Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா? – சிவமோகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா? – சிவமோகன்

Sivamogan-720x450-300x188-1.jpg?189db0&189db0

 

கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா? என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (13) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த கேள்வியை எழுப்பியுள்ள அவர், தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து கட்சிகளாக பிரிந்தும் சுயேட்சைக்குழுக்களாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களுக்கு தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். அவர்கள் கட்டுப்பணத்தைக் கூட திரும்பப் பெற முடியாத அளவு மக்களால் நிராகரிக்கப்படுவார்கள்.

தமிம் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் பதவி மோகத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

அரசு செய்ய வேண்டிய வேலையை தமிழராக இருந்து கொண்டு இவர்கள் செய்வதால் இவர்கள் சிங்கள அரசின் நேரடி முகவர்களா என்று சந்தேகம் கொள்ளத் வைக்கிறது.

வன்னியில் 6 ஆசனத்திற்காக 30 சுயேற்சைக் குழுக்களும் 400 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இதில் கணிசமானவர்கள் அரசின் கைப்பொம்மைகளாக உள்ளவர்கள் வெற்றி பெற மாட்டோம் என்று தெரிந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே இவர்களது நோக்கம்.

இவர்களது சித்து விளையாட்டுக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்கறியும். இவர்களது எண்ணங்கள் ஒரு போதும் பலிக்கப்பபோவதில்லை. நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றும்.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள்” என தெரிவித்தார்.

https://newuthayan.com/கூட்டமைப்புக்கும்-மக்கள/

 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, உடையார் said:

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றும்

மடியினுள் சுமத்திரன் எனும் பெருச்சாளியை வைத்துக்கொண்டு கூத்தமைப்பை உடைக்க அரசு புதுசா ஆளை அனுப்புதாம் அறிவென்பதே இல்லையா இவர்களுக்கு ?

ஒரு சுமத்திரனை  வைத்து கூத்தமைப்பை துவம்சம் பண்ணியாச்சு  தமிழ்மக்களின் இனவழிப்பு கதையை அப்படியே அமுக்கி விட்டார்கள் காணமல் போனோர் அப்படி எண்டால் என்ன என்று கேட்க்க வைத்தார்கள் கருணா கருணா என்கிறார்கள் அவரைவிட 100 மடங்கு வேகத்தில் செல்கிறார் சுமத்திரன் .

முடிந்தால் என்னை தமிழ் தேசிய கூத்தமைப்பில் இருந்து நீக்கி காட்டுங்கள் என்று ஓப்பனா அந்தாள் கேட்க்கிறார்  உங்களால் முடியவில்லை சுமத்திரன் போகமாட்டார் ஏனென்றால் கூட்டமைப்பு  முழுமையா உடையாமல் அவர் வெளியில் போகமாட்டார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

மடியினுள் சுமத்திரன் எனும் பெருச்சாளியை வைத்துக்கொண்டு கூத்தமைப்பை உடைக்க அரசு புதுசா ஆளை அனுப்புதாம் அறிவென்பதே இல்லையா இவர்களுக்கு ?

ஒரு சுமத்திரனை  வைத்து கூத்தமைப்பை துவம்சம் பண்ணியாச்சு  தமிழ்மக்களின் இனவழிப்பு கதையை அப்படியே அமுக்கி விட்டார்கள் காணமல் போனோர் அப்படி எண்டால் என்ன என்று கேட்க்க வைத்தார்கள் கருணா கருணா என்கிறார்கள் அவரைவிட 100 மடங்கு வேகத்தில் செல்கிறார் சுமத்திரன் .

கிந்திய றோ சுமந்திரனை வைத்து விளையாடுகின்றது, யாழில் தூதரகம் திறந்ததே எமது தேசியத்தை சிதைப்பதற்பே பணம் பதவிகள், ஆசைகள் கொடுத்து 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

கிந்திய றோ சுமந்திரனை வைத்து விளையாடுகின்றது, யாழில் தூதரகம் திறந்ததே எமது தேசியத்தை சிதைப்பதற்பே பணம் பதவிகள், ஆசைகள் கொடுத்து 

யார் என்றாலும் தமிழ் தேசியம் சம்பந்தப்பட்ட ஓற்றுமையான கூட்டம் உருவாகுவதை விரும்ப மாட்டார்கள் தமிழதேசிய அங்கத்தவர்களுக்கு மூளை எங்கு போனது தேர்தல் வரும் காலங்களில் மட்டும் மூளை வேலை செய்யும் மற்றய நேரம்களில் சொல்ல வாயிலை வருது எழுத முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

வன்னியில் 6 ஆசனத்திற்காக 30 சுயேற்சைக் குழுக்களும் 400 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இதில் கணிசமானவர்கள் அரசின் கைப்பொம்மைகளாக உள்ளவர்கள் வெற்றி பெற மாட்டோம் என்று தெரிந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே இவர்களது நோக்கம்.

உங்களை அழிப்பதென்றே வெளிக்கிட்டு விட்டார்கள். நீங்கள் சும்மா எல்லாம் இனி ஓட ஏலாது.   இதற்கு உங்களின் அரசியல் வங்குரோத்து தன்மையே காரணம். உங்களின் திறமையற்ற நிலையை ஏற்றுக்கொண்டு களத்தில் இருந்து விலகுங்கள்.  அல்லது திறமையை காட்டி நிரூபியுங்கள். சும்மா வள வள என்று பேசி, மற்றவர் மீது பழி போட்டு தப்புவதை கைவிட்டு பிழைகளை திருத்துங்கள். மக்களுக்கு நேர்மையாய் நடவுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.