Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாள் வாழ்விலே... வர வேண்டும் நேரிலே..

 

  • Replies 2.9k
  • Views 225.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 இந்த பூவிலே ஒரு காலத்தில்
தனம் தேடும் நோக்கத்தில் திசை போகும் நாளில்
நீ காமரா போர்ச்சுகீஸ் தேசத்தார்
கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய்
சொல்லொணாததாய் புயலும் வீச
காணுணாததாய் இருளும் சூழ
மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோமென்று
தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா
அன்னை தஞ்சம் தனை தேடினர் - குளோரியா

1. அன்னையைத் தாம் நினைந்தே மாலுமிகள் அழுதார்
பிழைப்போமேல் உமக்காய்
ஒரு கோவிலைச் செய்வோமென்றார்
மாதாவாம் மேரியின் உன்னத அருளால்
கரை சேர்ந்திட நொடியில் கண்டார்

2. மீண்டவர் யாவருமே மேரியம் மாதாவை
கண்டு வணங்கினர் தாம்
மேலும் நன்றி நவின்றனர் தாம்
மாதாவாம் மேரியின் திருச்சந்நிதியை
அவராலயமாகப் பணிந்தார்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளாம் நாளாம் புனித நாளாம்
மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம் (2)

அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் (2)
அருளான கன்னித் தாயாரின் நாளாம்
ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம் (2) -நாளாம் நாளாம்

தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம் (2)
தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்
ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம் (2) -நாளாம் நாளாம்

தெய்வீக அன்போ கன்னியின் வழியாய் (2)
தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்
மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம் (2) -நாளாம் நாளாம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்

தென்னை உயர பனை உயர
செந்நெல் உயர்ந்து கதிர் பெருக
மின்னும் தாழை மடல் விரியும்
வேளாங்கண்ணி எனும் ஊராம்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்

பூவின் மணமும் புதுவெயிலின்
பொலிவும் சுமந்த இளம்தென்றல்
ஆவும் கன்றும் அழைக்கின்ற
அன்பு குரலில் விளையாடும்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்

பொன்னேர் பிடித்த நல் உழவர்
பூமித் தாயின் அருள் கொண்டார்
தண்ணீர் இன்றி மீனவரும்
தாவும் கடலின் நிதி கண்டார்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்

தேனும் கலந்த தினைமாவும்
தீரா இன்ப சுவை சேர
மானின் விழியாம் மனைவேணி
மாறா காதல் நெறி நின்றாள்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
என் உள்ளத்தில் எழுகின்ற இறை இயேசுவே
நினைவாக உணவாகி உயிராகியே
நீங்காத நிழலாகும் பேரின்பம் நீ - 2
சபமப கமரிக சரிசநி - 2
சாநி பமபநி சச
சச நிசச நிரிரிரிச நிசநி
சாநி பமபத பப
பம பபபம தத பமக


1. என் தாயின் கருப்பையில் உருவாகும் முன்னாலே
நீதானே என்னை நினைத்தாய் - 2
என் பெயரை உன் கையில் அழியாத நினைவாக
நீதானே பொறித்து வைத்தாய்
எனை விட்டு விலகுவதில்லை நீ
என்னை கைவிடுவதுமில்லை
கண் இமையாக சிறகாலே அணைத்தென்னை காக்கின்ற
உனை பாடும் பொழுதெல்லாம் ......................
பபபத பமகரி சரிசரிநிச
சரிகமப தப மகரி கமப - 2
மபதநிச கரிசநி ரிசநித பதநிச
கரிசநித ரிசநிதப சநிதபம
தபநித சரிநிச
நிசகரி தநிரிநி தபமகரி
ரிரிககமமதத ககமமததநிநி
மமதத நிநிரிரி சநிதப


2. சுமையாலே மனம் சோர்ந்து அழுகின்ற நாளெல்லாம்
ஆறுதல் உன் வார்த்தைகள் - 2
இமை காக்கும் விழிபோல நிதம் சூழ்ந்து எனை காக்கும்
உன் வாழ்க்கை நினைவுகள்
பயணத்தின் பாதைகளில் நான்
பயம் கொண்ட வேளைகளில்
வழி துணையாக துயர் போக்கும்
மருந்தாக வருகின்ற

