Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய அரசியலா? தமிழ்த் தேசிய நீக்க அரசியலா? தமிழ் மக்களுக்கு எது தேவை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய அரசியலா? தமிழ்த் தேசிய நீக்க அரசியலா? தமிழ் மக்களுக்கு எது தேவை?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணல் தொடர்பாக பலத்த வாதப் பிரதிவாதங்கள் எழுச்சியடைந்துள்ளன. இதுவரை காலமும் சுமந்திரனை மாற்றுக் கட்சியினரும், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களுமே அதிகளவில் விமர்சித்தனர். தற்போது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியிடமிருந்து மட்டுமல்ல சொந்தக் கட்சியான தமிழரசுக்கட்சியிடமிருந்தும் பலத்த விமர்சனங்கள் அவரை நோக்கி வந்துள்ளன. யாழ்ப்பாணம் நல்லூரில் அவரின் உருவப்படத்திற்கு செருப்பு மாலையும் போடப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளமை தெளிவாகத்தொடங்கியுள்ளது. இதுவரை காலம் உட்கட்சி புகைச்சலாக இருந்த விடயம் தற்போது கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. சம்பந்தன், மாவை, சரவணபவன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன் உட்பட பலர் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இது தேர்தல் காலமானபடியால் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் சம்பந்தனும், மாவையும் முந்திக் கொண்டனர். சம்பந்தன் பின்னர் இதனை சமாளிக்க முற்பட்டது வேறு கதை.

tna-3.pngசுமந்திரன் இக்கருத்துக்களை தற்போது தான் முதன் முதலாகக் கூறவில்லை. அவர் அரசியலுக்கு வந்த காலம் தொடக்கமே கூறி வருகின்றார். அன்று வராத எதிர்ப்பெல்லாம் இப்போ வருவதற்கு காரணம் தேர்தல் அச்சமே! உள்வீட்டு நெருக்கடிகளும் துணைக்காரணங்களாக இருந்திருக்கலாம். சுமந்திரன் கூறிய கருத்துக்கள் சுமந்திரனிடம் மட்டும் இருப்பவையல்ல. சம்பந்தனிடமும் அது இருக்கின்றது ஆனால் அவர் வெளிப்படையாகக் கூறி மூக்குடைபடுவதில்லை அதுவும் தேர்தல் காலங்களில் இவை பற்றி வாயே திறக்க மாட்டார்

சுமந்திரன் தமிழ் தேசிய மரபிற்குள்ளால் வளர்ந்த ஒருவரல்ல. அவரது கொழும்பு வாழ்க்கை அதற்;கான வாய்ப்புக்களையும் கொடுக்கவில்லை இதனால் அடிப்படையில் அவர் ஒரு தமித் தேசிய வாதி அல்லர். அவர் ஒரு மேற்குலக தாராண்மை ஜனநாயகவாதி. அவரது அரசியல் நிலைப்பாடு, அணுகுமுறைகள் அனைத்தும் அந்தக் கோணத்திலேயே இடம் பெற்றன. சுருங்கக் கூறின் “கொழும்பில் தமிழர்கள் குடியேறலாம் என்றால் சிங்களவர் யாழ்ப்பாணத்தில் ஏன் குடியேற முடியாது” என்பது போல இருந்தது. வன்னியில் குடியேறிய சிங்கள மக்களுக்கு காணிப்பத்திரம் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்ட போது எந்தக் குற்ற உணர்வும் அவருக்கு இருக்கவில்லை. எனவே சுமந்திரன் பற்றிய கருத்துக்களை முன்வைக்கும் போது அவரைப் பற்றியல்ல அவர் முன் கொண்டு செல்ல நினைக்கும் அரசியல் பற்றியே அதிக கவனம் செலுத்த வேண்டும்.

உண்மையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான ஊற்று 2009 இல் யுத்தம் முடிவுற்ற காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தமிழ் அரசியலில் இரண்டு போக்குகள் எழுச்சியடையத் தொடங்கின. ஓன்று இது வரை காலம் பின்பற்றிய தமிழத் தேசிய அரசியலை ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வது. இரண்டாவது இது வரை கால அரசியலைக் கைவிட்டு இணக்க அரசியலுக்கு செல்வது? இந்த இரு போக்குகளில் கஜேந்திரகுமார் முதலாவது போக்கினை பிரதிபலிக்க சம்பந்தன் இரண்டாவது போக்கினை பிரதிபலித்தார். முதலாவது போக்கின் அடிப்படையிலேயே அதன் வளர்ச்சியாக தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றது. விக்னேஸ்வரனும் இப்போக்கினை வளர்த்தெடுக்க துணை புரிந்தார்.

