Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தை பகைத்தால் இலங்கைக்கே பேராபத்து!- ரணில், சஜித் போர்க்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையிலிருந்து இலங்கை விலகினால் அது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும். இது நாட்டின் தலைவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியாதா? என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார் .

படையினருக்கு அழுத்தங்கள் கொடுக்கும் வகையிலும் நாட்டுக்கு அநீதியை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் தொடர்ந்து செயற்பட்டால் அவற்றின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ளத் தயங்கமாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போர் வெற்றி விழாவில் உரையாற்றியிருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் போர் வெற்றி விழா உரையை நான் கடுமையாகக் கண்டிக்கின்றேன். ராஜபக்சக்களின் செயற்பாடுகளினால்தான் இலங்கையை சர்வதேசம் ஒதுக்கி வைத்திருந்தது. இதற்கு கடந்த நல்லாட்சியில் நாம் தீர்வு கண்டிருந்தோம்.

சர்வதேசத்துடன் இணைந்து பயணித்தோம். இலங்கை மீதான சர்வதேசத்தின் கொடிய பார்வையை விலக்கியிருந்தோம். ஆனால், மீண்டும் அதே நிலைமைக்கு இட்டுச் செல்லும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றியுள்ளார்.

சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையிலிருந்து இலங்கை விலகினால் அது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும்.

இது நாட்டின் தலைவரான ஜனாதிபதிக்குத் தெரியாதா? ஜனநாயக ரீதியில் மக்கள் அளித்த வாக்குகளினால் நாட்டின் தலைவரான இவர் சர்வாதிகாரப் போக்கில் - சர்வதேசத்துக்குச் சவால் விடும் வகையில் செயற்படுவது நாட்டுக்கும் மக்களுக்கும் ஏன் படையினருக்கும் அழகல்ல என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன் எனது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் போர் வெற்றி விழா சர்வாதிகாரத்தின் உச்சநிலையை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றது. சர்வதேசத்தைப் பார்த்து - கை நீட்டி எச்சரிக்கை விடுவது நாட்டுக்குத்தான் ஆபத்தாக மாறும் என்பதை ஜனாதிபதி புரியாமல் இருப்பது வெட்கக்கேடாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் எமது நாடு பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்தவேளையில் சர்வதேச அமைப்புகளினதும் நிறுவங்களினதும் உதவிகளை நாம் நாட வேண்டும். அதைவிடுத்து சர்வதேசத்தைப் பகைப்பது எமது நாட்டுக்குத்தான் பாரிய பின்வினைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/246634?ref=home-feed

அவர் ஒரு பேச்சுக்கு சொன்னால் அதையெல்லாம் தூக்கி பிடிப்பதா? அவர் சொன்னது சார்க் அமைப்பிலிருந்து விலகுவதைப்பற்றித்தான். அது ஒன்றுக்கும் உதவாத ஒரு அமைப்பு. மத்தபடி இதெல்லாம் ஒரு வெட்டி பேச்சுதான். சர்வதேச அமைப்பிலிருந்து அப்படி நினைத்த மாத்திரத்தில் இலகுவாக விலகி இவர்களால் தாக்கு பிடிக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Vankalayan said:

அவர் ஒரு பேச்சுக்கு சொன்னால் அதையெல்லாம் தூக்கி பிடிப்பதா? அவர் சொன்னது சார்க் அமைப்பிலிருந்து விலகுவதைப்பற்றித்தான். அது ஒன்றுக்கும் உதவாத ஒரு அமைப்பு. மத்தபடி இதெல்லாம் ஒரு வெட்டி பேச்சுதான். சர்வதேச அமைப்பிலிருந்து அப்படி நினைத்த மாத்திரத்தில் இலகுவாக விலகி இவர்களால் தாக்கு பிடிக்க முடியாது. 

சார்க் அமைப்பு சிறிலங்கா இராணுவத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லையே ....சார்க் அமைப்பு இராணுவங்களும் இந்த போர்குற்றத்திற்கு உடைந்தையாக இருந்தவைகள் தானே

  • கருத்துக்கள உறவுகள்

ஊத்தபாயவுக்கு (கோத்தா ஒரு ஊத்தை) இதொன்னும்.. புதிதல்ல. 2006 இல் வடக்குக் கிழக்கில் இருந்து ஐநா வையே ஓட ஓட விரட்டித்துதானே சாட்சியமற்ற இனப்படுகொலையை செய்தவர்.  மேலும் போர் முடிந்த கையோடு இணைத்தலைமை நாடுகளை கழட்டிவிட்டிட்டு..  அவற்றிற்கு அளித்திருந்த பொய் வாக்குறுதிகளில் இருந்தும் ராஸ்கொல் (ராஜபக்ச கும்பல் ரவுடிக் கும்பல் என்பதால்..) கும்பல்... செளகரியமாக வெளியேறிக் கொள்ள இடமளித்தது.. எல்லாமே... சர்வதேசம் சொறீலங்காவை செல்லப்பிள்ளை கணக்கா அதன் தவறுகளுக்கு எல்லாம் தட்டிக்கொடுத்ததன் விளைவு ஆகும். 

இதனை தமிழர் தரப்பும் சரியாகப் பாவிக்காமல்.. ராஸ்கொல் கும்பலின் காலின் போய் விழுந்ததும்.. அவர்களின் எடுபிடிகளை இனப்படுகொலையாலர்களை குறிப்பாக சரத்பொன்சேகாவை தமிழரை ரட்சிக்க வந்த சனநாயக போசகர் போலக் காட்டியதும்.. மைத்திரியை.. ரணிலை.. சந்திரிக்காவை.. சஜித்தை..  நல்லாட்சி நாயகர்கள்.. என்றதும் தான்.. இப்ப இந்த அதீத அடுத்த கட்ட திமிருக்கு காரணம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.