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்
தொல்லைமிகு இவ்வுலகில் துணை யேசுவே

ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும்

தந்தை தாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேதிதர்
சந்தோட சகாலயோத சம்பூரண பாக்கியமும்

கவலையில் ஆருதல்லும் கங்குலிலென் ஜோதியும்
கஷ்ட நோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழதமும்

போதகப் பிதாவும் என் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென தோழனும்

அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்

ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயேசு அழைக்கிறார்
பல்லவி 
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார் 

சரணங்கள்
1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் 
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் 
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் --- இயேசு

2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார் 
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே --- இயேசு

3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் --- இயேசு 

4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே --- இயேசு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோகை மயில்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லை வேலவா நல்லை வேலவா
நெஞ்சம் நெகிழ உனைப் பாடவா
வர்ண சண்முகா வர்ண சண்முகா
உந்தன் மேலே மலர் தூவவா (2)

அகிலாளும் சரவணா உந்தன் சந்நிதி
மருவும் அடியவர் கோடியே
அலங்காரக் கந்தனே உந்தன் பாதமே
தீண்ட எம்துயர் தீருமே...

தோகைமயிலுடன் சேவற்கொடியுடன்
வர்ண எழில் உரு காணவே
காந்தள் பூச்சரம் கையில் ஏந்தியே
காலம் கரைகிறோம் கந்தனே...

யமுனாரி அழகில் உன் வர்ணம்
முருகா
தேர் வீதி கமிழும் உன் வாசம்
திரு முருகா முருகா

அகம் நீங்கா நல்லூர் பதி ஏறி
முருகா
அழைப்போர்க்கு அருளும் வரமானாய்
திரு முருகா முருகா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தாளாம் அபிராமியை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாளிலே மக்கா நகரம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்களை ஏறெடுப்பேன்
பல்லவி
கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

அனுபல்லவி
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் --- கண்களை

சரணங்கள்
1.காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்,
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் --- கண்களை

2.பக்க நிழல் அவரே -- எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா- து
முக்காலம் நின்றென்னை நற்காவல் புரியவே --- கண்களை

3.எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் --- கண்களை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கபாலம் சூலம் - பீஷண பைரவர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்தர்களே மலை மேலே என் ஐயப்பன் சந்நிதானம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகன் முருகன் முத்தழிம் குமரன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் நான் உன்னருளை
உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான் உன்னருளை
உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான்......

காணாப் பேரோளியே கல்புக்குள் நிறைந்தவனே
ஏனென்னை மறந்துவிட்டாய்,
ஏங்கியேத் துடிக்கவைத்தாய்
தீனோர் தவப்பொருளே சிந்தனைப் பொக்கிஷமே
தீனோர் தவப்பொருளே சிந்தனைப் பொக்கிஷமே
வானோர்த் தொழுபவனே வள்ளளலே ரஹ்மானே

உலகத்தில் நான் உன்னருளை
உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான்.....

ஆயிரம் கோடிகளாய் அடியார் உனக்கு உண்டு
ஆயினும் எனக்கு இங்கே அதிபதி நீதானே
அர்ஷினில் அமர்ந்தவனே ஆலத்தைப் படைத்தவனே
அர்ஷினில் அமர்ந்தவனே ஆலத்தைப் படைத்தவனே
புர்ஷிலும் குளிர்ந்தவனே கோமான் ரஹ்மானே

உலகத்தில் நான் உன்னருளை
உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான் ........

