Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற அ.தி.மு.க.வினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற அ.தி.மு.க.வினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

 

சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற அ.தி.மு.க.வினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பதிவு: மே 12,  2020 04:30 AM
சென்னை, 
 
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க.வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணியை வைத்து அமுக்கி மூச்சுத் திணற வைத்து தீவைத்து கொளுத்திய கொடூர சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது.
 
கோவை வேளாண் கல்லூரி மாணவியர் சுற்றுலா சென்ற பஸ்சை தர்மபுரியில் தீக்கிரையாக்கி மாணவியர் மூவரை கருக்கி கதறக் கதற கொன்றதற்கு காரணமானவர்கள் அ.தி.மு.க.வினர் சிலர். அதற்கு அடுத்த கொடிய சம்பவம் இது.
 
சிறுமியை இழந்து வாடும் ஜெயபால் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் அதேவேளையில், குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி ஜெயஸ்ரீ போன்ற சிறுமிகளையும், பெண்களையும் காப்பாற்றும். இந்தக் கொடூர கொலைக் குற்றத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினர் சம்பந்தப்பட்டுள்ளதால், காவல்துறையினர் பெயரளவிற்கு செயல்படாமல், சட்டத்தின் முழு வலிமையையும் நியாயமாகவும் வேகமாகவும் பயன்படுத்த வேண்டும். விரைந்து உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படிச் செய்ய வேண்டும்.
 
ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட பலர் சட்டத்தின் பிடியில் இருந்து நழுவி உள்ள நிலையில், விழுப்புரத்திலும் அந்த நிலைமை ஏற்படக்கூடாது என்பதையும், ஜெயஸ்ரீயின் கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க தி.மு.க. துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இதுபோன்ற கொடிய நிகழ்வுகள், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதை உணர்ந்து காவல் துறையினர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் சாய்ந்துவிடாமல், நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை; தேசிய குழந்தைகள் நல உரிமை  ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு: 7 நாளில் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் 

villupuram-girl-burned-to-death-national-commission-for-protection-of-child-rights-ncpcr-take-suo-moto-notice-to-report-whith-in-7-day  
 

விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆவார். கடந்த 10-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வரவே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்

இந்நிலையில், தீயில் கருகிய படுகாயமடைந்த மாணவி ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அந்த மாணவி தன்னை ஏசகனும், முருகனும் பெட்ரோல் ஊற்றி எரித்ததை நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழ் மற்றும் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கைக் கையில் எடுத்த தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையம் விழுப்புரம் ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதன் குழந்தைகள் உளவியல் மற்றும் சமூக நலன் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் அனுப்பிய நோட்டீஸில், ''நடந்த சம்பவத்தை பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாக அறிந்து குழந்தைகள் நல உரிமைச் சட்டம் 2005 பிரிவு 13(1)-ன் படி தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியை கொலை செய்த இரண்டு குற்றவாளிகள் மீதும் குழந்தைகள் நீதிச்சட்டத்தின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அளிக்கப்பட்ட சிகிச்சை, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை விரிவான அறிக்கையாக 7 நாட்களுக்குள் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் முனைப்பு காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் தலைவர், உறுப்பினர்கள் இன்றி அலுவலகமே செயல்படாமல் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/553965-villupuram-girl-burned-to-death-national-commission-for-protection-of-child-rights-ncpcr-take-suo-moto-notice-to-report-whith-in-7-day-1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரத்தில் அறிக்கை; தாமாக முன்வந்து வழக்கு பதிவு -விழுப்புரம் சிறுமி விவகாரத்தில் கொதித்த ஆணையம்

சிறுமி ஜெயஸ்ரீயின் வீடு

சிறுமி ஜெயஸ்ரீயின் வீடு

முன் விரோதத் தகராறில் விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது தேசிய குழந்தைகள் ஆணையம்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால் (42), ராஜி தம்பதி. இவர்களுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள். விவசாயக் கூலி வேலை செய்துவரும் ஜெயபால் தனது வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று ஜெயபாலும், அவரின் மனைவியும் வெளியே சென்றிருந்த நிலையில், மூத்த மகளான ஜெயஸ்ரீ (16) மட்டும் வீட்டில் இருந்திருக்கிறார்

`என் அப்பா எங்கே....!’-முன்விரோதத்தால் எரிக்கப்பட்ட சிறுமி; அ.தி.மு.க நிர்வாகிகள் கைது

 

