Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையுடன் கடலில் ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா ஆர்வம் தெரிவித்துள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடன் கடலில் ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா ஆர்வம் தெரிவித்துள்ளது.

[Tuesday May 29 2007 12:31:02 PM GMT] [bbc.com]

தமிழக முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை காலை புதுடில்லியில் சந்தித்துப் பேசிய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இத்தகவலைத் தெரிவித்தார்.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், இலங்கையுடன் கூட்டு ரோந்து மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், ஒருங்கிணைந்த ரோந்துப்பணியில் ஈடுபட முடியும் என்றும் தெரிவித்தார். அதற்கு இலங்கையின் கருத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

"விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம். எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் கடல் மற்றும் வான்வழித் தாக்குதல் திறன் பெற்றிருந்தாலும், அது இந்தியாவுக்கு கவலையளிக்கும் விடயம்" என்று இந்தக் கூட்டத்திற்கு பிறகு நாராயணன் தெரிவித்துள்ளார்.

கடல் புலிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒப்புக்கொண்ட அவர், இந்தியக் கடலோரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மீனவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தமிழக முதல்வரிடம் தாம் தெரிவித்ததாக நாராயணன் கூறியுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த கருணாநிதி, மீனவர் பாதுகாப்பு தொடர்பாக மீண்டும் பேச்சு நடத்த நாராயணன் நாளை மறுதினம் வியாழக்கிழமை சென்னை வர உள்ளதாகத் தெரிவித்தார்.

என்ன நாராயணா ?் இலங்கையிடம் லம்பா ஏதும் எமஉண்ட் வாங்கிவிட்டீர்களோ? என்ன பிச்சைக்காரத்தனம் இது :P :P

ஈழம் உருவாகுவதை விரும்பாத இந்தியாவின் சூழ்ச்சிகளில் மீண்டும் !!!றோ!!! தலை துக்கிறது. பார்ப்பணரின் கபட நாடகங்களில் அடுத்த கட்டம்…..

இதுக்குதானே மீனவ கடத்தல் நாடகம் செய்தவை

பன்னியோட கூடி இவை என்ன ...சேச்சே

கெட்ட கிரகங்கள்..

என்ன கொடுமை இது...

பல தடவை முயற்சி செய்த குள்ள நரித்திட்டம் ஒரு மாதிரி அரங்கேற முயற்சி....

முதலமைச்சர் கருணா நிதியும் பலியாகிவிட்டார்?

கடலில் கடத்தல் நாடகங்கள் நடத்தி நம்ப வைத்து நடக்கிறது.

தமிழ் நாட்டு மக்கள் உண்மையை புரிந்து உடனடியாக மறியல் போரட்டங்கள் தொடராக நடத்தி இத்திட்டம்

கைவிடும் வரை போராடவேண்டும்..

இல்லையேல் இலங்கை இந்திய படைகள் சேர்ந்து மேலும் தமிழ் மக்களுக்கு துன்பம் கொடுப்பார்கள்..

நாராயணன் அன்று தொடக்கம் தமிழருக்கு எதிராக செயற்படும் ஒரு மத்திய அரசின் ஏவலாலி. இவன் ஒரு மலையாளி.

கலைஞர் தான் இதற்கு முழுக்காரனம். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்களால் மட்டும் தான் இந்த திட்டத்தை நிறுத்தி. ஈழத்தமிழருக்கு எதிராக கருத்துக்கூறும் நாராயணனுக்கு வாய்பூட்டு போடுவார்

"விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம். எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் கடல் மற்றும் வான்வழித் தாக்குதல் திறன் பெற்றிருந்தாலும்இ அது இந்தியாவுக்கு கவலையளிக்கும் விடயம்" என்று இந்தக் கூட்டத்திற்கு பிறகு நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்த நாராயணனுக்கு பெருக்கு ஏற்ற வேலைதான். தங்கடை நாட்டிலேயே தங்கடை ஆதிக்கம் குறைந்து விடாமல் இருக்க சொந்த மக்களையே கொள்ளும் பார்ப்பணர்களில் இந்த நாராயணனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஈழத்து விடயத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே இவரின் பங்கு உள்ளது.

