Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம்மாதம் மட்டுமே நிவாரண நிதி : கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் - பிரதமர்

Featured Replies

(இராஜதுரை ஹஷான் )

ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தலை நடத்துவது அவசியமாகும். கலைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது.

கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். கடற்படைக்குள் தான் பிரச்சினைகாணப்படுகின்றது. அதனையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்.

மாணவர்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதால் பாடசாலை, பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கையினை மீள ஆரம்பிப்பதில் சிக்கல் காணப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கொவிட்-19 வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையிலும் மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் கடமையாகும். மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பதால் பல்கலைக்கழகம், பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கையினை மீள ஆரம்பிப்பதில் தாமதம் காணப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அரச, தனியார் திணைக்களங்கள் திறக்கப்பட்டு சேவை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.

பொதுத்தேர்தல் இன்று நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மாறுப்பட்ட தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கலைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றத்தை கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது.

இம்மாதம் 5000 நிவாரண நிதியை மக்களுக்கு வழங்க வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆணைக்குவின் தீர்மானத்திற்கு மதிப்பளிப்பது அவசியம். இம்மாத்ததிற்கு மாத்திரம் இந்த நிவாரண நிதியை வழங்க முயற்சிப்போம். அடுத்த மாதம் நிவாரண நிதி வழங்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

 

https://www.virakesari.lk/article/82437

 

  • தொடங்கியவர்
2 minutes ago, ampanai said:

அடுத்த மாதம் நிவாரண நிதி வழங்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

 

வெசாக்கூடு  நிர்மாணிப்போருக்கு நிவாரணம் - பசில்

(இராஜதுரை ஹஷான் )

ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் மற்றும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வெசாக், பொசன் பண்டிகை இரத்து செய்யப்பட்டன.
இதனால் வெசாக் கூடு, அலங்கார நிர்மாணிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கும் என பொருளாதார புத்தாக்க செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெசாக் கூடு நிர்மாணிப்பாளர்களது சங்கத்தினருக்கும், செயலணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலினாலும்,கொரோனா வைரஸ் தாக்கத்தினாலும் வெசாக் மற்றும் பொசன் பண்டிகையினை கொண்டாட முடியவில்லை. இதனால் வெசாக் கூடு, மற்றும் அலங்கார நிர்மாணிப்பவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், வங்கி கடன் பெற்றுக் கொண்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என சங்கத்தினர் தெரிவித்தனர்.

அத்துடன் இம்முறை பொசன் பண்டிகையின் போது பாதுகாப்பான முறையில் அலங்கார நிர்மாணங்களை நிர்மாணிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் குறப்பிட்டனர்.

நிர்மாணங்களை நிர்மாணிக்கும் போது தேசிய உற்பத்தி மூலப்பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கும், நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் உரிய நடவடிக்கையினை எடுக்கும் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/82413

  • தொடங்கியவர்

"கொரோனாவை வெற்றி கொண்டுவிட்டோம்" என உண்மைக்கு புறம்பாக மகிந்தா கூறுவது தேர்தலை அவசரமாக நடாத்தி 3/2 பெரும்பான்மை பெறவே. 

ஆனால், இலங்கையில் போதியளவு நோயுக்கான பரிசோதனை செய்யப்படுவதில்லை. அதற்கான வசதிகளும் இல்லை. ஆகவே, பெரும்பான்மையான நோயாளர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவதும் இல்லை. 

சிலவேளை, இரண்டாவது தொற்று அலை வீசுமாக இருந்தால், நிச்சயம் மக்கள் அதிகம் சிக்கலுக்கு உள்ளாவார்கள். பொருளாதர ரீதியாகவும் அதிகம், குறிப்பாக வறுமையில் மற்றும் அன்றாடம் வேலைக்கு செல்லும் உழைப்பாளிகள் கடினப்படுவார்கள்.  

  • தொடங்கியவர்

உலகளாவிய கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்று 24 மணி உலகளாவிய கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்று 24 மணித்தியாலங்களில் அதாவது ஒரு நாளில் 1.06 லட்சத்தை முதற்தடவையாக எட்டியுள்ளது.

Global daily cases increased by most ever, WHO says
2:24 ET pm: Countries around the world collectively reported more new cases to the WHO in the past 24 hours than ever before, WHO Director-General Tedros Adhanom Ghebreyesus said. Most new infections are coming from the Americas, followed by Europe and the Middle East, according to data compiled by the WHO. However, the virus could be spreading unknown in parts of the world with limited testing capacity and health care infrastructure. —Will Feuer

  • கருத்துக்கள உறவுகள்

5000 ரூபாய் கொடுப்பனவை நிறுத்துவது பாரிய குற்றம் – சம்பிக்க ரணவக்க

கொரோனா வைரசினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களிற்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதில்லைஎன அரசாங்கம் தீர்மானிதால் அதன் மூலம் அரசாங்கம் பாரிய குற்றத்தையிழைக்கின்றது என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடியுள்ளார்.

நிவாரணத்தை அரசியல்மயபபடுத்தும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளிற்காக மக்கள் அணிதிரள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

patali.000.champika-300x150.jpg
மக்கள் பட்டியினின் பிடியில் சிக்கியுள்ளனர்,பல்வேறு விதமான நெருக்கடிகளினால் சுமைகளை எதிர்கொண்டுள்ளனர் என சம்பிக்கரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் 5000 ரூபாய் கொடுப்பனவு திட்டத்திலிருந்து அரசியல்வாதிகளை அகற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் அமைச்சர் இந்த கொடுப்பனவினை விநியோகிப்பதற்கான பொறுப்பை கிராமசேவையாளர்களிடம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Covid-19-1-300x213.jpg
பியகமவில் உள்ள தொழிற்சாலையொன்றில் அரசாங்கம் பணத்தை அச்சடித்துள்ளது என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணத்தை தரகுப்பணமாக ஒப்பந்தக்காரர்களிற்கு அரசாங்கம் வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே ஜூன் மாதத்திற்கான 5000 ரூபாய் கொடுப்பனவை அரசாங்கம் நிறுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://thinakkural.lk/article/43051

ஐயா தேர்தல் வைப்பதட்கு அடி போடுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாயிரம் ரூபாய் வழங்க பாலியல் இலஞ்சம் கோரல்

@Aravinda.jpg?189db0&189db0

 

மலையகத்தில் 5000 ரூபா சமுர்த்தி உதவி கொடுப்பனவு வழங்களில் இழுத்தடிப்புகளும், கழுத்தறுப்புகளும் தொடர்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று (23) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்,

இந்த நிவாரண பணம் தம்மாலேயே வழங்கப்படுவதாக ஒரு சில மலையக அரசியல்வாதிகள் தம்பட்டம் அடித்து வருகின்றனர். நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பபடிவங்கள் 25 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் ஒரு சில இடங்களில் 5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல் ரீதியான இலஞ்சம் கோரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழலில் நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் பிரதேச அரசியல் வாதிகளை ஈடுபடுத்த வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளதை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இனியாவது எந்தவித பாகுபாடுகளும் இன்றி பெருந்தோட்ட மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என எதிர்பார்பதாகவும் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/ஐயாயிரம்-ரூபாய்-வழங்க/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.