சுமார் 11 மணியளவில் ஜெயபால் வீட்டுக்குள் இருந்து திடீரென்று புகைமூட்டம் வெளியேறியதுடன், அலறல் சத்தமும் கேட்டது. அதனால் அக்கம்பக்கத்தினர் ஜெயபாலின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கே உடல் முழுவதும் கருகிய நிலையில் சிறுமி ஜெயஸ்ரீ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

90 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஜெயஸ்ரீ, கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும்தான் தனது கைகளைக் கட்டிப்போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க கவுன்சிலர் முருகன் மற்றும் கிளைக்கழக செயலாளர் கலியபெருமாள் இருவரையும் கைது செய்த காவல்துறை அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தேசிய குழந்தைகள் ஆணயம்
 
தேசிய குழந்தைகள் ஆணயம்

சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியிருக்கும் நிலையில், முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரையும் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ``சிறுமியை எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க-வினர் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ்,``ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கும் தேசிய குழந்தைகள் ஆணையம், சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 1 வாரத்துக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், தேசிய அளவில் குழந்தைகள் சந்திக்கும் மனஅளவிலான சித்ரவதைகளுக்கும் உடலளவிலான வன்கொடுமைகளுக்கும் ஒரே சட்டம்தான். குற்றமிழைத்தவர்களுக்கு குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஆணையங்கள் சட்டம் 2005, பிரிவு 13(1)-ன்படி தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

 

https://www.vikatan.com/news/crime/national-commission-for-protection-of-child-rights-seeks-report-on-villupuram-school-girl-issue

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு முன்பகை இருந்தாலும்..... 
ஒன்றும் அறியாத அப்பாவி சிறுமியை... எரித்துக் கொன்றதை மன்னிக்க முடியாது.

இது... தமிழ்நாட்டில், நடந்தது என்னும் போது, மிகவும் வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது.   😢

  • கருத்துக்கள உறவுகள்

ஆ ?  குடும்ப பிரச்சனைக்காகவா பிள்ளையை வீட்டோடு சேர்த்து கொளுத்தினவை :shocked:

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2020 at 04:45, தமிழ் சிறி said:

எவ்வளவு முன்பகை இருந்தாலும்..... 
ஒன்றும் அறியாத அப்பாவி சிறுமியை... எரித்துக் கொன்றதை மன்னிக்க முடியாது.

இது... தமிழ்நாட்டில், நடந்தது என்னும் போது, மிகவும் வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது.   😢

 

53 minutes ago, ரதி said:

ஆ ?  குடும்ப பிரச்சனைக்காகவா பிள்ளையை வீட்டோடு சேர்த்து கொளுத்தினவை :shocked:

அந்த சிறுமியை எரித்தது கொடுமையானது. எரித்தவர் அதிமுகவினர்.

ஆனாலும் அதை கண்டிக்க திமுகவுக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?

பத்திரிகை அலுவலகத்தினை கொளுத்தி அதனுள் இருந்த மூவர் மரணத்துக்கு காரணமாகி, கலைஞரின் மகன் என்பதால் தப்பிய அழகிரியின் தம்பி.... கண்டனம் தெரிவிப்பதை என்னென்பது?

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயஶ்ரீ கொலையும் கட்சி பதவிகளும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி மாணவி கொலை: யார் விசாரித்தாலும் காவல்துறை கைது செய்தவர்களே குற்றவாளிகள் எனத் தெரியவரும்; எஸ்.பி. ஜெயக்குமார் தகவல்

girl-murder-enquiry-report-sent-to-district-collector விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார்: கோப்புப்படம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே நடந்த பள்ளி மாணவி கொலை வழக்கின் அறிக்கை ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது என, எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு பள்ளி மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு எரித்துக் கொல்லப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக, அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் முருகன், அதிமுக கிளைச் செயலாளர் யாசகம் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய இருவரையும் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸில், "இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட கொடூரக் குற்றவாளிகள் மீது 2015-ம் ஆண்டின் சிறார் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சிறுமிக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை விவரங்கள், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் வழக்கின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை 7 நாட்களுக்குள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து எஸ்.பி. ஜெயக்குமாரிடம் கேட்டபோது, "பள்ளி மாணவி கொலை வழக்கில் எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முறையாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை எந்த வகையில், யார் விசாரணை மேற்கொண்டாலும் காவல்துறை கைது செய்தவர்களே குற்றவாளிகள் எனத் தெரியவரும்" என்றார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/554431-girl-murder-enquiry-report-sent-to-district-collector-1.html

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.