Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் விவகாரம் : மீள் விசாரணையா ? விடுதலையா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் விவகாரம் : மீள் விசாரணையா ? விடுதலையா ?

(எம்.எப்.எம்.பஸீர்)

 

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் விவகாரத்தில்,  அவர் குற்றாவாளியாக காணப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீள் விசாரணை நடாத்துவதா அல்லது அவரை விடுவிப்பதா என்பது குறித்து எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளது. 

 

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, அவர் தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டு மனு  இன்று மேன் முறையீட்டு மன்றின் நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்ணான்டோ முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் ரட்ணம்,  மேன் முறையீட்டு மனுதாரரின் சட்டத்தரணி ஜானதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் மன்றில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்தே, மேன் முறையீட்டு நீதிமன்றம்  மேற்படி தீர்மானத்துக்கு வந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்த காலத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு செய்த குற்றத்திற்காக விடுதலைப்புலிகளின் நுண்கலைக் கல்லூரியின பொறுப்பாளராக இருந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி,யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பெண் ஒருவரை கடத்திச் சென்ற குற்றத்திற்காக புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியும்,  யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுபவருமான க.கண்ணதாசன் என்பவருக்கே ஆயுள் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

2007 ஆம் ஆண்டு ஜனவரி காலப்பகுதியில் கிளிநொச்சியில் வைத்து விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த  குற்றச்சாட்டு தொடர்பில் 50 வயதுடைய கனகசுந்தரம் கண்ணதாசன் என்ற முன்னாள் போராளிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த எதிரிக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் வியபாலன் மஞ்சுளா என்பவரை விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டுக்காக கடத்திய குற்றச்சாட்டினை உள்ளடக்கி குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2016 மே மாதத்தில் இருந்து குறித்த எதிரிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்றதுடன், இது குறித்த வழக்கை சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தியிருந்தார்.

இந் நிலையில் சாட்சி விசாரணைகளின் பின்னர் கடந்த 2017 ஜூலை 25 ஆம் திகதி இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய வவுனியா மேல் நீதிமன்றம், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் க.கண்ணதாசனை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்நிலையிலேயே அந்த தண்டனைக்கு எதிராக  க.கண்ணதாசன் மேன் முறையீட்டு நீதிமன்றில் மேன் முறையீடு செய்தார். அது குறித்த வழக்கே இன்று விசாரணைக்கு வந்தது.

 இதன்போது மன்றில் ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் குமார் ரட்ணம், ' குறித்த தீர்ப்பு தொடர்பில் முழுமையாக  உடன்பட முடியாவில்லை எனவும், அதனால் அந்த விவகாரத்தை மீள விசாரணை செய்ய அனுமதித்து உத்தரவிட வேண்டும்.' எனவும் தெரிவித்தார்.

 இந் நிலையில் மேன்முறையீட்டு மனுதாரர் சார்பில் ஆஜரான  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்,  சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் ரட்ணத்தின்  கருத்தை மேற்கோள் காட்டி,  தனது சேவை பெறுநரான க.கண்ணதாசனை விடுவிக்க வேண்டும் என கோரினார்.

எவ்வாறாயினும் நாட்டில் தற்போது நிலவும் சூழலில், இன்று வழக்கு விசாரணைகளின் போது குற்றவாளி க.கண்ணதாசன் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் , மேன் முறையீட்டு மனுதாரர் எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட மேன் முறையீட்டு நீதிமன்றம், அன்றைய தினம் மீள் விசாரணைக்கு உத்தரவிடுவதா அல்லது விடுவிப்பதா என்பது குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

https://www.virakesari.lk/article/81956

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்கும், விசாரணையும், தீர்ப்பும் எதிர்காலத்தில் புதிய பரிமாணத்தில் வெளிச்சத்துக்கு வராத பல விசயங்களை இழுத்து போடலாம். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மூலம் நேரடியாக முறைப்பாடு செய்யப்பட்டமை கவனத்துக்குரியது. 

ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு, போரும் ஓய்ந்து, பெரிய தலைகளே சுதந்திரமாக திரியும் இந்த காலத்தில் பொதுவாழ்வில் தன்னை இணைத்துக்கொண்ட ஒருவருக்கு தண்டனை அதிகபட்சமாகவே தெரிகின்றது.

