Jump to content

சுகாதார துறையின் உடனடி தேவைகள் அடங்கிய திட்டத்தை உடன் தயாரியுங்கள்; வடக்கு ஆளுநர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார துறையின் உடனடி தேவைகள் அடங்கிய திட்டத்தை உடன் தயாரியுங்கள்; வடக்கு ஆளுநர்

P.S.M.Charles-2-300x161.jpgவட மாகாண சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான முக்கியத்துவத்தின் அடிப்படையில் பூரணப்படுத்தப்பட்ட திட்டமொன்றை தயாரிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் தயாரிக்கப்படும் திட்டத்தினை படிப்படியாக செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு மாகாண சுகாதாரத்துறையில் காணப்படுகின்ற சாவால்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

வடமாகாணத்தில் காணப்படும், மாவட்ட பொது வைத்தியாசலைகள், பிரதேச வைத்தியசாலைகள், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதை அடிப்படையாகக் கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் ஆகியோருடனான விசேட சந்திப்பொன்றை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நடத்தியிருந்தார்.

வடக்கு ஆளுநர் செலயகத்தில் இம்பெற்ற இந்த சந்திப்பின்போது, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் முகங்கொடுக்கும் சவால்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பட்டியலை முன்வைத்தனர்.

அவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய ஆளுநர் தெரிவித்ததாவது, வைத்தியசாலைகளில் உள்ள விடுதிகள், கழிப்பறைகள் மற்றும் பிறபகுதிகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும், அனைத்து வைத்தியசாலை சுற்றுச்சூழலின் தூய்மையைப் பேணுவதற்கான வழிமுறைகள் வெளியே கொணரப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும். அனைத்து நோயாளிகளும் மருத்துவமனைகளில் இருந்து சரியான உணவைப் பெற வேண்டும். நோயாளிகளுக்கு வைத்தியர்களால் வழங்கப்படும் மருந்து பட்டியலுக்கு அமைவாக உரிய உணவுகள் வழங்கப்படுவ உறுதி செய்யப்படவேண்டும் . இதற்காக சுகாதார அமைச்சால் வருடாந்தம் பாரியளவு நிதியும் ஒதுக்கப்படுககின்றமையும் குறிப்பிடத்தக்கது

மேலும் வெளியில் இருந்து வைத்தியசாலைகளுக்குள் உணவைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். இச்செயற்பாடானது நோயாளிகளின் ஆரோக்கியத்தையும், அலைச்சலையும், வீண் செலவுகளையும்உறுதி செய்வதாக இருக்கும். மக்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் மருத்துவமனைகளில் குடிநீர், கழிப்பறைகள் மற்றும் படுக்கைகளைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.

வைத்தியசாலைகளில் வசதியான தங்குமிடம் நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின்படி முறையான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்குவதை உறுதிப்படுத்த சரியான கண்காணிப்பு முறையை செயல்படுத்த வேண்டும்.

வைத்தியசாலைகளின் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றபோது வரவுசெலவு திட்டத்தினை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். மன்னார் மாவட்ட பொது வைத்தியாசாலை கட்டுமானத்தை உதாரணமாக கொள்ள முடியும். அத்துடன் எந்த விடயத்தினையும் செயற்படுத்தவதற்கு முன்னதாக அதுதொடர்பான நீண்டகால மற்றும் முழுமைப்படுத்தப்பட்ட பார்வை இருக்க வேண்டும்.

சமூகத்தில் பரவும் தொற்று, தொற்றா நோய்கள் சம்பந்தமான தகவல்களை திரட்டி தகவல் மையத்தின் ஊடாக அவை முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். அத்துடன் அவை குறித்த உரிய கண்காணிப்புக்களை பிரதேச வைத்தியசாலைகள், மாவட்ட வைத்தியசாலைகள் ஊடாக முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நோய்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்ப்புக்கள் ஏற்படுகின்றன. அத்துடன் தரவுகளைப் பதிவு செய்வதற்காக மாவட்ட செயலக, பிரதம செயலாளரின் அலுவக ஆளணியினரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அத்துடன், மனிதவள வெற்றிடங்கள், பயன்படுத்தப்படும், பயன்படுத்தப்படாத வாகனங்கள், வாகன சாரதிகள் உள்ளிட்ட அனைத்து தகவல் பட்டியல்களையும் மாகாண சபையிடத்தில் சமர்ப்பிக்குமாறும் சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு இயலுமான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கழிவுநீர் அகற்றும் தொகுதியை முறையான ஒப்பந்தங்களுடன் வெளியாருக்கு வழங்கு முடியும் என்பதோடு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்கள்,மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர்கள் ஆகியோரின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் அதேநேரம் மனித வளத்தினை விடவும் துறைசார் நிபுணத்துவத்தின் மீது தனது நம்பிக்கை அதிகமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஆளுநரின் இந்த முன்மொழிவுகள் சுகாதாரத்துறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

http://thinakkural.lk/article/43025

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.