Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணக் கோட்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோவில் பல அனிமேஷன்ஸ் சேர்க்கப்பட்டு சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தாலும் பல வரலாற்று தவறுகள் உள்ளன.

போத்துக்கேயர்கள் 1520ல் யாழ்ப்பாணம் வரவில்லை. நெடுந்தீவு உள்பட்ட, தீவுப்பகுதிகளுக்கே வந்தனர்.

அங்கிருந்த வாறே, தமிழகத்திலிருந்து கிடைக்கக்கூடிய உதவிகளையும், இறக்குமதி, ஏற்றுமதிகளியும் தடுத்ததன் மூலம் யாழ்ப்பாண அரசினை, திறை செலுத்தும் நிலைக்கு கொண்டுவந்து, தமக்கு சார்பான நாடாக்கினார்கள். 1591ல் தமது பொம்மை அரசன் எதிர்மன்னசிங்கம் என்பவரை அரசனாக்கினார்.

1617ல் எதிர்மன்னசிங்கத்தின் மகன் பரராசசேகரன் இறக்க, அவனது மகன் சங்கிலியன், போர்த்துக்கேயர் வந்தபின் சிம்மாதனம் ஏறிய 3வது அரசன். 

தனது அனுமதி இல்லாமல் 3,000 பேரை மன்னாரில் மதம் மாத்தி விட்டார்கள் என்று கோபம் அடைந்து, போர்த்துகேயர்களுடன் நேரடியாக மோதி, போர்க்களத்தில் தோற்று , யாழ்பாண ராஜ்ஜியத்தினை இழந்தார். 

Phillippe de Oliveira  என்பவரால் கைதாகிய இந்த இரண்டாம் சங்கிலி மன்னன் 1619ல் தூக்கிலிடப்பட, அன்றில் இருந்தே யாழ்ப்பாண ராஜ்ஜியம் போர்த்துக்கேயர் வசமானது.

ஆனாலும்1658 ஆம் ஆண்டில் ரிஜ்க்லோஃப் வான் கோயன்ஸின் கீழ் டச்சுக்காரர்களால் யாழ்ப்பாண ராஜ்ஜியம் கைப்பற்றப்பட்டது.

1785 முதல் 1948 வரை பிரிட்டிஷ்காரர்களும், 1948 முதல் சிங்களவர்களாலும், இடையே 1987 முதல் 1990 வரை இந்தியர்களாலும் ஆளப்பட்டது. 1990 முதல் 1995 வரையான காலப்பகுதியில் புலிகள் கட்டுப்பாடில் கூட இருந்திருக்கின்றது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இந்த வீடியோவில் பல அனிமேஷன்ஸ் சேர்க்கப்பட்டு சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தாலும் பல வரலாற்று தவறுகள் உள்ளன.

போத்துக்கேயர்கள் 1520ல் யாழ்ப்பாணம் வரவில்லை. நெடுந்தீவு உள்பட்ட, தீவுப்பகுதிகளுக்கே வந்தனர்.

அங்கிருந்த வாறே, தமிழகத்திலிருந்து கிடைக்கக்கூடிய உதவிகளையும், இறக்குமதி, ஏற்றுமதிகளியும் தடுத்ததன் மூலம் யாழ்ப்பாண அரசினை, திறை செலுத்தும் நிலைக்கு கொண்டுவந்து, தமக்கு சார்பான நாடாக்கினார்கள். 1591ல் தமது பொம்மை அரசன் எதிர்மன்னசிங்கம் என்பவரை அரசனாக்கினார்.

1617ல் எதிர்மன்னசிங்கத்தின் மகன் பரராசசேகரன் இறக்க, அவனது மகன் சங்கிலியன், போர்த்துக்கேயர் வந்தபின் சிம்மாதனம் ஏறிய 3வது அரசன். 