இப்போது இங்கு வழக்காடும் சுமந்திரன் என்பவர் சிங்கள சுமந்திரனா , இல்லை தமிழ் சுமந்திரனா எண்டு யாரவது விளக்கம் கொடுப்பார்களா? இங்கு குற்றம் சாடப்பட்டுள்ள கண்ணதாசன் தமிழனா, சிங்களவனா இல்லை முஸ்லிமா? 

23 hours ago, Vankalayan said:

இப்போது இங்கு வழக்காடும் சுமந்திரன் என்பவர் சிங்கள சுமந்திரனா , இல்லை தமிழ் சுமந்திரனா எண்டு யாரவது விளக்கம் கொடுப்பார்களா? இங்கு குற்றம் சாடப்பட்டுள்ள கண்ணதாசன் தமிழனா, சிங்களவனா இல்லை முஸ்லிமா? 

ஏன் எல்லோரும் கப்சிப்பாகி விடடார்கள்। சுமந்திரன் புலிகளுக்காக, புலி ஆதரவாளர்களுக்காக வாதாடினால் அதை இலகுவாக மறந்து விடுவார்கள்। ஒரு சிங்களவனுக்காக, சோனவனுக்காக தனது தொழில் ரீதியாக ஏதும் செய்தால் பொய் துப்பாக்கிகளை (வெடிக்காத) கொண்டு வந்து சுட்டு தள்ளி விடுவார்கள்। 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

ஏன் எல்லோரும் கப்சிப்பாகி விடடார்கள்। சுமந்திரன் புலிகளுக்காக, புலி ஆதரவாளர்களுக்காக வாதாடினால் அதை இலகுவாக மறந்து விடுவார்கள்। ஒரு சிங்களவனுக்காக, சோனவனுக்காக தனது தொழில் ரீதியாக ஏதும் செய்தால் பொய் துப்பாக்கிகளை (வெடிக்காத) கொண்டு வந்து சுட்டு தள்ளி விடுவார்கள்। 

கண்ணதாசனிடம் நல்ல காசு இருந்திருக்கும் அல்லது சுமத்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி ஆதலால் இந்த கேசை தட்டிக் கழிக்க முடியாத நிர்ப்பந்தமாய் இருக்கும் 
 

16 hours ago, ரதி said:

கண்ணதாசனிடம் நல்ல காசு இருந்திருக்கும் அல்லது சுமத்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி ஆதலால் இந்த கேசை தட்டிக் கழிக்க முடியாத நிர்ப்பந்தமாய் இருக்கும் 
 

எத்தனையோ பேர் பணம் , நகையுடன் ஓடி இருக்கிறார்கள். அது வேறு விடயம்.

காசு இருக்குதோ இல்லையோ , இவர் ஒரு தீவிர புலி ஆதரவாளர் என்ற ரீதியில்தான் எத்தனையோ ஆண்டுகள் உள்ளே தள்ளி இருக்கிறார்கள். இதை விட்டுவிட்டு எதையோ எழுதுகிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

எத்தனையோ பேர் பணம் , நகையுடன் ஓடி இருக்கிறார்கள். அது வேறு விடயம்.

காசு இருக்குதோ இல்லையோ , இவர் ஒரு தீவிர புலி ஆதரவாளர் என்ற ரீதியில்தான் எத்தனையோ ஆண்டுகள் உள்ளே தள்ளி இருக்கிறார்கள். இதை விட்டுவிட்டு எதையோ எழுதுகிறீர்கள். 

அவர் புலியில் இருந்திருக்கலாம் ...ஆனால் தற்போது யாழ் பல்கலைக்கழத்தில் இசைத் துறை தலைவராக ,பேராசிரியராக இருந்துள்ளார் 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வழக்கறிஞரிடம் பாதிக்கப்பட்ட ஒருவர் சேவையை பெறுவதற்கு அணுகும்போது அல்லது பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு வழக்கறிஞர் சேவையை கொடுக்கும்போது அவர்கள் அரசியல் பின்புலங்கள், விருப்பு, வெறுப்புக்கள் ஆதிக்கம் செலுத்தலாம், செலுத்தாமலும் விடலாம். ஆனால், அவை ஒருவரின் வழக்கை ஒரு வழக்கறிஞர் பொறுப்பு ஏற்பதற்கு காரணமாக அமையும் என்று சொல்வதற்கு இல்லை. சுமந்திரன் அவர்கள் கட்டணம் இல்லாமல் தனது சேவையை கொடுக்கின்றாரா, தானாக பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ய முன்வந்தாரா என்பது பற்றி தெரியாமல் ஒன்றுடன் இன்னொன்றை முடிச்சு போட ஏலாது.

