Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களின் ஆபத்பாந்தவன் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களின் ஆபத்பாந்தவன் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்!

Finger Pulse Oximeter

 

உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவைக் கணக்கிடப் பயன்படும் சிறிய க்ளிப் (Clip) போன்ற ஒரு எலெக்ட்ரானிக் கருவியே ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்.

ந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 80% பேர் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படுத்தாத ஏசிம்ப்டமடிக் (Asymptomatic) நிலையில் இருப்பவர்களாம்! இந்தத் தகவலை சில வாரங்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) வெளியிட்டது. அதாவது ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பவர்களுக்குக் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவுமே இருக்காது. அப்படி இருந்தாலும் மிகவும் குறைவாகவே வெளிப்படும்.

ஏசிம்ப்டமடிக் நிலையில் உள்ளவர்கள் தங்களுக்கு நோய்த்தொற்று இருப்பதையே அறியாமல் இருப்பார்கள். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு இந்நோய்த்தொற்று மருத்துவ சிகிச்சை இல்லாமலேயே சரியாகிவிடும். ஆனால், மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்களுக்கு உடலில் ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படும்போதே கொரோனா தொற்று இருப்பது தெரியவரும்.

உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து மிகவும் மோசமான நிலையில் மருத்துவ சிகிச்சைக்காகச் செல்லும் ஏசிம்ப்டமடிக் தொற்றாளரை குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாம். இவர்களுக்கு ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Finger Pulse Oximeter) சிறந்த தீர்வாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்றால் என்ன... அது எவ்வாறு செயல்படுகிறது... யாரெல்லாம் அதைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநரும், மருத்துவருமான குழந்தைசாமியிடம் பேசினோம்.

 

மருத்துவர் குழந்தைசாமி

 

ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்றால் என்ன?

மருத்துவர் குழந்தைசாமி
 

உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவைக் கணக்கிடப் பயன்படும் சிறிய க்ளிப் (Clip) போன்ற எலெக்ட்ரானிக் கருவியே ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர். இந்தக் கருவியை கையின் ஏதேனும் ஒரு விரலில் மாட்டி, கொஞ்சம் அழுத்தம் கொடுக்கும்போது மிகவும் குறைவான அளவு ரத்தம் எடுக்கப்பட்டு (அதாவது அந்தக் கருவியிலுள்ள நுண்ணிய ஊசி விரலில் குத்தி ரத்தத்தை எடுத்துக்கொள்ளும்) நம் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு கணக்கிடப்படுகிறது. இந்த அளவு ஆக்ஸிமீட்டரின் டிஸ்பிளேயில் நமக்குக் காட்டப்படுகிறது.

பொதுவாக ஒருவருக்கு உடலில் ஆக்ஸிஜன் அளவு 95 சதவிகிதத்திற்கு மேலே இருக்க வேண்டும். இந்த அளவு 95 சதவிகிதத்திற்குக் கீழ் இருப்பின் அவரின் உடலில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இல்லையென்று அர்த்தம். அதுவே இந்த அளவு 80, 70 சதவிகிதமாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு நாள்பட்ட நுரையீரல் நோய், ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், ரத்தச்சோகை, மாரடைப்பு அல்லது வேறு ஏதேனும் நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் இருக்கலாம். இவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஆக்ஸிமீட்டர்' ஏசிம்ப்டமடிக் வகையினருக்கு எப்படி உதவும்?

கொரோனா டெஸ்டில் ஒருவருக்கு `பாசிட்டிவ்' என்று வருகிறது. உடனே அவரைச் சார்ந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு டெஸ்ட் செய்கிறார்கள். அவர்களில் சிலருக்கு பாசிட்டிவ், சிலருக்கு நெகட்டிவ் என்று வரலாம். இதில் பாசிட்டிவ் என்று வந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும். நெகட்டிவ் என்று வந்தவர்களுக்கு எதிர்காலத்தில் பாசிட்டிவ் ஆனாலும் ஆகலாம் என்பதன் அடிப்படையில் அவர்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்.

