரிவித்தால் நன்றாயிருக்கும். வைத்த கருத்துக்களைத் தூக்க வேண்டிய அவசியம் இதனால் இல்லாமல் போகும்! மிக்க நன்றி!!

Justin

நீங்கள் கள நிபந்தனைகளை ஏற்றுத் தானே அங்கத்தவராகியுள்ளீர்கள். அந்த நிபந்தனைகளை வாசிக்க மறந்து விட்டீர்களா?? தேவையாயின் அவற்றை மீண்டும் வாசித்துப் பார்க்கலாமே!!

  • கருத்துக்கள உறவுகள்

Justin

நீங்கள் கள நிபந்தனைகளை ஏற்றுத் தானே அங்கத்தவராகியுள்ளீர்கள். அந்த நிபந்தனைகளை வாசிக்க மறந்து விட்டீர்களா?? தேவையாயின் அவற்றை மீண்டும் வாசித்துப் பார்க்கலாமே!!

நேற்று இப்பகுதியில் எனதும் வடிவேலுவினதும் கருத்துகள் இரண்டு இருந்தன. இன்று நீக்கப் பட்டுள்ளன. களவிதிகளை நான் வாசித்தேன், பின்பற்றுகிறேன். எனது கருத்து நான் அறிந்த கள விதிகளை மீறியதாக இருக்கவில்லை. வடிவேலுவினது கருத்தும் அப்படி மீறியதாகத் தெரியவில்லை. ஒரு வேளை அடிதடி ஐயாவின் கருத்தை எதிர்க்கக் கூடாது எனப் புதுக் கள விதி இயற்றப் பட்டிருக்கிறதோ அறியேன்.அப்படி ஏதும் புது விதி இருந்தால் அல்லது வேறென்ன வகையில் களவிதி மீறப் பட்டிருக்கிறது என்று அறியத்தந்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். நான் எப்படிக் கருத்தெழுத வேண்டுமென்று அறியத் தரும்படி பிரேரித்தது பொதுவான களவிதிகள் குறித்தல்ல. ஒரு தலைப்பை ஆரம்பிக்கும் போது உறுப்பினர்கள் எப்படியான கருத்துக்களைத் தர வேண்டுமெனக் குறிப்பிட்டால் நல்லது என்றே கூறினேன். உதாரணத்திற்கு, இந்தச் செய்தித் தலைப்பை "கனிமொழி எம்பி ஆகிறார்; எல்லோரும் ஜோரா ஒரு 'ஓ' போடுங்கோ!" என்று தந்திருந்தால் "ஓ" போடுவோர் போட்டிருக்க மற்றையோர் ஒதுங்கியிருப்பார்கள்.

Edited by Justin

"கனிமொழி" - தொலை நோக்கும், ஆழ்ந்த பார்வையுடைய, திறமைகளின் முழுவடிவம்! மனிதத்தை நேசிக்கும் இழகிய இதயம்!. பாரதி தந்த புதுமைப்பெண். அவற்றிற்கப்பால் எம்மேல் அன்பு கொண்ட இதயம்!

"புலிக்குப் பிறந்தது பூனையாகாது"!!! வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்தை எதற்காக நீக்கினார்கள் நான் எழுதியதில் என்ன பிழை கண்டு பிடித்தீர்கள்? அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் கள நிர்வாகிகளினுடைய வரம்பு மீறல்கள் கண்டிக்க தக்கண.... :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.