8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஒரு வழக்கறிஞரிடம் பாதிக்கப்பட்ட ஒருவர் சேவையை பெறுவதற்கு அணுகும்போது அல்லது பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு வழக்கறிஞர் சேவையை கொடுக்கும்போது அவர்கள் அரசியல் பின்புலங்கள், விருப்பு, வெறுப்புக்கள் ஆதிக்கம் செலுத்தலாம், செலுத்தாமலும் விடலாம். ஆனால், அவை ஒருவரின் வழக்கை ஒரு வழக்கறிஞர் பொறுப்பு ஏற்பதற்கு காரணமாக அமையும் என்று சொல்வதற்கு இல்லை. சுமந்திரன் அவர்கள் கட்டணம் இல்லாமல் தனது சேவையை கொடுக்கின்றாரா, தானாக பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ய முன்வந்தாரா என்பது பற்றி தெரியாமல் ஒன்றுடன் இன்னொன்றை முடிச்சு போட ஏலாது.

நீங்கள் கூறியது சரி. இருந்தாலும் இவர் ஒரு முன்னர் புலி ஆதரவாளருக்காக ஆஜராகினர் என்பதை , அந்த உண்மையை ஏற்க மறுக்கிறார்கள். அவரை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமும். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎05‎-‎2020 at 11:55, Vankalayan said:

ஏன் எல்லோரும் கப்சிப்பாகி விடடார்கள்। சுமந்திரன் புலிகளுக்காக, புலி ஆதரவாளர்களுக்காக வாதாடினால் அதை இலகுவாக மறந்து விடுவார்கள்। ஒரு சிங்களவனுக்காக, சோனவனுக்காக தனது தொழில் ரீதியாக ஏதும் செய்தால் பொய் துப்பாக்கிகளை (வெடிக்காத) கொண்டு வந்து சுட்டு தள்ளி விடுவார்கள்। 

சுமந்திரன் தொடர்பாக எனக்கு தனிப்பட்ட ரீதியில் அபிப்பிராயங்கள் இல்லை , எனினும் பொது வெளியில் தமிழர் நலன் தொடர்பில் சம்பத்தப்பட்டுருக்கும் ஒருவரின் கொள்கை சம்பந்தமான வெளிப்பாடுகளையும் , (புலி ஆயுதம் தூக்கியத்தில் உடன்பாடில்லை , பிரதிநித்துவம் பெற்றுக்கொடுத்த கட்சி 20, 25  வருடங்களிற்கு முன் எப்படி தொடங்கியது என்றே தெரியாது என்பன போன்றன ) அவரின் தனிப்பட்ட தொழில் முயற்சிகளையும் ( தவிபு உடன் சம்பத்தப்பட்ட ஒருவருக்கு ஆஜராகுதல் )  தொடர்பு படுத்திக் கதைத்தல் பொருத்தமற்றது . இது எப்படி என்றால் , பாலியல் வல்லுறவு வழக்கு சந்தேகநபருக்கு ஆஜராகும் வக்கீலும் ஒரு பாலியல் வல்லுறவு பேர்வழி என்று சொல்வது போன்றது ... 

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டா

பெண்டாட்டி..

கை..

கால்..

15 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வேண்டா

பெண்டாட்டி..

கை..

கால்..

மிக சரியான கருத்து. புலிகள் சார்பானவர்களுக்கு ஆஜராவதில்லை , சிங்களவர் முஸ்லிம்களுக்காக ஆஜராகிறார் என்று சத்தம் போடுவார்கள். அப்படி புலிகளுக்கு சார்பாக ஆஜராகியவுடன் என்னென்னமோ எழுதுகிறார்கள்.

அதை இதோடு ஒப்பிட முடியாதாம், இதை அதோடு ஒப்பிட முடியாதாம். எலும்பில்லாத நாக்கு எல்லாத்தையும் பேசும் என்பதுபோல, நினைக்கிற எல்லாத்தையும் எழுதுவார்கள்.

எப்படி இருந்தாலும் இங்குள்ள மக்கள்தான் யாரை தெரிவு செய்ய வேண்டுமென்பதை தீர்மானிக்கிறார்கள் என்பதை சிலர் மறந்து விடுவதுமெண்டு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.