என்னதான் நடந்தாளும், செய்தாளும் அண்ணையின் காலத்தில் ஈழம் உருவாகுவதை எவராலும் தடுக்க முடியாது.

புலிகளை வலுவிழக்கச் செய்வதற்கு தென்னாசிய வல்லரசு இவ்வளவு தூரம் இறங்கி வந்து சில்லறைத்தனமான காரியங்களில் ஈடுபட்டுவது புலிகளின் வலிமையை இராஜதந்திர வல்லமையயும் எடுத்துக் காட்டுகின்றது.

உங்கள் சூழ்ச்சிகள் எல்லாம் தலைவரிடம் எடுபடாது.

உங்களின் சூழ்ச்சிகள், பொறிகளை எல்லாம் எப்படித் தலைவர் உடைந்தெறிந்து எங்கடை நிலங்களை மீட்கிறார் என்று கொஞ்ச காலம் பொறுத்திருந்து பாருங்கள்.

Edited by மின்னல்

இதுபற்றி தன்னிடம் டெல்லியில் ஒன்றும் கதைக்கவில்லை என்று கருணாநிதி சொன்னதாக வானொலி செய்தி ஒன்றில் கேட்டேன் எங்கப்பன் குதிருக்குள்இல்லை எனகிறாரோ

டெல்லிக்குஇவர் ஏன்போனார் கூட்டிகழித்துப்பார்த்தால் எல்லாம் விளங்கும்

கட்டையில போகேக்கையும் மண ஆசை பெண் ஆசை பொன் ஆசை உந்தக்கதிரை ஆசை எல்லாம் போகவே போகாதப்பா

  • கருத்துக்கள உறவுகள்

ஒருங்கிணைந்த கடல்ரோந்து நடவடிக்யை இந்தியா விரும்புகிறது - எம்.கே. நாராயணன்

சிறீலங்கா கடற்படையினருடன் பாக்கு நீரிணையில் ஒருங்கிணைந்த கடல்ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியா விரும்பியுள்ளதாக இந்தியப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் தமிழக முதல்வர் மு.கருநிதியுடன் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாக்குநீரிணையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு சிறீலங்கா கடற்படையுடன் ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ள தமது அரசாங்கம் விரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா கடற்படையினருடன் இணைந்த கூட்டுரோந்து நவடிக்கைக்கு நாம் தாயாராகவில்லை. இருந்தும் ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கையின் மூலமே தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்யமுடியும் என நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சில விடங்களை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு விளங்கப்படுத்தினேன். இதற்கு தமிழக முதல்வர் எதுவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை எனவும் எம்.கே நாராயணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருங்கிணைந்த கடல்ரோந்து பற்றி சிறீலங்காவிடமிருந்து பதிலை எதிர்பார்க்கின்றோம். கடற்புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் அச்சுறுத்தல் இல்லாத இடத்தில் நாம் ஏன் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை நாம் பயங்கரவாத அமைப்பாகவே கருதுகின்றோம். எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் வான்வழி மற்றும் கடற்வழியில் தமது ஆதிக்கத்தை செலுத்தும்போது அதன்மேல் அதிக கவனம் செலுத்துவோம் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை வழங்கு தொடர்ப்பில் அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களே கூடி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள் அவர் மேலும் தெவித்துள்ளார்.

-பதிவு

சிறீலங்கா அரசிடம் சரணாகதியடையும் இந்தியா

குடும்ப பிரச்சினையை சமாளிக்க முடியாமல் இருக்கும்

குரங்கும் காதைப்பொத்தி ஆமோதிக்குதாம்

உத சாட்டா வைத்து அரசியல் செய்யிறார் நாரதர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.