Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா? – உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா? – உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி

UmaChandra-Prakash.jpg

வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்னர் 87 ஆயிரம் பேர் விதவைகளாக இருக்கின்றார்கள் என இன்னும் 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த உமாச்சந்திரா பிரகாசிடம் வடகிழக்கில் இருக்கும் விதவைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் முடிவடைந்து இவ்வளவு நாள்கள் கடந்துவிட்டது வடக்கு கிழக்கில் விதவைகள் 87 ஆயிரமாக இருக்குமா என்பது ஒரு கேள்வி. அதில் எந்தனை பேர் இறந்துள்ளார்கள், எத்தனை பேர் தொடர்ந்து தங்களுடைய குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்கின்றார்கள் என்ற ஒரு கேள்வி இருக்கின்றது.

தற்போது 10 வருடம் கடந்துவிட்டதற்கு பின்னர் எத்தனை பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று ஒரு கேள்வியும் இருக்கின்றது. குறிப்பாக யுத்தத்தின் பின்னர் புற்று நோய், சிறுநீரக நோய் மற்றும் இருதய வருத்தம் இவ்வாறான நோய்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதற்கு மேலதிகமாக முள்ளந்தண்டு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டுள்ளார்கள். நாங்கள் அற்று சென்ற ஒரு கிராமத்திலே 22 வயது இளைஞன் முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கின்றான்.

யுத்தம் நிறைவடையும் போது அவருக்கு 12 வயது, இந்த கணக்கெடுப்புகள் எல்லாம் நீங்கள் சொல்லுகின்ற கணக்கெடுப்புகளில் உள்வாங்கட்டுள்ளதா. இன்னுமொரு விடயம் இந்த 10 வருடத்தில் மக்கள் ஆணை பெற்றவர்கள்தான் அதற்கான சரியான தரவுகளை கொடுக்க வேண்டும்.

நான் பார்த்த அளவிலே யுத்தம் நிறைவடைந்ததுக்கு பிறகு அந்த மக்கள் வாழ்கையிலே விரத்தியுற்றவர்களாக, வாழவேண்டும் என்ற ஒரு பிடிப்பு இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு முதலாவதாக உளவியல் சார்ந்த ஒரு ஆலேசனைகளை அல்லது வழிகாட்டல்களை வாழ வேண்டும் என்ற பிடிப்பை நாங்கள் அவர்களுக்கு கொடுக்க வேன்டும்.

இரண்டாவதாக இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கை, கால்கள் ஊனமானவர்களுக்கு அல்லது இழந்தவர்களுக்கு சர்வதேச ரீதியிலே நாங்கள் அவர்களுக்கான செயற்கை கை, கால் வசதிகளை பெற்றுக்கொடுக்க வேன்டும்.

அவர்களுக்கு வாழ வேன்டும் என்ற ஒரு நம்பிக்கையை கொடுக்காவேண்டும். இன்னும் பலருக்கு இருக்கக் கூடிய பிரச்சினை சொந்த காணி இல்லாமல் வீட்டு திட்டங்களை பெற முடியாமல் இருக்கின்றார்கள்.

எனவே உங்களுக்கு தெரியும் சாதாரணமாக குழந்தைகளோடு வாழ்கின்ற பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலிலே, வடக்கிலோ கிழக்கிலோ தமிழர் வாழுகின்ற இடங்களிலே குழந்தைகள் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

பொண்களுக்கு எதிரான வண்முறைகள் இடம்பெறுகின்றது இது எல்லாத்துக்கும் தேவையான ஒரு விடயம் என்னவென்றால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான இருப்பிடம் இல்லாமல் இருக்கின்றது. இது சம்பந்தமாக அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தக் கூடியவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்தார்களா இல்லையா என்பது தெரியாது.

ஆனால் என்னை பொறுத்த வரையில் என்னுடைய அரசியல் பயனத்துக்கு அப்பால் அதற்கான ஒரு தேடலுக்கு ஒரு முடிவை கொடுக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கின்றது. அது தொடர்பாக சஜித் பிரேமதாசவும் தகுந்த ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றார்” என தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/இன்னும்-25-வருடங்களுக்கு-ப/

 

1 hour ago, உடையார் said:

25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா? – உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி

கொலைகாரர்களுடன் இணைந்து தமிழின அழிப்புக்கு முண்டு கொடுக்க மட்டுமே உங்களைப் போன்ற போக்கற்ற அரசியல் கோமாளிகளால் முடியும்.

வரும் தேர்தலில் தமிழின படுகொலைகளுக்கு பல்வேறு விதங்களில் பங்களித்த சகல சிங்கள கட்சிகளின் எடுபிடிகளாக தமிழர் பகுதிகளில் களம் இறங்கியுள்ள சகல வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காமல் விடுவதன் மூலம் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டங்களுக்கு பலம் சேர்க்க முடியும்.

தமிழரிடம் கொள்ளையடித்த செல்வத்தில் சிறு பகுதி தேர்தல் காலத்தில் இந்த எடுபிடிகளால் கொடுக்கப்படும். அவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு விஜயகலா மகேஸ்வரன் உட்பட சகலரும் தோற்கடிக்கப்பட வேண்டியவர்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.