ஒருவேளை இவர்கள் ஏசிம்ப்டமடிக்காக இருந்தாலோ, கொரோனாவுக்கான லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்தாலோ தங்களுக்கு பாதிப்பு இல்லை என்றே நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், வைரஸ் இவர்கள் உடலுக்குள் பெருகிக்கொண்டே செல்லும்போது நுரையீரல் பாதிக்கப்பட்டு ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கொண்டே வரும்

தங்களுக்கு ஏற்படும் மயக்கம், மூச்சுத்திணறலைக் கொண்டே சிலர் தங்களின் உடலில் ஏதோ தவறாக நிகழ்வதைக் கண்டறிந்துவிடுவார்கள். ஆனால், சிலருக்கு உடலில் பெரும்பான்மையான ஆக்ஸிஜன் குறைந்து அதீத மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மட்டுமே தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உணர முடியும். இவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம்.

 
 
Corona
 

இதனால் கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா ஏசிம்ப்டமடிக்காக இருக்கலாம் என்று யூகிக்கப்படுபவர்கள், வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள், வயதானவர்கள் மற்றும் ஏற்கெனவே ஏதேனும் சுவாசப் பிரச்னை அல்லது மற்ற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் அவ்வப்போது வீட்டிலேயே ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் உதவியுடன் தங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை செக் செய்து கொள்ளலாம்.

கொரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் சாதாரண காய்ச்சல், சளி இருந்தால் கூட ஆக்ஸிமீட்டர் கொண்டு ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை செக் செய்துகொள்வது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை யாருக்கு வேண்டுமானாலும் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை பயன்படுத்தலாம்.

ஆக்ஸிமீட்டர் டெஸ்ட் எப்போதெல்லாம் செய்யலாம்?

 
 
Finger Pulse Oximeter
 

டயாபடிஸ் டெஸ்ட்போல் சாப்பிடுவதற்கு முன்பு, பின்பு என்ற வரைமுறையெல்லாம் ஆக்ஸிமீட்டர் டெஸ்டுக்கு கிடையாது. ஒருநாளில் எப்போது வேண்டுமானாலும் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு டெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம். காலை, மாலை, இரவு என்று மூன்று வேளைகள் கூட ஆக்ஸிஜன் அளவை செக் செய்யலாம். ஆக்ஸிமீட்டர் டிஸ்பிளேயில் காட்டப்படும் அளவைக் குறித்துக்கொண்டு மூன்று வேளைகளிலும் எடுக்கப்பட்ட அளவீடுகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.

உங்கள் உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்துகொண்டே வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஏசிம்ப்டமடிக்காக இருக்கும் ஒருவருக்கு அவர் உடலில் ஆக்ஸிஜன் குறையத் தொடங்கிய ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில் வென்டிலேட்டர் இல்லாமலேயே அவரை குணப்படுத்த முடியும்.

எங்கு கிடைக்கும்?

Finger Pulse Oximeter
 
 
அனைத்து மருந்தகங்களில் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவி கிடைக்கும். இதன் விலை ரூபாய் 1500-ல் இருந்து 2,500-க்குள் இருக்கலாம். தான் ஏசிம்ப்டமடிக்காக இருக்கலாம் என்று நினைப்பவர்கள் மற்றும் கொரோனா தொற்று இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வாங்கி வீட்டிலேயே தன் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை டெஸ்ட் செய்து கொள்ளலாம்" என்றார் மருத்துவர் குழந்தைசாமி.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே தொற்றுக்கண்டவர்களில்.. 20 சதவீதம் பேருக்கு நடைமுறை சோதனைகளில் நெகட்டிவ் பதில் தான் கிடைத்துள்ளது என பிரித்தானிய ஆய்வு ஒன்று சமீபத்தில் இனங்காட்டி இருந்தது. இந்த மருத்துவப் பரிசோதனைகளின் பெறுதி என்பது இப்போ கேள்விக்குரியாத நிற்கிறது.

கொரோனாவின் வரவு பல விடை தெரியா கேள்விகளை கிளப்பி விட்டுள்ளது. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.