தனது அனுமதி இல்லாமல் 3,000 பேரை மன்னாரில் மதம் மாத்தி விட்டார்கள் என்று கோபம் அடைந்து, போர்த்துகேயர்களுடன் நேரடியாக மோதி, போர்க்களத்தில் தோற்று , யாழ்பாண ராஜ்ஜியத்தினை இழந்தார். 

Phillippe de Oliveira  என்பவரால் கைதாகிய இந்த இரண்டாம் சங்கிலி மன்னன் 1619ல் தூக்கிலிடப்பட, அன்றில் இருந்தே யாழ்ப்பாண ராஜ்ஜியம் போர்த்துக்கேயர் வசமானது.

ஆனாலும்1658 ஆம் ஆண்டில் ரிஜ்க்லோஃப் வான் கோயன்ஸின் கீழ் டச்சுக்காரர்களால் யாழ்ப்பாண ராஜ்ஜியம் கைப்பற்றப்பட்டது.

1785 முதல் 1948 வரை பிரிட்டிஷ்காரர்களும், 1948 முதல் சிங்களவர்களாலும், இடையே 1987 முதல் 1990 வரை இந்தியர்களாலும் ஆளப்பட்டது. 1990 முதல் 1995 வரையான காலப்பகுதியில் புலிகள் கட்டுப்பாடில் கூட இருந்திருக்கின்றது.

ஓம் நாதா இந்த‌ ஜ‌ந்து ஆண்டும் கோட்டை எம்ம‌வ‌ர் வ‌ச‌ம் இருந்த‌து , பலாளியில் இருந்து பெரும் ப‌டையுட‌ன் ம‌ற்றும் ராங்கியின் உத‌வியுட‌ன் வ‌ந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் தாக்குத‌ல‌ எதிர் கொள்ள‌ முடியாம‌ல் யாழ்ப்பாண‌த்தை இழ‌க்க‌ நேரிட்ட‌து , பெரிய‌ எதிர்ப்பு இல்லாம‌ அப்போது யாழ்ப்பாண‌த்தை சிங்க‌ள‌ ப‌டை கைப்ப‌ற்றிய‌து , எம் போராட்ட‌த்தில் அப்போது போதுமான‌ அள‌வு போராளிக‌ள் இல்லை , யாழ்ப்பாண‌த்தை கைப‌ற்ற‌ ப‌ல‌ ந‌ட‌வ‌டிக்கை சிங்க‌ள‌ம் எடுத்த‌து அத‌ போராளிக‌ளின்  எதிர் தாக்குத‌ல் மூல‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் பின்வாங்கிய‌து , 1995ம் ஆண்டு க‌ட‌சியில் சிங்க‌ள‌ ப‌டை எல்லா ப‌க்க‌த்தாலும் வ‌ர‌ எம்ம‌வ‌ர்க‌ளால் அவ‌ங்க‌ளின் திட்ட‌த்தை தாக்குத‌ல‌ எதிர் கொள்ள‌ முடியாம‌ல் போய் த‌மிழ‌ர்க‌ளின் கலாச்சார‌பூமி யாழ்ப்பாண‌ம் சிங்க‌ள‌வ‌ன் கையில் 😓 ,  

உந்த‌ தாக்குத‌ல் ந‌ட‌வ‌டிக்கையின் போது சின்ன‌னில் எங்க‌ளுட‌ன் விளையாடின‌ இந்த‌ அண்ண‌ன‌ இழ‌ந்த‌ நாங்க‌ள் , அப்ப‌ குன‌சிலி அண்ண‌னுக்கு 20 வ‌ய‌து இருக்கும் , எங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு அண்ண‌ன் மாதிரி , என்னை விட‌ 12 வ‌ய‌தில் மூப்பு ஆனால் எங்க‌ளை ந‌ல்லா பிடிக்கும் /

மிஞ்சி இருக்கிற‌து குன‌சிலி அண்ண‌னின் நினைவும் இந்த‌ப் ப‌ட‌மும்  தான் ,  க‌ன‌சிலி அண்ண‌னுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏

20200605-134352.png

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

அந்த காலத்தில் யாழில் வசித்தபோது  பண்ணை கடற்கரை, முனியப்பர் ஆலயம், முற்றவெளி, யாழ் கோட்டை போன்ற இடங்களுக்கு நண்பர்களுடன் செல்வது வழக்கம். சுமார் 45 வருடங்களின் பின் கடந்த வருடம் மீண்டும் கோட்டையின் உட்புறம் சென்று சுற்றிப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கோட்டையை நெதர்லாண்ட் நாட்டின் அரசு புனரமைத்தது பற்றி எனக்குள் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அவர்கள் கோட்டையின்  வெளிப்புற மதில்களை மட்டுமே செப்பனிட்டிருந்தார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது.

உட்புறம் கட்டிடங்கள் இடிந்து விழும் தறுவாயில் இருந்ததால் பார்வையாளர்களை தொலைவில் நின்று பார்வையிடும்படி அறிவித்தல் பலகையுடன் கயிற்றுவேலியும்  அமைக்கப்பட்டிருந்தது.  கோட்டைக்குள் அன்று(60, 70 களில்) இருந்த பல கட்டிடங்கள், தேவாலயம், சிறைச்சாலை மற்றும் தூக்குமேடை என்பன இன்று இல்லை. இடிந்த கட்டிடங்களில் இருந்து பெயர்த்து எடுத்த  இடிபாடுகளையும் கற்களையும் கோட்டையின் மத்தியில் இருந்த வெளியான இடத்தில் பார்வைக்கு அடுக்கி வைத்திருந்தார்கள்.

இப்போதும் சிறிய எண்ணிக்கையில் இராணுவம் அங்கு நிலைகொண்டிருந்தது. பல இரும்பு கொள்கலன்களை அடுக்கடுக்காக வைத்து இராணுவத்தினருக்கு தங்குமிடமும்  வழமையான இருப்பிட வசதிகளும் இருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது. பார்வையாளர்களில் 90 வீதமானவர்கள் தென்னிலங்கயை சேர்ந்தவர்களாகவே காணப்பட்டார்கள். 

கோட்டையின் உட்புறமாக அகழிக்கு சமாந்திரமாக நடந்து சென்று முனியப்பர் ஆலயத்தின் பின்புறத்தில் ஏறக்கூடியவாறு மதிலை உடைத்து நடை பாதை ஒன்றை அமைத்திருந்தார்கள். அதே சமயம் ஒரு வயோதிபர்  துவிச்சக்கர வண்டியில்  கோட்டையின் எங்கோ ஒரு மூலையில் இருந்து  உட்புறமாக கோட்டையை கடந்து பிரதான வாயில் வழியாக வெளியேறிசென்றதையும் அவதானிக்ககூடியதாக இருந்தது. காவலாளியை விசாரித்தபோது அவர் சொன்ன தகவலின்படி இராணுவத்தினர் தமது கனரக வாகனங்களை கோட்டையின் முன்பக்க வழியால் உள்ளே கொண்டு  செல்ல முடியாது என்பதால் கோட்டையின் பின்புறம் இருந்த அகழியை புல்டோசர் கொண்டு நிரவி வழி செய்திருந்தார்கள் என அறிந்தேன்.

இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த யாழ் கோட்டை புராதன சின்னம் என்ற அடிப்படையில் இப்போது தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் காலப்போக்கில் சிறிது சிறிதாக பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும் எனவும் அதற்காக விரைவில் கட்டணம் அறவிடப்படும் என்றும் அந்த காவலாளி தெரிவித்தார்.

இந்த கோட்டை இருந்த இடம் தெரியாமல் அன்றே தரைமட்டமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. இல்லையென்றால் புராதன சின்னங்கள் என சொல்லப்படும் இது போன்ற இடங்கள் அடிமைத்தனத்தின் சின்னங்களாக காலாதி காலத்துக்கு எமது மக்கள் மத்தியில் காட்சிப்படுத்தப்படுவதை  தவிர்க்கமுடியாது.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.