அருள் மழைப் பொழிபவனே, ஆகிரத் அதிபதியே
இறுதி நபி இதழில் எழில் மறைப் பொழிந்தவனே
தேவைகள் அற்றவனே தேடுது என்மனமே
தேவைகள் அற்றவனே தேடுது என்மனமே
காவல் நீ யாஅல்லாஹ் கண்ணே ரஹ்மானே

உலகத்தில் நான் உன்னருளை
உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான்....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதரின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்

1. பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவுமானிரே

2. இளைபாறுதல் தரும் தேவனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே
ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே

3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன்

4. உந்தன் சித்தம் செய்ய அருள் தருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்திலே நீயிருக்க 
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளி மலையான் மகனே வேலைய்யா....
என் வாழ்வு வளம்காண
கடைக்கண் பாரய்யா 
உள்ளத்திலே நீயிருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா..என் வாழ்வு வளம்காண
கடைகண் பாரய்யா..
பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
வெள்ளம் என அருள்படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே
இன்பம் வந்து என்னை சேர்ந்துகொள்ள தேடுமே..
உள்ளத்திலே நீயிருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா.. என் வாழ்வு 
வளம் காண கடைகண் பாரய்யா
தென்பழனி மலைமேலே 
தண்டபாணி கோலத்திலே
கண்குளிர கண்டுவிட்டால் போதுமே
என்றும் கருத்தில் உந்தன் 
அருள்வடிவம் தோன்றுமே...
தென்பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண்குளிர கண்டுவிட்டால் போதுமே
என்றும் கருத்தில் உந்தன் 
அருள்வடிவம் தோன்றுமே. ..
உள்ளத்திலே நீயிருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா... என் வாழ்வு 
வளம் காண கடைகண்
பாரய்யா...
ஆடிவரும் மயில்மேலே 
அமர்ந்து வரும் பேரழகே
நாடி உன்னை சரணடைந்தேன்
கந்தைய்யா....வாழ்வில் நலம்
அனைத்தும் பெற அருள்வாய்
முருகைய்யா.....
உள்ளத்திலே நீயிருக்க 
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா ...
என் வாழ்வு வளம் காண
கடைக்கண் பாரய்யா!!!!!!!!!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவில் கருவாகி..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலத்தையும் நடத்தும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....

கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

 

இன்னும் பற்பல நாளிருந்தாலும்

இக்கணந்தனிலே இறந்தாலும்
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துழன்றாலும்

       (பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
 நமச்சிவாயத்தை நான் மறவேனே

       (பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

நமச்சிவாயத்தை நான் மறவேனே

நமச்சிவாயத்தை நான் மறவேனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்தடதா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருள்ளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழு : ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர
ஹர மஹாதேவ்

குழு : ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர
ஹர மஹாதேவ்

குழு : ஓம் பைரவ ருத்ராய
மஹாருத்ராய காலருத்ராய
கல்பந்த ருத்ராய வீர ருத்ராய
ருத்ர ருத்ராய கோர ருத்ராய
அகோர ருத்ராய மார்தாண்ட
ருத்ராய அண்ட ருத்ராய
ப்ரமாண்ட ருத்ராய சண்ட
ருத்ராய பிரசண்ட ருத்ராய
தண்டருத்ராய சூர ருத்ராய
வீரருத்ராய பவ ருத்ராய பீம
ருத்ராய அதலருத்ராய விதல
ருத்ராய சுதல ருத்ராய மஹா
தலருத்ராய ராசதலருத்ராய
தலதலருத்ராய பாதாளருத்ராய
நமோ நமஹ:

ஆண் : ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம் ருத்ர
நாமம் பஜே ஹம்

குழு : ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம் ருத்ர
நாமம் பஜே ஹம்

ஆண் : வீரபத்ராய அக்னி
நேத்ராய கோர சம்ஹாரகா
சகல லோகாய சர்வ பூதாய
சத்ய சாக்ஷாத்கரா

குழு : சம்போ
சம்போ ஷங்கரா

ஆண் : ஆஆ ஹா
ஓம் சிவோஹம் ஓம்
சிவோஹம் ருத்ரநாமம்
பஜே ஹம்
குழு : பஜே ஹம்

குழு : ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர
ஹர மஹாதேவ்

குழு : நமஹ சோமயா
சா ருத்ராய சா நமஸ்தமராய
சருணய சா நம ஷங்கயா சா
பஷுபட்டாயே சா நம உக்ராய
சா பீமாய சா நமோ அக்ரேவதாய
சதுரே வதாய சா நமோ ஹந்த்ரே
சா ஹனியசே சா நமோ வ்ருக்ஷேபியோ
ஹரிகேசிபியோ நமஸ்தராய நமஸ்ஷம்பவே
சா மயோபவேச்ச நமஷங்கராய சா மயஸ்கராய
சா நமஷிவாய சா ஷிவதாரய சா

