Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kadunayaka-1.jpg

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் திறப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வத்தளை, நீர்கொழும்பு உள்ளூராட்சிசபை பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “வௌிநாடுகளில் இருந்து  இலங்கையர்கள் அழைத்து வரப்படுவது  எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதிக்குள் நிறைவுக்கு கொண்டு வரப்படும்.

நாட்டுக்கு இன்னும் 20,000 பேர் வருகை தரவுள்ளனர். ஏற்கனவே 10,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த செயல்முறையை மேலும் விரைவுபடுத்துவோம்.

அத்துடன் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர், சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் நுழைவதில் கவனம் செலுத்தப்பட்டும்.

அந்தவகையில் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு, அவர்கள் பி.சி.ஆர் செய்து ஒரு அறிக்கையை கொண்டு வர வேண்டும்.

மேலும் அவர்களை, சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (எஸ்.எல்.டி.டி.ஏ)  உன்னிப்பாக கண்காணித்து வரும். அவர்கள் எங்கு சென்றாலும் நாங்கள் அவர்களை கண்காணிப்போம்” என குறிப்பிட்டார்.

http://athavannews.com/கட்டுநாயக்க-சர்வதேச-விம-7/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான விமான சேவைகளை ஜுலை நடுப்பகுதியில் மீள ஆரம்பிக்கத் தயார்

image_c66b109939.jpg
 

சர்வதேச பிரயாணிகளுக்கு, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், இலங்கை மீளத்திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே, இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக, விமான சேவைகள் அறிவித்துள்ளன.  

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன், கடந்த வாரம் இடம்பெற்ற பிரயாணத் துறைசார் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது, கலந்து கொண்டிருந்த சர்வதேச விமான சேவைகளின் அங்கத்தவர்கள், தாம் இலங்கைக்கான விமான சேவைகளை ஜுலை 15ஆம் திகதி, மீள ஆரம்பிப்பதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம், இலங்கைச் சுற்றுலா சபை ஆகியன அண்மையில் அறிவித்திருந்தன. 

கொவிட்-19 பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில், இந்த நோய்ப் பரவல் மேலும் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளைப் பின்பற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தேசிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றுடன் கலந்துரையாடி, முறையான பாதுகாப்பு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் இந்தச் சந்திப்பில் தெரிவித்திருந்தார். 

கொவிட்-19 தொற்றுப் பரவலுடன், தமது எல்லைகளை மூடியிருந்த பல்வேறு நாடுகள், கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகள், செயன்முறைகளைத் தொடர்ந்து, தமது எல்லைகளைப் படிப்படியாக மீளத்திறந்துள்ளன. 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், பயணிகள் பயன்பாட்டுக்கு மீளத்திறக்கப்பட்ட பின்னர், நாட்டுக்குள் வரும் விமான சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படாமல், உள்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் முதலில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது
 

http://www.tamilmirror.lk/வணிகம்/இலங்கைக்கான-விமான-சேவைகளை-ஜுலை-நடுப்பகுதியில்-மீள-ஆரம்பிக்கத்-தயார்/47-251965

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிற்போடப்பட்டது இலங்கை அரசின் திட்டம்..

kadunayaka-1.jpg 

கொரோனாவினால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர்செய்யும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் முதலாம் திகதி திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான எண்ணம் இருந்த போதும், சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பும் உலக சுகாதார ஸ்தாபனமும் அதற்கான அறிவுறுத்தல்களை வழங்கவில்லை என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகளை உள்வாங்குவது, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலான விதிமுறைகளை உலக சுகாதார ஸ்தாபனம் தௌிவுபடுத்த வேண்டும் எனவும் அதனை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜூலை மாதத்தில் அவர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார்களாயின், ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விமான நிலையத்தை திறக்க முடியும் என ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்தார்.

இதேவேளை, தொற்றுநோய் பரவும் அபாயம் குறித்த விழிப்புணர்வுடன் சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் செனால் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கொரோனா தொற்று நாட்டில் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் அவ்வாறு கூறினாலும் ஐரோப்பிய சங்கம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்வாங்கப்படவில்லை. அவர்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட 15 நாடுகளை அறிவித்துள்ளனர்.

சேர்பியா, தாய்லாந்து, டியூனீசியா, அல்ஜீரியா, உருகுவே, ருவாண்டா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 15 நாடுகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த நாடுகளில் இருந்து வருகை தருவோருக்கு எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

https://www.vanakkamlondon.com/பிற்போடப்பட்டது-இலங்கை-அ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.