இரண்டாவது போக்கினை பிரதிபலித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலுக்கு சென்றது. நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்தமை, சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரானமை, ரணில் அரசாங்கத்தை பாதுகாக்க முற்பட்டமை, போன்ற செயற்பாடுகள் வளர்ச்சியடைந்தன. சுமந்திரன் இச்செயற்பாடுகளை நகர்த்தும் மையப்புள்ளியாக விளங்கினார். இதன் மூலம் தென்னிலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத புள்ளியாகவும் எழுச்சியடைந்தார். இன்று வரை இரண்டாவது போக்கினை பிரதிபலிக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வருகின்றார்.

இரண்டாவது போக்கின் முக்கிய அரசியல் நிலைப்பாடு தமிழ் தேசிய நீக்க அரசியலே! தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய எண்ணக்கரு ஆழமாக வேரூன்றி இருந்த படியால் வெளிப்படையாக தமிழ்த்தேசிய நீக்க அரசியலைச் செய்கின்றோம் என அவர்கள் கூறவில்லை. தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ்த்தேசிய அரசியலையே பிரதிபலித்தனர். ஆனால் நடைமுறையில் தமிழ்த் தேசிய நீக்க அரசியலையே செய்தனர். புலி நீக்கம் தேசியக் கொடியை ஏற்றுதல், சுதந்திர தினத்தில் கலந்து கொள்ளுதல், இணக்க அரசியல் என்ற பெயரில் சரணாகதி அரசியலுக்கு செல்லுதல், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றல், ரணில் அரசாங்கத்தை வலிந்து பாதுகாத்தல், ஜெனிவாவில் காலம் அவகாசம் வழங்குதல், தமிழ் அரசியலின் சர்வதேச மயத்தை நீக்கம் செய்தல் என அனைத்தும் தமிழ்த்தேசிய நீக்க அரசியலே! இந்தப் போக்கின் அடிப்படையிலேயே சுமந்திரனும், நேர்காணலும் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பிரதான காரணத்தை விட சுமந்திரனின் சொந்த விருப்பு வெறுப்புகளும் அவரது நேர்காணலில் பிரதிபலித்தன. அதில் முக்கியமானது அவரிடம் இருக்கும் தமிழ்த்தேசிய வெறுப்பு

எனவே தொகுத்து நோக்கின் சுமந்திரனின் நேர்காணல் கருத்துகளுக்கு பின்வருவனவற்றை காரணங்களாகக் குறிப்பிடலாம்.

தமிழ்த்தேசிய நீக்க அரசியலை முன்கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பம்.

தமிழ்த்தேசிய அரசியலில் அளவு கடந்த வெறுப்பு.

தமிழ்த்தேசிய அரசியலை வாழ்ந்து அனுபவிக்காமை.

மேற்குலக லிபரல் ஜனநாயகவாதியான தன்னை அடையாளம் காட்ட விரும்புதல்.

கொழும்பு இருப்பை தக்க வைத்தல்.

தெற்கு அரசியலில் தனக்குரிய இடத்தைத் தக்க வைத்தல்.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான நெருக்கம்.

தமிழ் அரசியலை சட்டத் தொழில் போல கருதுதல்.

கூட்டமைப்பும், தமிழரசுக்கட்சியும் தன்னில் தங்கியிருக்கின்றது என்ற இறுமாப்பு.

மேற்குலகை திருப்திப்படுத்தல்.

இங்கே வெளிப்படையான விடயம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை. தமிழ்த்தேசிய நீக்க அரசியலையே முன்கொண்டு செல்ல விரும்புகின்றது என்பது தான். இதனை மேலும் தெளிவாக்கும் வகையில் பின்வரும் வினாக்களுக்க உடனடியாக விடை காண வேண்டும்.

இன்று தமிழ் மக்களுக்குத் தேவையானது தமிழ்த்தேசிய அரசியலா? தமிழ்த்தேசிய நீக்க அரசியலா?

சுமந்திரன் முன்னெடுக்கும் அரசியல் தமிழ்த்தேசிய அரசியலா? தமிழ்த்தேசிய நீக்க அரசியலா?

தமிழ்த்தேசிய நீக்க அரசியலாயின் அது தமிழரசுக் கட்சியின் கொள்கை நிலைப்பாடா? அல்லது சுமந்திரனின் தனிப்பட்ட நிலைப்பாடா?

சுமந்திரனின் தனிப்பட்ட நிலைப்பாடாயின் அனந்தி, சிவகரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது போல சுமந்திரன் மீதும் எடுக்கப்படுமா?

சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காவிடின் தந்தை செல்வாவின் கொள்கைகளை கைவிட்ட கட்சி என தமிழரசுக்கட்சியைக் கூறலாமா?

தமிழரசுக்கட்சி தந்தை செல்வாவின் கொள்கைகளை கைவிட்ட பின்னர் அதனை ஆதரிக்க வேண்டும் என்ற தேவை தமிழ் மக்களுக்கு இருக்கிறதா?

இந்த வினாக்களுக்கான விடைகளை புரிந்து கொள்வதன் மூலமே தமிழ்த் தேசிய அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல முடியும்.

http://thinakkural.lk/article/42335

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.