ஆண் : அண்டப்ரமாண்ட
கோட்டி அகிலபரிபாலனா
குழு : பூரண ஜகத்காரனா
சத்யதேவ தேவப்ரியா

ஆண் : வேத வேதார்த்த
சாரா யக்ன யக்னோமயா
குழு : நிஷ்சலா துஷ்ட
நிக்ரஹா சப்தலோக
சம்ரக்ஷனா

ஆண் : சோம சூர்ய
அக்னி லோச்சனா
குழு : ஷ்வேதரிஷப
வாஹணா
ஆண் : சூலபாணி
புஜங்க பூஷணா
குழு : திரிபுர நாச நர்த்தனா
ஆண் & குழு :யோமகேஷ
மஹாஸேன ஜனகா பஞ்சவர்த்த
பரசு ஹஸ்த நமஹ பஞ்சவர்த்த
பரசு ஹஸ்த நமஹ:

ஆண் : ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம் ருத்ர
ரூபம் பஜே ஹம்
குழு : பஜே ஹம்

குழு : ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம் ருத்ர
நாமம் பஜே ஹம்
பஜே ஹம்

ஆண் : கால த்ரிகால
நேத்ர த்ரிநேத்ர சூல
திரிசூல தாத்ரம்

ஆண் : சத்யப்ரபாவ
திவ்யப்ரகாஷ மந்த்ர
ஸ்வரூப மாத்ரம்

ஆண் : நிஷ்ப்ரபஞ்சாதி
நிஷகலந்கோஹம் நிஜ
பூர்ன போதஹம்ஹம்
கத்யகாத்மஹம்
நித்யப்ரமோஹம் ஸ்வப்ன
கஸோகம்ஹம்ஹம்

ஆண் : சட்சித்ப்ரமானம்
குழு : ஓம் ஓம்
ஆண் : மூலப்ரமேயம்
குழு : ஓம் ஓம்
ஆண் : அயம் ப்ரம்ஹஸ்மி
குழு : ஓம் ஓம்
ஆண் : அஹம் ப்ரம்ஹஸ்மி
குழு : ஓம் ஓம்

குழு : கன கன கன
கன கன கன கன கன
சஹஸ்ர கண்ட சப்த
விஹரகி

குழு : டம டம டம டம
டும டும டும டும
சிவடமருக நாத
விஹரகி

ஆண் : ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம் ருத்ர
ரூபம் பஜே ஹம்
பஜே ஹம்

ஆண் : ரூ கருணா
மாயோ சகா

ஆண் : அண்டப்ரமாண்ட
கோட்டி அகிலபரிபாலனா
குழு : பூரண ஜகத்காரனா
சத்யதேவ தேவப்ரியா

ஆண் : வேத வேதார்த்த
சாரா யக்ன யக்னோமயா
குழு : நிஷ்சலா துஷ்ட
நிக்ரஹா சப்தலோக
சம்ரக்ஷனா

ஆண் : சோம சூர்ய
அக்னி லோச்சனா
குழு : ஷ்வேதரிஷப
வாஹணா
ஆண் : சூலபாணி
புஜங்க பூஷணா
குழு : திரிபுர நாச நர்த்தனா
ஆண் & குழு :யோமகேஷ
மஹாஸேன ஜனகா பஞ்சவர்த்த
பரசு ஹஸ்த நமஹ

ஆண் : { ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
குழு : ருத்ரநாமம்
பஜே ஹம் பஜே ஹம் } (2)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா...
மரணத்தின் தன்மை சொல்வேன்...
மானிடர் ஆன்மா மரணமெய்தாது...
மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய்
மேனியைக் கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்து தான் தீரும் ஓர் நாள்... ஆ... ஆ...
என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்...
துணிந்து நில் தர்மம் வாழ... ஆ...
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்...
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக
இக்களமெலாம் சிவக்க வாழ்க... ஆ... ஆ... ஆ...
பரித்ராணாய சாதூனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னையர் திலகமே... அண்ணல் நபி இதயமே

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.